ஆழிப்பேரலை 21ஆம் ஆண்டு நினைவேந்தல்

2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இன்று இடம்பெற்றது.

டக்லஸ் தேவானந்தா சற்று முன் கைது

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.  2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் கண்டுபிடிக்கப்பட்டது.

நத்தார் தினத்தன்று 322 பேர் கைது

நத்தார் தினத்தன்று நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குடிபோதையில் வாகனம் ஓட்டிய 322 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

அழகுசாதனப் பொருட்கள் குறித்து அதிரடி நடவடிக்கை

இலங்கையில் அழகுசாதனப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலம், அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் பொதுமக்களின் கருத்துக்காகத் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடை கொலைக்குப் பின்னணியில் இருந்த பெண்

அம்பலாங்கொடை பிரதேசத்தில் டிசம்பர் 22 ஆம் திகதி காட்சியறை முகாமையாளர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜனாதிபதி நத்தார் வாழ்த்துச் செய்தி

யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பதுளையில் 68% பகுதி குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 68% பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பதுளை மாவட்ட புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா தெரிவித்துள்ளார். சீரற்ற வானிலை நிலவிய காலப்பகுதியில், பதுளை மாவட்டத்தில் மாத்திரம் 368 பிரதான மண்சரிவுச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இந்த மண்சரிவு அபாயம் காரணமாக, இதுவரை சுமார் 650 வீடுகள் அதி உயர் அபாய நிலைக்குள் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மக்களை சோகத்தில் மூழ்கடித்த சிறுமியின் மரணம்

முல்லைத்தீவில் உணவு ஒவ்வாமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி  உயிரிழந்த  சம்பவம்  பெரும்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

அஸ்கிரி மற்றும் மல்வத்து அனுநாயக்க தேரர்களின் வேண்டுகோள்

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இந்த பண்டிகை, வழக்கத்தை விட வித்தியாசமாக, பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதன் மூலம் கொண்டாடப்பட வேண்டும் என்று மல்வத்து மற்றும் அஸ்கிரி அனுநாயக்க தேரர்கள் கூறுகின்றனர்.

நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துங்கள்

சுனாமி மற்றும் பிற பேரிடர்களால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், நாளை (26) காலை 9:25 மணி முதல் காலை 9:27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு  மக்களிடம்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.