வெலிமடையில் மண்சரிவு அபாயம்

வெலிமட, ரஹங்கல மலையில் விரிசல் ஏற்பட்டு வெடித்து மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதால், பொரலந்தை, ரஹங்கல மற்றும் ஹீன்னாரங்கொல்ல ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் புதன்கிழமை (3) தெரிவித்துள்ளது.

பனிப்புயலால் 5.5 கோடி பேர் பாதிப்பு

அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களை பனி மூழ்கடித்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் மூன்றாவது பனிப்புயல் உருவாக்கி உள்ளது. இது ‘பாம் சைக்ளோன்’ எனப்படும் அதி தீவிர பனி புயலால் 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீள ஆரம்பமாகவுள்ள காணாமல்போன எம்.எச்370 விமானத்துக்கான தேடல்

மலேசியா எயார்லைன்ஸ் விமானமான எம்.எச்370-இன் சிதிலங்களுக்கான தேடலானது 239 பேருடன் விமானம் காணாமல் போய் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இம்மாதம் 30ஆம் திகதி மீள ஆரம்பமாகவுள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதுளையில் சேதமடைந்த 165 வீதிகளில் 111 வீதிகள் சீரமைப்பு

நாட்டில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் சுமார் 165 வீதிகள் சேதமடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவற்றில் 111 வீதிகள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமீர் இராச்சியத்தில் இருந்து மீண்டும் உதவி

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளுடன்,  ஐக்கிய அரபு அமீர் இராச்சியத்தில் இருந்து  இரண்டாவது முறையாகவும் விமானமொன்று செவ்வாய்க்கிழமை (02) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

மக்களே அவதானம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் எலி காய்ச்சல் ஆகிய நோய்கள் பரவும் கடுமையான ஆபத்து உள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எம்.எஃப்புடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுங்கள்: சஜித்

அண்மைய பேரழிவையடுத்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப புதியதொரு திட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அந்தவகையில் சர்வதேச நாணய நிதியமுடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறும் புதியதொரு ஒப்பந்தத்துக்குச் செல்லுமாறும் கூறியுள்ளார்.

யாழில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை; அறுவர் கைது

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட ஆறு பேர் திங்கட்கிழமை (01) கைதுசெய்யப்பட்டனர்.

“சிறையில் சித்திரவதைக்குள்ளாகும் இம்ரான் கான்”?

சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நலமுடன் உள்ளார், ஆனால், அவரை மன ரீதியாக சித்திரவதைக்கு ஆளாக்குகின்றனர் என்று அவரது சகோதரி உஸ்மா கான் தெரிவித்துள்ளார்.

தப்போவ பாலத்தின் தற்காலிக கட்டுமானம்

கனமழை காரணமாக இடிந்து விழுந்த தப்போவ  பிரதான பாலத்தில் தற்காலிக இரும்புப் பாலம் கட்டப்பட்டு வருவதாக வீதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.