சோஷலிச நாடாக இருந்த சோவியத் ரஷ்யாவில் ‘மதம்’ எப்படி இருந்தது?

(Rathan Chandrasekar)

மனித நம்பிக்கைகளுக்கு எதிராக சோவியத் அரசியல் சட்டம் எந்தக் குற்றமும் இழைக்க அனுமதிக்கவில்லை. மக்கள் நாத்திகராகவோ கடவுள் நம்பிக்கை உள்ளவராகவோ இருக்க உரிமை அளிக்கப்பட்டிருந்தது.
சோவியத் அரசு வழிபாட்டு சுதந்தரத்தை பிரகடனம் செய்து அதற்கு உத்தரவாதம் அளித்துள்ளது. அதற்கு குந்தகம் ஏற்படுத்தினால் சட்டப்படி தண்டனை உண்டு.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் திடீர் திருத்தம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்கும் இடமாக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு ஆகியன பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. தடுத்து வைக்கப்படும் காலம் வரையிலும் கிருலப்பனையிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவிலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலக்கம் 145, கிருலப்பனை அவன்யூ, கொழும்பு-5 கிருலப்பனை பொலிஸ் பிரிவு ஆகிய இரு இடங்களிலேயே இவ்வாறானவர்கள் தடுத்துவைக்கப்படுவார்கள் என்றும் விசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஓய்வுடன் நாமல் பிரதமர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அரசியலிலிருந்து முழுமையான ஓய்வு பெற்றதன் பின்னர், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பிரதமராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், அந்த தகவலை, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல , இன்று (08) நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியின் போது நிராகரித்துவிட்டார்.

கேரளாவில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிப்பு

கேரளாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஜூன் 9 ஆம் திகதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. கொரோனா பரவல் கட்டுக்குள் இல்லை என்பதால் ஜூன் 16 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டதாக நேற்று முதலமைச்சர் பினராயிவிஜயன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

ஹாட்ரி இஸ்மாயில் (Qadri Ismail) காலமானார்!

(Maniam Shanmugam)

இலங்கையின் பிரசித்தி பெற்ற ஆங்கில மொழி ஊடகவியலாளரும், அமெரிக்காவின் மின்னெஸோரா (Minnesota) பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஹாட்ரி இஸ்மாயில் திடீரென காலமான செய்தி வந்து கிடைத்துள்ளது.அவரைப் பற்றி நான் ‘தேனீ’ இணையத்தளத்தில் புலிகளின் வதை முகாமில் எனது அனுபவங்கள் பற்றி எழுதிவந்த கட்டுரைத் தொடரில் 23.09.2012இல் எழுதிய குறிப்பைக் கீழே தந்துள்ளேன். அவரது மறைவுக்கு எனது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் குறையும் கொரோனா

தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது.இதேவேளை, சென்னையில் 24 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 75,365 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 21,410 பேருக்கு கொரோனா உறுதியானதெனக் கூறப்பட்டு உள்ளது.

யாழ்ப்பாண நூலக எரிப்பின் நாற்பதாண்டுகள்: கற்றுக் கொள்ளாத பாடங்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு, 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் அதன் அவலத்தை, நாங்கள் ஒப்பாரியாக ஆண்டுதோறும் நினைவுகூர்ந்தபடி கடத்துகிறோம். திரும்பிப் பார்க்கையில் இந்த நூலகமும் அதன் எரிப்பும் அதைத் தொடர்ந்த சிதைவும், வலி நிறைந்த கசப்பான உண்மை ஒன்றைச் சொல்கின்றன.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் மேலும் 814 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கையிட்டுள்ளது. அந்தவகையில், இன்று 3,094 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோரின் எண்ணிக்கை 202,357ஆக அதிகரித்துள்ளது.  

நாக்கு சுட்டு சேர்க்கும் முட்டாள்தனம்

நாவுக்கு ருசியாக சாப்பிடுவதற்கு ஒன்றுமே கிடைப்பதில்லை, அசைவத்தை கண்டு பல நாள்களாகின்றன என புலம்பிக்கொண்டிருப்போர் இருக்கையில், இருப்பதை வைத்து சமாளித்து வாழ்க்கையை நகர்த்துவோரும் இருக்கத்தான் செய்கின்றனர். இன்னும் சிலர், நாக்கு செத்துவிட்டது என்பர்.