ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு? 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்

சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டை இலக்கு திசையில் வழிநடத்துவது அவசியம்

எந்தவொரு நாடும் முன்னேற்றகரமான வளர்ச்சியை அடைய உதவும் ஒரு மூலோபாய காரணியாக வளர்ச்சித் தரவு உள்ளது. இந்தத் தரவு வழங்கும் ஆதரவு, சரியான மேலாண்மை செயல்முறைக்கும், நாட்டிற்கு ஏற்ற வளர்ச்சி செயல்முறையைத் தீர்மானிப்பதற்கும் மிகவும் முக்கியமானது. இது வளர்ச்சிப் பொருளாதாரம் எனப்படும் பாடப் பகுதியில் ஆழமாக விவாதிக்கப்படுகிறது.

காலி மாநகர சபையின் ஐந்து உறுப்பினர்கள் கைது

காலி மாநகர சபையின் ஐந்து உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை (30) சபை அமர்வில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சபை நடவடிக்கைகளின் போது ஏற்பட்ட குழப்பம் தொடர்பாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், ஒரு பெண் உறுப்பினர் உட்பட ஐந்து உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். சபை செயலாளர் மற்றும் பிற அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பட்ஜெட் நிறைவேற்றம்

கொழும்பு மாநகர சபையின் (CMC) வரவு செலவுத் திட்டம் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் , புதன்கிழமை (31) அன்று நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 58 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 56 பேர் எதிராகவும் வாக்களித்தனர். ஐக்கிய மக்கள் சக்தி,  ஐக்கிய தேசியக் கட்சி  மற்றும்  சுயாதீன கட்சி உறுப்பினர் ஒருவர்  என மூன்று பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் ஆதரவாக வாக்களித்தார். 

மினுவாங்கொடை தலைவர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த மினுவாங்கொடை நகர சபையின் தலைவர் அசேல விக்ரமாராச்சி, மாநகர சபைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மினுவாங்கொடை நகர சபையில் புதன்கிழமை (31) அன்று  நடைபெற்ற சிறப்பு பொதுக் கூட்டத்தில், அவர் இவ்வாறு அறிவித்தார்.

5 வருடங்களுக்கு மேல் ஏமாற்றப்படும் அவலம்

மன்னாரில் ஆசிரியர் பணிக்காக அமர்த்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஐந்து ஆண்டுகள் ஆகியும் நியமனம் கிடைக்காத  நிலையில் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் அலுவலகத்தில்   புதன்கிழமை(31) முறைப்பாட்டை கையளித்துள்ளனர்.

கிராம அலுவலர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

முசலி பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும்  கிராம உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றமையை கண்டித்து  புதன்கிழமை ( 31) காலை முசலி பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கல்வி சீர்திருத்தத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில்  ஜனவரி 05  முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை என்று ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வி வல்லுநர்கள் கூறியுள்ளதுடன்,  போதுமான ஆலோசனை மற்றும் தயாரிப்பு இல்லாமல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

கையை தூங்கிய மு.கா உறுப்பினர் இடைநீக்கம்

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜோஹாரா புஹாரி கட்சியால் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிஜாம் காரியப்பர் திருமதி புஹாரிக்கு எழுதிய கடிதத்தில், கட்சி அவரை உடனடியாக இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகக் குறிப்பட்டுள்ளார்.

முதலாவது நாடாக 2026-ஐ வரவேற்றது கிரிபாட்டி தீவு

2026 ஆம் ஆண்டை வரவேற்பதற்கு  உலகெங்கிலும்  உள்ள  மக்கள்  ஆர்வத்துடன்  காத்திருக்கின்றனர். அந்த வகையில் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபாட்டி (Kiribati) குடியரசின் கிரிட்டிமாட்டி தீவு (Kiritimati Island) உலகிலேயே முதன்முதலாகப் புத்தாண்டை வரவேற்றுள்ளது.