பேசுவது ஜனநாயகம் ; நடத்துவது காட்டு தர்பார்

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

ஒரு நாட்டில் கொடுங்கோல் ஆட்சியை நடத்தும் ஒரு தலைவனுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் சர்வதேச நிறுவனங்களிடமும் சிலவேளை குறிப்பிட்ட சில வெளிநாடுகளிடமும் முறையிடுவது சகஜமான விடயமாகும். இலங்கையிலும் சில தமிழ் அமைப்புக்கள் மற்றும் கட்சிகள் வருடா வருடம் ஐ.நா. மனித உரிமை பேரவையிடம் போர் காலததில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி கேட்டு முறையிடுகின்றன.

“முன்பள்ளி கல்வியிலும் மறுசீரமைப்பு”

முன்பள்ளிக் கல்வியை ஒரு கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கும், அதனை ஒரு பொதுவான கலைத்திட்டத்திற்குள் உள்வாங்குவதற்கும், ஆசிரியர் பயிற்சியினைச் சீராக முன்னெடுத்து அதன் தரத்தை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

‘என் விதியை யாரும் மாற்ற முடியாது’ – ஷுப்​மன் கில்

ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் நடை​பெற உள்​ளது. இந்த தொடருக்​கான இந்​திய அணி​யில் ஷுப்​மன் கில் சேர்க்​கப்​பட​வில்​லை. டெஸ்ட், ஒரு​நாள் போட்​டி​யில் இந்​திய அணி​யின் கேப்​ட​னாக ஷுப்​மன் கில் செயல்​பட்டு வரும் நிலை​யில் டி 20 அணி​யில் அவருக்கு இடம் கொடுக்​கப்​ப​டாதது பல்​வேறு விமர்​சனங்​களுக்கு வழி​வகுத்​தது.

ஈரான் வன்முறையில் : 116 பேர் பலி

ஈரானின் மதவாத ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் இரண்டாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை (11)  அன்றும் தீவிரமடைந்துள்ளன. 

கடுகதி புகையிரதத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்: இளைஞன் பலி

யாழ்ப்பாணம் – அரியாலை 13ஆம் கட்டை பகுதியில்  சனிக்கிழமை (10) இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை (11) உயிரிழந்துள்ளார். முத்தமிழ் வீதி, கொட்டடி பகுதியைச் சேர்ந்த சிவராஜா சிவலக்சன் (வயது 23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

டிட்வாவில் உயிரிழந்தவர்களும் தியாகிகளே: திலகர்

டிட்வா சூறாவளியுடனான மண்சரிவுகளில் புதையுண்ட 127 மலையக லயன் குடியிருப்பாளர்களும் கூட மலையகத் தியாகிகளாக நினைவு கூரப்படவேண்டியவர்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார்.

அறுகம்பையில் இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்திற்கு பூட்டு

பொத்துவில் அறுகம்பையில் இயங்கி வந்த இஸ்ரேலர்களின் வணக்க வழிபாடுகள் இடம்பெற்று வருவதாக கூறப்படும் சபாத் இல்லம் சனிக்கிழமை (10) முதல் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டது.

பயங்கரவாத பெயர் பட்டியலில் சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் பெயர்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் அதிவிசேட  வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் என்பவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்றத்தின் மாண்பு

பாராளுமன்றத்தில் அர்ச்சுனா ராமநாதனின் நடத்தையை ஊடகத்துறை துணை அமைச்சர் விமர்சித்தார். Deputy Media Minister Criticises MP Archuna Ramanathan’s Conduct in Parliament.

2,500 பாமசிகள் மூடப்படும் அபாயம்

நாடு முழுவதும் 2,500 க்கும் மேற்பட்ட பாமசிகள், தகுதிவாய்ந்த மருந்தாளரை முழுநேரமாக பணியமர்த்த முடியாததால் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. இந்த ஆண்டு முதல், மருந்தகத்தின் முழு செயல்பாடு முழுவதும் தகுதிவாய்ந்த மருந்தாளரை பணியமர்த்தப்பட வேண்டும் என்ற தேவையை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் கண்டிப்பாக அமல்படுத்த முடிவு செய்துள்ளது, மேலும் 2026 ஆம் ஆண்டுக்கு இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத பாமசிகளின் உரிமங்களை புதுப்பிக்க வேண்டாம் என்றும் முடிவு செய்துள்ளது.