அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட கடும் புயல் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

The Formula
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டல்களுக்கு ரஷியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் உள்நாட்டுப் போராட்டங்களைச் சாக்காக வைத்து அந்நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.
காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல் (அல்-அக்ஸா) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த, மட்டக்களப்பு மாவட்ட புதிய இராணுவ கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஆர்.ஏ.டி.எஸ். ராஜபக்ஷ அவர்களுக்கு வரவேற்பு நிகழ்வும், துஆ பிரார்த்தனையும் புதிய காத்தான்குடி ஆல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
