உலகின் மிக உயரமான ஹோட்டல் துபாயில் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் வானளாவிய உயரத்துக்கு கட்ட திட்டமிடப்படவில்லை என்றும், தற்செயலாக நடந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீதிகளில் தஞ்சம் தஞ்சம் அடைந்தனர்.
மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து;18 பேர் பலி
மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு படகில் அகதிகள் சிலர் கிரீஸ் நாட்டின் தீவான கிரீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்களது படகு கடலில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். படகு மூழ்கி கிடப்பதை அந்த வழியாக சென்ற துருக்கி கப்பலில் இருந்தவர்கள் பார்த்து மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து கடலில் தத்தளித்து கொண்டிருந்த 2 பேரை மீட்டனர். பலியானவர்களின் உடல்களை மீட்டனர். இந்த அகதிகள் படகு எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை
இந்தோனேசியா பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900
மியான்மரின் நிவாரண விமானம் வந்தடைந்தது
மியான்மர் விமானப்படை விமானம் (Y8) பேரிடர் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை (06) அன்று கட்டுநாயக்க விமானப்படைக்கு வந்தடைந்தது. மியான்மர் அரசாங்கத்தின் ஒரு குழுவும் நிவாரணப் பொருட்களுடன் இலங்கைக்கு வந்தது. பேரிடர் நிவாரணத்தில் சுகாதாரப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களும் உள்ளடங்கும்.
பெண்ணுக்கு எதிராக சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு
போதை வஸ்து, சிகரட் கைப்பற்றப்பட்டன
யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
முன்னாள் எம்.பியான செல்லையா இராசதுரை காலமானார்
யாழில் இடி, மின்னல் தேவாலயத்துக்கு சேதம்
யாழில் இடி மின்னல் தாக்கத்தால் தேவாயலம் ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்த வகையில் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட J/187 சங்குவேலி கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் இந்த இடி மின்னல் தாக்கம் சனிக்கிழமை (06) இரவு இடம்பெற்றது. இந்த இடி மின்னல் தாக்கத்தால் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
