முல்லைத்தீவில் யாழ். பல்கலைக்கழகப் பீடம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை இட்டு வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

பதவி விலக மறுக்கும் பிரித்தானியப் பிரதமர் ஸ்டாமர்

ஐக்கிய அமெரிக்க தூதுவராக பீற்றர் மன்டெல்சனை பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் நியமித்தமையானது அவரது அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளிய நிலையில், அவரது தொழிலாளர் கட்சியின் ஸ்கொட்லாந்துத் தலைவர் அனஸ் சர்வர் போராடப் போவதாக தெரிவித்த நிலையிலும் பதவி விலகும் கோரிக்கைகளை கணக்கிலெடுக்க அவர் திங்கட்கிழமை (09) மறுத்துள்ளார்.

மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மலையக மக்கள்

“இலங்கை வரலாற்றில் மலையக பெருந்தோட்ட மக்களை பொறுத்தவரையில் நாட்டின் 09வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவின் ஊடாக மாத்திரமே பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய  சம்பள பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.” என மலையக மக்கள் தெரிவித்துள்ளனர் 

SIM பதிவு செய்தல் விதிகளில் திருத்தம்

சந்தாதாரர் சிம் அட்டை (சிம் காட் மொடியூள் SIM) பதிவு செய்தல் ஒழுங்குவிதிகளைத் திருத்தம் செய்தல் மற்றும் 2019.08.02 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளப்பட்ட சிம் அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

விசேட தேவையுடையோருக்கு புதிய பேருந்துகள்

விசேட தேவையுள்ள நபர்களுக்கான வசதிகளுடன் கூடிய வளிச்சீராக்கிகள் பொருத்தப்பட்ட தாழ்வான மிதிபலகையுடன் கூடிய 10 புதிய பேருந்துகளைச் சேவையில் அமர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் பலி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தலில் வென்ற தாய்லாந்துப் பிரதமர் அனுடின்

தாய்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் அனுடின் சர்விரகுல்லின் பூம்ஜைதை கட்சி தெளிவாக வெற்றி பெற்றுள்ளது. கம்போடியாவுடனான எல்லைச் சண்டையின்போது டிசெம்பர் நடுப்பகுதியில் இடைத் தேர்தலை பிரதமர் அனுடின் அறிவித்திருந்தார்.

வெளிநாட்டு சந்தைகளை தேயிலை இழக்கும் அபாயம்

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதம் காரணமாக, இலங்கையின் உலகப் புகழ்பெற்ற தேயிலை வெளிநாட்டு சந்தைகளை இழக்கும் அபாயத்திலும், பிற நாடுகள் பிற விநியோகஸ்தர்களை நாடும் நிலையில் உள்ளது என்று கொழும்பின் தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் லுஷாந்தா டி சில்வா கூறினார்.

ஆசியாவின் மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத் தலமாக இலங்கை உருவெடுத்தது ஏன்?

ஆசியாவின் மிகவும் உற்சாகமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இலங்கை அமைதியாக உருமாறியுள்ளது. பொன்னிற கடற்கரைகள், பனிமூட்டமான மலைநாடுகள், பழமையான நகரங்கள் மற்றும் வனவிலங்குகள் நிறைந்த தேசிய பூங்காக்கள் என, ஒரு சிறிய பயணத்தில் வேறெந்த நாட்டிலும் காண முடியாத பன்முகத்தன்மையை இந்தத் தீவு வழங்குகிறது. பயணிகள் இப்போது இலங்கையை வெறும் ஒரு இடமாக மட்டும் பார்க்காமல், வணிகமயமாகிப்போன பிற நாடுகளுக்கு மாற்றாகத் தீவிரமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

வாய்மொழி துஷ்பிரயோகம்: கட்டளையை திருத்த கோரிக்கை

சபாமண்டபத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை அல்லது கூற்றுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையை திருத்துமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநயாகரிடம் வியாழக்கிழமை (05)  அன்று கோரிக்கை விடுத்துள்ளது.