மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்காக விசேட பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.