(தமிழ்ப் பிரபா)
கலைஞரைப் பற்றி இங்கே எழுதக்கூடிய நிதானமான மனச்சூழல் இப்போதுதான் கிடைத்தது. கலைஞர் செய்த முக்கியமானதொரு காரியமாக என்னளவில் நினைப்பது, ‘மெட்ராஸ்’ கூவத்தை ஒட்டி வாழ்ந்த குடிசைப்பகுதி மக்களுக்கு ஹவுசிங் போர்டு கட்டிக் கொடுத்தது. ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கு முன் ‘குடிசை மாற்று வாரியம்’ என்று அவர் தொடங்கிய ஹவுசிங்போர்டு திட்டம் அடித்தட்டு மக்களின் வாழ்வியலில் மிகப்பெரிய உளவியல் பலத்தை சேர்த்தது. கலாசார மாற்றத்தைக் கொண்டுவந்தது. தங்களிடையே இப்படியொரு மாற்றத்தை நிகழ்த்திய கலைஞரையும் மக்கள் இன்றளவும் விட்டுக் கொடுத்ததில்லை.