(தோழர் ஜேம்ஸ்)
“மொத்தத்தில் நாமலை ராஜபக்ச வை இளவரசனாக்கி தம்மை சட்டத்தின் பிடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வாய்பு ஏற்பட்டால் மீண்டும் அரசு சொகுசுகளை அனுபவிக்க துடிக்க பல பேர் கூடி வடம் இல்லாத தேரை இழுந்தது போல் அமைந்துவிட்டது இந்தக் கூட்டம்”

ஒரு மாதத்திற்கு முன்பு தேசிய மக்கள் சக்தி(NPP) அரசுக்கு எதிரான கூட்டம் என்றாக பெயரிட்டு கருக் கொண்டது இன்றைய நுகேகொடை கூட்டம். இதனை ஆரம்பித்தது சிறீலங்கா பொது சன பெரமுன(SLPP) என்ற மொட்டு கட்சி.


