21/4 தாக்குதல்: மீண்டும் விசாரணைக்கு வருகிறது வழக்கு

உயிர்த்த ஞாயிறு அன்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் கடமையை இழந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு திங்கட்கிழமை (28) உத்தரவிட்டது. இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் நாமல் பலல்லே மற்றும் முகமது இர்ஷதீன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.