நிறைவுக்கு வரும் டென்மார்க் அஞ்சல் சேவை

அஞ்சல் கடிதங்களின் தேவை மிகக் குறைந்ததைத் தொடர்ந்து, டென்மார்க்கின் அரசுக்குச் சொந்தமான அஞ்சல் நிறுவனமான PostNord, கடித விநியோக சேவையில் இருந்து முழுமையாக விலகத் தீர்மானித்துள்ளது.

எரிமலை சீற்றத்தால் மக்கள் வெளியேற்றம்

இந்தோனேஷியாவில் உள்ள பர்னி தெலோங் எரிமலை சீற்றத்துடன் காணப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

பிட்பேர்க் சரக்குக் கப்பலை கைப்பற்றிய பின்லாந்து

பின்லாந்தின் ஹெல்சிங்கியிலிருந்து எஸ்தோனியாவுக்கு பின்லாந்து வளைகுடாவால் செல்லும் கடலடி தொலைத்தொடர்பு கேபிள்களை அறுத்த சந்தேகத்தில் ரஷ்யாவிலிருந்தான பிட்பேர்க் சரக்குக் கப்பலை பின்லாந்துப் பொலிஸார் புதன்கிழமை (31) கைப்பற்றியுள்ளனர். இக்கப்பலானது சம்பவம் இடம்பெற்றபோது இஸ்ரேலுக்குச் சென்று கொண்டிருந்ததாக செய்தியாளர் மாநாடொன்றில் பின்லாந்து எல்லைக் காவலர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களை கைது செய்ய இலஞ்சம் வாங்கிய கான்ஸ்டபிள் கைது

நபர் ஒருவரைத் தாக்கியதாக சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக, புகார்தாரரிடம் ரூ.10,000 லஞ்சம் கோரிய கிண்ணியா காவல்துறையின் பல்வேறு புகார்கள் பிரிவின் பொறுப்பதிகாரி, காவல் நிலையத்தில் அவர்களுக்கு நட்பாக இருந்த மீன் வியாபாரியிடமிருந்து லஞ்சம் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆட்டு இறைச்சியுடன் நாய் இறைச்சி கலப்படம்

நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படுவது தொடர்பாக பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பாட புத்தகம் : பேராசிரியர் திடீர் பதவி விலகல்

சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாடத் தொகுதி தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக அந்த பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.

வீடுகளை இழந்த மக்களை சந்தித்தார் ஜனாதிபதி

அங்கும்புர மற்றும் கன்கொட்டுவ பகுதிகளில் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கான மீள்குடியேற்ற ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார். 

சொஹரா புஹாரிக்கு ஒருவாரம் காலக்கெடு

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சொஹரா புஹாரிக்கு ஒரு வாரம் காலக்கெடு விதிக்கப்பட்டு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு? 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்

சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டை இலக்கு திசையில் வழிநடத்துவது அவசியம்

எந்தவொரு நாடும் முன்னேற்றகரமான வளர்ச்சியை அடைய உதவும் ஒரு மூலோபாய காரணியாக வளர்ச்சித் தரவு உள்ளது. இந்தத் தரவு வழங்கும் ஆதரவு, சரியான மேலாண்மை செயல்முறைக்கும், நாட்டிற்கு ஏற்ற வளர்ச்சி செயல்முறையைத் தீர்மானிப்பதற்கும் மிகவும் முக்கியமானது. இது வளர்ச்சிப் பொருளாதாரம் எனப்படும் பாடப் பகுதியில் ஆழமாக விவாதிக்கப்படுகிறது.