போக்குவரத்து சபைக்கு 541 புதிய நியமனங்கள்

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இதற்காக புதிய ‘தேசியக் கொள்கை’ ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.