Demons in Paradise… சொர்க்கத்தில்  சாத்தான்கள்

(அரவம்)

இலங்கையின் இன அரசியல்மோதலை (Sri Lanka’sEthno Political  conflict) கருப்பொருளாகக் கொண்ட யூட் இரத்தினத்தால் எழுதி இயக்கப்பட்டஆவணப்படத்தைஅண்மையில் பார்க்கசந்தர்ப்பம் கிட்டியது. அருமையானபடம்.சிந்தனையைக்கிளறி எம்மை நாமே கேள்விகேட்டு சுயமீளாய்வைதூண்டச்செய்யும் படம். எம்மை அழவைத்து வெட்கித்தலைகுனியவைக்கும் ஆவணப்படம். எம் இனத்தின் மேல் உண்மையானபற்றுள்ள ஒவ்வொருதமிழனும் அவசியம் பாரக்கவேண்டியபடம். குறிப்பாக இளம் தலைமுறையினர் இப்படத்தைபார்த்து தங்கள் பெற்றோர்களிடம் “இவ்வளவு அட்டூளியங்களும் உங்கள் கண் முன் நடக்கும்போதுநீங்கள் என்னசெய்தீர்கள்”?என அவர்களது மனசாட்சியை உறுத்தசெய்யவேன்டும்.

(“Demons in Paradise… சொர்க்கத்தில்  சாத்தான்கள்” தொடர்ந்து வாசிக்க…)

ஏறத்தாழ பத்துநாளுக்கும் மேல் ஆயிற்று.

எங்கள் தெருவில் இருந்த அந்த நாய்
வாயில் அடிபட்டப் புண் புரையோடிப் போய்
மரணாவஸ்தையில் கிடந்து அரற்றிற்று.

தினமும் பிஸ்கெட் போட்டதால் பல்லாண்டு நண்பன்.

ஸ்கேன் பவுண்டேஷனுக்கு சொன்னேன்.
டாக்டர் வந்து பார்த்தார்.

(“ஏறத்தாழ பத்துநாளுக்கும் மேல் ஆயிற்று.” தொடர்ந்து வாசிக்க…)

விஜய குமாரதுங்க, (1945-1988) கொலை

(ஹேமந்த வர்ணகுலசூரிய)
1988 பெப்ரவரி 12ல் விஜய குமாரதுங்க, எச்.ஆர்.ஜோதிபால நினைவுச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில் பங்கேற்றார், அதில் அவர் எச்.ஆர்.ஜோதிபால மாவத்தயை திறப்பதாக அறிவித்தார். நான் ஒருபோதும் கேட்டிராத அவரது உணர்ச்சிமிக்க உரைகளில் ஒன்றை அவர் அதில் ஆற்றினார். ஜோதிபாலவுடனான தனது நட்பினைப்பற்றி அவர் மிக நீண்ட நேரம் பேசினார், மற்றும் ஒரு நடிகராக தான் ஜோதிபாலவின் குரல் வளத்தால் எப்படி ஆதாயம் அடைந்தார் என்பதை அவர் வெளிப்படுத்தினார். ஜோதிபாலவின் பின்னணிப் பாடல்கள் மூலமாக தான் பெரிதும் பிரபலம் அடைந்த உண்மையையும் அவர் ஏற்றுக்கொண்டார். பார்வையாளர்களாக கலந்துகொண்டிருந்த அங்கத்தவர்களில் பலரும் அது கேட்டு கண்ணீர் விட்டார்கள். அந்தக் கூட்டத்தில் கூட பாதுகாப்பு பணியாளர்கள் பார்வையாளர்கள்மீது ஒரு அவதானமான கண் வைத்திருந்தார்கள். விஜய உடன் வந்திருந்த ஸ்ரீலங்கா மகாஜனக் கட்சியின் செயலாளர் பிரேமசிறி பெரேராவிடம் நான் ஏன் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கை பின்பற்றப்படுகிறது என்று விசாரித்தபோது, ஜேவிபியின் ஆயுதக் குழுவான தேசப்பிரேமி ஜனதா விமுக்தி பெரமுனவினால் (டி.ஜே.வி) விஜயின் உயிருக்கு பயங்கர அச்சுறுத்தல் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

