புறப்படும் புதுப் புரளிகள்: ‘பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்’

இறுதி யுத்தத்தின் போது மரணமடைந்து விட்டதாகக் கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரும், கரும்புலிகள் அமைப்பின் கட்டளைத் தளபதியுமான பொட்டு அம்மான் என்றழைக்கப்படும் சண்முகலிங்கம் சிவசங்கரன், மறைந்திருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

(“புறப்படும் புதுப் புரளிகள்: ‘பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்’” தொடர்ந்து வாசிக்க…)

துறைமுக நகர் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி

கொழும்பு துறைமுக நகர்வேலைத் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் அங்கீகாரம் அளித்திருப்பதை சீன தொடர்பாடல் கட்டுமான துணை நிறுவனம் நேற்று உறுதி செய்தது. இதேவேளை பரஸ்பர நன்மையளிக்க கூடிய தீர்வை நோக்கியதான இலங்கை அரசாங்கத்தின் நேர்மறைவான ஒருபடி முன்னோக்கிய கடப்பாடுகளையும் மேற்படி நிறுவனம் பாராட்டியுள்ளது.

(“துறைமுக நகர் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி” தொடர்ந்து வாசிக்க…)

187 கிலோ மன்னாரில் கேரள கஞ்சாப்பொதிகள் மீட்பு

மன்னார் -சிலாபத்துறை, முள்ளிக்குளம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 187 கிலோ கேரளா கஞ்சாப்பொதிகளை மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுக் காலை(16) இடம்பெற்றது. மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மாவட்ட மதுவரி திணைக்கள பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் சிலாபத்துறை கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் நடத்தியுள்ளனர்.

(“187 கிலோ மன்னாரில் கேரள கஞ்சாப்பொதிகள் மீட்பு” தொடர்ந்து வாசிக்க…)

பிரதமரின் குற்றச்சாட்டை மறுக்கிறார் மகிந்த

எனது அரசாங்கத்தின் வெளிப்படுத்தப்படாத கடன்களும் கடன் பொறுப்புகளும் இப்போது மட்டுமே வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவிக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை அறிக்கையொன்றை ராஜபக்ஷ விடுத்திருக்கிறார். அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
வங்கிகளுடன் அவை நடவடிக்கைகளில் தாமாகவே செயற்படுகின்றன. அரச நிறுவனங்களினால் கடன் பெற்றுக் கொள்ளப்படுகின்றமை பாராளுமன்றத்தின் சம்பந்தப்பட்ட சட்டங்களின் மூலமே நிருவகிக்கப்படுகிறது.

(“பிரதமரின் குற்றச்சாட்டை மறுக்கிறார் மகிந்த” தொடர்ந்து வாசிக்க…)

சிரியாவிலிருந்து ரஷ்யப் படைகள் வெளியேறும்

சிரியாவிலிருந்து ரஷ்யப் படைகளை வெளியேற உத்தரவிட்டுள்ளதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார். சிரிய முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான ஐ.நா சபையினால் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்த திங்கட்கிழமையன்று, இரவு நேரத்திலேயே இந்த அறிவிப்பு விடுவிக்கப்பட்டது.

(“சிரியாவிலிருந்து ரஷ்யப் படைகள் வெளியேறும்” தொடர்ந்து வாசிக்க…)

ஏழரை மணித்தியால மின்வெட்டு

எதிர்வரும் இரு நாட்களில், நாளொன்றுக்கு ஏழரை மணித்தியாலம் என்ற அடிப்படையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த மின்வெட்டானது இரண்டு கட்டங்களாக இடம்பெறும் என்று தெரிவித்த அமைச்சு, காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் கூறியது.

மாகாணசபை அமர்வில் பிள்ளையான்

இன்று (15) இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வில், மாகாண சபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார். திருகோணமலை பேரவைச் செயலகத்தில் இடம்பெற்ற அமர்வில் இன்றையதினம் (15) இடம்பெற்ற அமர்வில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன், சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அழைத்து வரப்பட்டார்.

