புட்டினின் இந்திய பயணம்: 10 முக்கிய அம்சங்கள்

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இன்று வியாழக்கிழமை (04) புதுடில்லி வந்தடைவார் என இந்திய அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் A01வீதி திறப்பு

கண்டி – கொழும்பு A01 வீதி அத்தியாவசிய போக்குவரத்து சேவைகளுக்கு மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டி – மஹியங்கனை வீதி வியாழக்கிழமை (04) முதல் இலகு ரக வாகனங்களுக்கு மட்டுமே திறக்கப்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மையத்தின் கண்டி மாவட்ட துணை பணிப்பாளர் இந்திக ரணவீர கூறுகிறார்.

இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய்வு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள பேரிடர் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய, இன்று வியாழக்கிழமை (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டுள்ளார்.

‘டிட்வா’ புயலால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

நாட்டை உலுக்கிய டிட்வா புயலால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.  (SLTDA) அறிவித்துள்ளது.

வான் கதவுகள் திறப்பு ; விழிப்புடன் இருக்குமாறு அறிவித்தல்

கலா வாவியில் தற்போது 04 அடி வரை வான் கதவுகள் திறக்கப்பட்டு சுமார் 3800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ராஜாங்கனை வாவியில் இருந்து மேலும் 1000 கன அடி நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் சுமார் 4800 கன அடி நீர் கலா ஓயாவுக்கு திறக்கப்படும். இதனால் வெள்ள அபாயம் ஏற்படாது என்பதுடன் இது தொடர்பாக பீதி அடையாமல்  விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்கள இயக்குனர்  தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவுகளால் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம்

சுமார் 1,289 வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் சுமார் 44,500 வீடுகள் மண்சரிவு மற்றும் தொடர்புடைய பாதிப்புகளால் பகுதியளவு சேதமடைந்துள்ளன என்று வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

லியங்கஹவல வீதி தாழ்யிறக்கம்

பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம்,லியங்கஹவல பத்தேரவ பகுதியில் வீதியின் ஒரு பகுதி வியாழக்கிழமை (04) அன்று தாழ் இறங்கியுள்ளது. குறித்த இடம் இராவண நீர்வீழ்ச்சியின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதி என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சிநிறுவனத்தின் அறிக்கை பெறப்பட உள்ளது.

மக்களே… விழிப்புடன் இருங்கள்

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் புதன்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் வழக்கமான உணவு நிலை குறித்து புதன்கிழமை (03) அன்று இடம்பெற்ற சோதனையின் போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, காலாவதியான மற்றும் பழுதடைந்து காணப்பட்ட பெருமளவு உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. சுகாதார விதிமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாவிலாறு அணைக்கட்டை புனரமைக்க தாமதமாகும்

“சேதமடைந்துள்ள மாவிலாறு அணைக்கட்டு முழுமையாக புனரமைக்க,வடகீழ் பருவ பெயர்ச்சி மழை முடியும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்” என்று திருகோணமலை பிராந்திய நீர்ப்பாசன துறை பணிப்பாளர்,பிரதம எந்திரி க.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

Highway கட்டணம் இன்று முதல் அறவிடப்படும்

நிலவிய மோசமான காலநிலை காரணமாக கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக எவ்வித கட்டணமும் அறவிட வேண்டாம் என குறிப்பிட்டிருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை (4) முதல் மீண்டும் கட்டணம் அறவிடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை  (RDA) தீர்மானிக்கப்பட்டுள்ளது.