(“விஜய குமாரதுங்க, (1945-1988) கொலை” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் பாசிச ஆட்சிக்காலத்தில் ‘ஆய்வாளர்கள்’

புலிகளின் பாசிச ஆட்சிக்காலத்தில் புலிகளை அண்டிப்பிழைத்த பல “ஆய்வாளர்கள்” இருந்தார்கள். இவர்கள் ஆய்வாளர்கள் என்பதைவிட புலிப்பாசிசத்தை நியாயப்படுத்திய புலிப்பாசிச கோட்பாட்டாளர்கள் என்பதே பொருத்தமானது. ‘மதியுரைஞர்’ அன்ரன் பாலசிங்கம் இவர்களில் முதன்மையானவர். அவருக்கு அடுத்தபடியாக இருந்தவர்தான் மு.திருநாவுக்கரசு. இந்த மதியுரைஞர் என்ற ‘முடிக்குரிய’ பதவிக்கு மூன்றாவது இளவரசன் தராகி சிவராமா அல்லது நிலாந்தனா என்பதில் அரண்மனை வட்டாரங்களில் முடிவுசெய்யப்பட்டிருக்கவில்லை. மாமன்னர் பிரபாகரனுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் ஆங்கிலப்புலமை மதியுரைஞருக்கு போட்டிபோடுபவர்களுக்கு அடிப்படைத்தகுதி.

(“புலிகளின் பாசிச ஆட்சிக்காலத்தில் ‘ஆய்வாளர்கள்’” தொடர்ந்து வாசிக்க…)

வறுமையாலும் நாகரீக ஆணவத்தாலும் பலியாக்கப்பட்ட பழங்குடி இளைஞன்.

கேரளாவில், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டக்காடு கடகமணத்தில், மது எனும் 27 வயதுடைய சற்று மனம் பிறழ்ந்த பழங்குடி இளைஞன் அடித்துக் கொள்ளப்பட்டுள்ளார். அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு, ‘உணவைத் திருடிவிட்டார்’ என்பதுதான்.

(“வறுமையாலும் நாகரீக ஆணவத்தாலும் பலியாக்கப்பட்ட பழங்குடி இளைஞன்.” தொடர்ந்து வாசிக்க…)

இந்த போர்டரை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன்….

வடிவேலு பாணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி திருகோணமலையில் போட்ட டீலிங்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் திருகோணமலையில் விசித்திரமான முறையில் கட்சியை வளர்க்க பாடுபட்டு வருகிறார்கள். அங்குள்ள தொழிலதிபர் ஒருவரின் ‘அலப்பறை’ நிபந்தனைகளிற்கு உட்பட்டு, கட்சி தலைமை விசித்திர முடிவுகளை எடுத்து வருகிறது. இந்த போக்கை, வடிவேலுவின் பாணியில்- இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன்- என்று ஆதரவாளர்கள் நகைச்சுவையாக குறிப்பிடுகிறார்கள்.

(“இந்த போர்டரை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன்….” தொடர்ந்து வாசிக்க…)

மொட்டில் தமிழீழமும் நச்சு அரசியலும்

(Gopikrishna Kanagalingam)
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீது, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் முன்வைத்த விமர்சனங்கள், மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழம் மலரப் போகிறது என, மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது பிரிவினரும், தேர்தல் பிரசாரக் காலத்தில் முன்வைத்த பிரசாரங்களுக்கான பதிலடியாகவே, எதிர்க்கட்சித் தலைவரின் பதிலடி அமைந்திருந்தது.

(“மொட்டில் தமிழீழமும் நச்சு அரசியலும்” தொடர்ந்து வாசிக்க…)

அஞ்சலி: எழுத்தாளர் தோழர் விதுரன் (இராசையா தங்கேஸ்வரன்) மறைவு!

“ஓ! மனிதர்களே நம்புங்கள்.

நான்,
பிரபஞ்சத்தில் ஒளி தேடுபவன்.
சிறந்த சித்தாந்தத்தின் புத்தன்.
இப்பூவுலகம் என் போதிமரம்.” – விதுரன் 

(“அஞ்சலி: எழுத்தாளர் தோழர் விதுரன் (இராசையா தங்கேஸ்வரன்) மறைவு!” தொடர்ந்து வாசிக்க…)