குமார் குணரத்னத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியற் குழு உறுப்பினர் குமார் குணரத்னத்தை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம், இன்று (14) உத்தரவிட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டப்பட்டிருந்த இவர், கேகாலை, அருகுருவெல பகுதியில் வைத்து நவம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு இன்று வரை (14) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இதுவரை தொடர்ச்சியாக 151ஆவது நாளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் நாடுகளிலிருந்த பினாமிகளின் சொத்துக் குவிப்பு வியாபாரம் ஆட்டம்காண ஆரம்பித்தபோது

மகிந்தவிற்கு பின்னர் ஆட்சியிலமர்ந்த மைத்திரி அரசுடன் ஊடல் கொண்ட விக்னேஸ்வரனைப் புலம்பெயர் குழுக்கள் கையாள ஆரம்பித்தன. புலிகளின் அழிவின் பின்னர் புலம்பெயர் நாடுகளிலிருந்த பினாமிகளின் சொத்துக் குவிப்பு வியாபாரம் ஆட்டம்காண ஆரம்பித்தபோது தமதுவியாபாரத்திற்கு விலைபோகும் வியாபாரிகளை அவர்கள் தேட ஆரம்பித்தனர். அத் தேடலின் விளைவாக வட மாகாண சபையிலிருந்த விக்னேஸ்வரனும் அவரது சகாவான ஐங்கரநேசனும் இந்த வியாபார வலைப்பின்னலில் இணைந்துகொண்டனர்.

இன்றைய செய்திகள்
சிங்கக்கொடி ஏற்றி தேசியவாதி வேடத்தைக் கலைத்த விக்னேஸ்வரன் – பினாமிகள் எங்கே?
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் புலம்பெயர் பிழைப்புவாதிகளுக்குத் தீனி போட ஆரம்பித்து இப்போது அண்ணளவாக இரண்டு வருடங்கள் நிறைவுறுகின்றன. சமூக வலைத்தளங்கள், தேசியம் என்ற பெயரில் ஊடக வியாபாரம் நடத்திய இணையங்கள், அரசியல் கட்சிகள் என்று விக்னேஸ்வரனை காட்டி மக்களை ஏமாற்றிய கும்பல்கள் பொதுவாகப் புலம்பெயர் நாடுகளிலேயே நிலை கொண்டிருந்தன. இவர்களில் பொதுவாக அனைவருமே மக்களின் அவலங்களையும் கண்ணீரையும் தமது சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டனர்.

விக்கியை இயக்குவதற்கென்றே புலம்பெயர் நாடுகளில் குழுக்களும் தனி நபர்களும் உருவாகியிருந்தனர். அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலைகொண்டிருந்த இக் குழுக்களும் தனி நபர்களும் இந்திய மற்றும் அமெரிக்க நலன்களுக்காகச் செயற்படுபவர்களாகக் காணப்பட்டனர். மக்கள் நலனின் எந்த அக்கறையுமற்ற இக்குழுக்கள் விக்னேஸ்வரன் ஊடாக கட்டமைக்க முனைந்த சந்தர்ப்பவாத அரசியல் இன்று முகத்திரை கிழிக்கப்பட்டு நிர்வாணமாகத் தொங்க ஆரம்பித்துள்ளது.

ஐங்கரநேசன் மற்றும் விக்னேஸ்வரனின் கூட்டணி, சுன்னாகம் அனல் மின்னிலையத்திலிருந்து நடத்தப்பட்ட அழிவை மூடி மறைத்து யாழ்ப்பாணத்தின் மூன்றில் ஒரு பகுதியின் நீரையும் நிலத்தையும் நஞ்சாக்க உதவியது.

புலிகளின் அழிவிற்குப் பின்னதாகவே தனக்கு அரசியல் பேசும் சுதந்திரம் கிடைத்திருப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த விக்னேஸ்வரன் மகிந்த அரசுடன் தனது அரசியல் உறவை வளர்த்துக்கொண்டார். மகிந்தவிற்கு பின்னர் ஆட்சியிலமர்ந்த மைத்திரி அரசுடன் ஊடல் கொண்ட விக்னேஸ்வரனைப் புலம்பெயர் குழுக்கள் கையாள ஆரம்பித்தன. புலிகளின் அழிவின் பின்னர் புலம்பெயர் நாடுகளிலிருந்த பினாமிகளின் சொத்துக் குவிப்பு வியாபாரம் ஆட்டம்காண ஆரம்பித்தபோது தமதுவியாபாரத்திற்கு விலைபோகும் வியாபாரிகளை அவர்கள் தேட ஆரம்பித்தனர். அத் தேடலின் விளைவாக வட மாகாண சபையிலிருந்த விக்னேஸ்வரனும் அவரது சகாவான ஐங்கரநேசனும் இந்த வியாபார வலைப்பின்னலில் இணைந்துகொண்டனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து எழுதப்பட்ட இனப்படுகொலைத் தீர்மானம் வட மாகாண சபையில் விக்னேஸ்வரனால் வாசிக்கப்பட்ட பின்னர் அவர் பிரித்தானியாவிற்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பின்னர் முழுநேர தேசியவாத நாடகத்தை ஆரம்பித்த விக்னேஸ்வரன் கடந்தவாரத்தோடு அதனை முடிவிற்குக் கொண்டுவந்தார்.

