இஸ்ரேல் பிரதமர் மறைவான இடத்திற்கு நகர்ந்தார்

சியோனிச கோழை இஸ்ரேலை விட்டும் தப்பி ஓட்டம் நெதன்யாகுவை ஏற்றிக் கொண்டு அவருடைய விமானம் மர்மமான இடத்திற்குப் புறப்பட்டுள்ளது.

காசாவில் மௌனம் ஈரானில் கண்டனம்

இரண்டு வருடங்களாக காசாவில் நெதன்யாகு 70,000க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களை கொன்றார். இன்னும், அமெரிக்க அல்லது ஐரோப்பிய ஆட்சியிலிருந்து ஒரு வார்த்தை கூட கண்டனம் இல்லை.

வெனிசுலாவின் தலவர் மதுரோ ஐ விடுதலை கோரி தொடரும் போராட்டம்

அமெரிக்காவே எங்கள் கதாநாயகன் அதிபர் மதுரோ தான்.அவரை விடுவித்திடு. அவர் விடுதலைக்காக நாங்கள் எதையும் செய்வோம். இது முழக்கமல்ல எங்கள் பேருண்மை. என எழுச்சி முழக்கமிட்டு வெனிசுலா நாட்டு இளைஞர்கள் நேற்று (14.01.2026) வீதிதோறும் ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்களுடன்” பைக்” பேரணி நடத்தினர்

ஈரான் மீது கை வைத்தால் விளைவு மோசமாகும்: மிரட்டும் ரஷியா

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டல்களுக்கு ரஷியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் உள்நாட்டுப் போராட்டங்களைச் சாக்காக வைத்து அந்நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவில் 237 பறவைகளுடன் மூவர் கைது

யாழ்ப்பாணம், கச்சத்தீவை சுற்றியுள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர்  புதன்கிழமை (14) அதிகாலை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயன்ற 237 பறவைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகை கைப்பற்றிய கடற்படையினர் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேரர் உண்ணாவிரதம்

திருகோணமலை கோட்டை கடற்கரையில் தற்காலிக இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தபோது ஏற்பட்ட மோதல் தொடர்பாக, நீதிமன்ற உத்தரவின் பேரில், விளக்கமறியலில் உத்தரவின் கீழ் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வனவாசி பலாங்கொட கஸ்ஸப தேரர்,உணவை உண்பதற்கு மறுத்து, சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை, வியாழக்கிழமை (15) காலை முதல் ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இனவாதமற்ற தேசிய ஒருமைப்பாட்டுடனான வளமான நாட்டை கட்டியெழுப்புவோம்

இந்நாட்டு வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஒரு ஆண்டாக கடந்த ஆண்டு பதிவாகிறது என வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

’மன்னார் விண்ட்ஸ்கேப்’ ஜனாதிபதியால் திறந்து வைப்பு

20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட ‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ (WINDSCAPE MANNAR) காற்றாலை மின்நிலையத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பொங்கல் தினமாக வியாழக்கிழமை (15) அன்று திறந்துவைத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தைப்பொங்கல்

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், தைப்பொங்கல் விழா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், வியாழக்கிழமை (15) அன்று நடைபெற்றது.