தித்வா புயலின் பின்னரான கடன்: ஏன் இலங்கை அவதானத்துடன் இருக்க வேண்டும்

தித்வா புயல் காரணமாக இலங்கையில் பாரிய மனிதநேய மற்றும் பொருளாதார அதிர்ச்சி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் மதிப்பின் பிரகாரம் நேரடி சேதங்களின் மதிப்பு 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (மொத்த தேசிய உற்பத்தியின் சுமார் 4%). இந்நிலையில் அவசர பொது நடவடிக்கைகள் அத்தியாவசியமானவையாகும். அவசர தங்குமிடங்கள், விவசாய மறுசீரமைப்புகள் மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை பழுதுபார்த்தல் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடும், அந்நியச் செலாவணியும் அவசியமாவதுடன், இலங்கையின் பெரும்பொருளாதார சூழ்நிலை நெருக்கடியாக காணப்படும் சூழலில், இந்த நிலை மேலும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.

டிரம்ப் ஒரு கோழை: தைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும் – கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ

வெனிசுலாவுக்குள் புகுந்து அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்திருந்தது. இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், டிரம்ப் ஒரு கோழை என்றும், தைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும் என்றும் கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ கூறியிருக்கிறார்.

குஸ்டாவோ, இப்படி சொல்வதற்கு காரணம் இருக்கிறது. போதை பொருள் விஷயத்தில் வெனிசுலாவை மட்டுமல்ல கொலம்பியாவையும் டிரம்ப் கடுமையாக சாடியிருக்கிறார்.

வேலையை காட்டிய ட்ரம்ப் : வெனிசுலாவுக்கு அதிரடி உத்தரவு

லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலா மீது, அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை. இந்த சம்பவத்தில் வெனிசுலாவின் ராணுவ வீரர்கள் 23 பேரும், க்யூபாவைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையை சேர்ந்த 32 பேரும் கொல்லப்பட்டனர். அதோடு, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவும் கைது செய்யப்பட்டார்.

’’வெனிசுலாவை விட்டுவிடுங்கள்’’

வெனிசுலா எண்ணெய் இருப்புக்கள் சூறையாடப்படுவதைக் கண்டித்தும், “வெனிசுலாவை கைவிட்டுவிடுங்கள்” என்ற கொள்கையைக் கோரியும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் மக்கள் போராட்ட இயக்கம்     போராட்டத்தை திங்கட்கிழமை (05)  நடத்தியது.   

மீண்டும் நிலச்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழைகாரணமாக, பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு விடுத்துள்ளது.

போதைப்பொருளுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின்  ஊழல் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி உகண பகுதி   திஸ்ஸ புர 21 கிராமத்திலிருந்து அம்பாறை நகரத்திற்கு போதைப்பொருள் விற்பனை செய்த கைது செய்யப்பட்டுள்ளனர்.

சபையில் கஜேந்திரகுமாருக்கு அருகில் அமர முடியாது: அர்ச்சுனா

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தன்மீது அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டிய யாழ். மாவட்ட சுயேச்சை எம்.பியான. ராமநாதன் அர்ச்சுனா, தனது அருகில் இருக்கும் அவருக்கு இருக்கையை    மாற்றுமாறு சபாநாயகரிடம்  வலியுறுத்தினார்.

செவ்வந்தியுடன் கைதான யாழ். தக்ஷிக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் துப்பாக்கித்தாரியான பிரதான சந்தேக நபருக்கு துப்பாக்கியை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இஷார செவ்வந்திக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றொரு சந்தேக நபரை ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.நா பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறதாம்…

அமெரிக்க ராணுவ படைகள் ஜனவரி 3ஆம் திகதியன்று வெனிசுலாவில் நடத்திய அதிரடி தாக்குதலின் பின்னர் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவருடைய மனைவி கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அவசரமாக கூடியது. 

யாழில் 650 மில்லி மீற்றருக்கும் மேல் மழை: பிரதீபராஜா எச்சரிக்கை

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என எச்சரித்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா இதன் தாக்கம் யாழ் மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு  பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.