ராஜபக்சவிற்கு எதிரான பொதுக்கூட்டம் ஒன்றில் பேரினவாதிகளுடன் இணைந்து சிங்கக்கொடி ஏந்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் புலம்பெயர் நாடுகள் முழுவதிலும் துரோகியாக்கப்பட்டதற்கான காரணம் வெளிப்படையானது. புலம்பெயர் பிழைப்புவாதிகள் ஊடாக அல்லாமல் நேரடியாகவே அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற கொலைகார அரசுகளுடன் நேரடியாகத் தொடர்புகளைப் பேணிக்கொண்ட கூட்டமைப்பு தமது பிடிக்குளிருந்து விலகிச் செல்கின்றது என்பது மட்டுமே புலம்பெயர் குழுக்களின் ஒரே துயரமாகக் காணப்பட்டது.

இன்று அதே சிங்கக்கொடியை ஏற்றிவைத்து தனது தேசியவாதி வேடத்தை விக்னேஸ்வரன் கலைத்துக்கொண்டார். இனிமேல் விக்னேஸ்வரனைப் பிரதியிட புதிய தனி நபர்களைத் தேடும் முயற்சியில் புலம்பெயர் வியாபாரக் குழுக்கள் ஆரம்பித்துவிடும். தவிர, விக்னேஸ்வரன் சிங்கக்கொடியை ஏற்றியபடியே புலம்பெயர் அமைப்புக்களின் கட்டுப்பாட்டினுள் செயற்படுவாரானால், அவரது தேசியவாதி வேடம் தொடரும் வாய்ப்புக்களும் உண்டு.

தமது அன்றாட வாழ்க்கையுடன் குறைந்தபட்சத் தொடர்புகளுமற்ற புலம்பெயர் பிழைப்புவாதிகள் இதுவரை நடத்திய அழிவு மக்கள் மத்தியிலிருந்து தோன்றக் கூடிய முன்னேறிய அரசியல் தலைமைகளை அழித்துச் சிதைத்துவிட்டது. அமெரிக்கா போன்ற கொலைகார ஏகபோக அரசுகளிடன் தமிழ்ப் பேசும் மக்களின் தலைவிதையை ஒப்படைத்துவிட்ட இப் பிழைப்புவாதிகள் இனிமேலும் மக்களை ஏமாற்றி வயிற்றுப்பிழைப்பு நடத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

(இனியொரு…)

ஜெயலலிதாவிடம் ஐவரணி சிக்கியது இப்படித்தான்..!

 

அ.தி.மு.க.வில் ஒவ்வொரு சீசனிலும் யாராவது ஒருவரோ அல்லது இருவரோ ஸ்டார் அந்தஸ்தில் இருப்பார்கள். ஆனால் முதல் முறையாக ஓ.பி.எஸ், நத்தம், எடப்பாடி, வைத்தி, பழனியப்பன் என்று ஐவர் அடையாளம் காட்டப்பட்டனர். இது எப்படி நிகழ்ந்தது என்பதும், இதன் பின் விளைவு எப்படியிருந்தது என்றும் மனக் குமுறலோடு கொட்டித் தீர்க்கின்றனர் ஒரு காலத்தில் கட்சியில் கோலோச்சி நின்றவர்கள். ஐவரணியின் குட்டுக்கள் உடைந்ததின் பின்னணியில், மாநிலப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ”அப்ரூவர்” ஆன கதையும் உள்ளது. திகில், திருப்பங்களுடன் நமக்கு கிடைத்த தகவல்களை அப்படியே இங்கு தருகிறோம்….

(“ஜெயலலிதாவிடம் ஐவரணி சிக்கியது இப்படித்தான்..!” தொடர்ந்து வாசிக்க…)