வெனிசுவேலா விவகாரம்: ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரக் கூட்டம்

வெனிசுவேலா நாட்டின் நீண்டகால ஜனாதிபதியாக இருந்த நிக்கோலஸ் மதுரோவை, அமெரிக்கப் படைகள் அதிரடியாகத் தாக்கிப் பதவியிலிருந்து நீக்கியுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இன்று (05) அவசரமாகக் கூடவுள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி இன்று நீதிமன்றில்

அமெரிக்காவுக்குள் போதை பொருட்களை கடத்துவதாக குற்றஞ்சாட்டி, அந்நாட்டு படைகளால் சிறைபிடிக்கப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ், ஆகியோர் இன்று மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

அசாம் மாநிலத்தில் பாரிய நிலநடுக்கம்

இந்தியாவின் அசாம் மாநிலம் மோரிகோவன் மாவட்டத்திற்கு அருகில் இனறு திங்கட்கிழமை  (05) அதிகாலை 4.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1ஆக பதிவாகியுள்ளது. 

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் கைது

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) இன்று (05) ஆஜரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இ கைது செய்யப்பட்டார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று FCID யில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டதாகவும், அவர் இணங்கத் தவறினால் நீதிமன்றத்திடம் கைது பிடியாணை கோரப்படும் என்றும் எச்சரித்ததாக பொலிஸார் முன்னதாக தெரிவித்திருந்தனர்.

’’எல்லாவற்றிலும் தலையிட NPP முயற்சி’’ – மஹிந்த ராஜபக்ஷ

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, ஆனால் இதுவரை பலன்களை வழங்கத் தவறிவிட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

“அவர்கள் கடுமையாக முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவர்கள் தோல்வியடைகிறார்கள்,” என்றார்.   

வெனிசுலா: அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு புதிய போருடன் புத்தாண்டில் முழங்குகிறது

வெனிசுலா மீதான ட்ரம்பின் குற்றவியல் படையெடுப்பை எதிர்ப்போம்!

மதுரோவை விடுதலை செய்!

உலக சோசலிச வலைத் தளம், அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆகியவை வெனிசுலா மீதான படையெடுப்பையும், சனிக்கிழமை அதிகாலை ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் குற்றவியல் கடத்தலையும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கின்றன.

குருக்கள்மடத்தில், கசிப்புடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனை செய்து வந்த ஒருவர் திங்கட்கிழமை ( 05 ) அதிகாலை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையின் தேடுதல் வேட்டையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

எச்சரிக்கையை மீறும் சுற்றுலா பயணிகள்

வெளிநாடு மற்றும் இலங்கையின் பல பகுதிகளில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரைக்கு வருகின்றனர்  இவ் கடற்கரையானது பாதுகாப்பு இன்றி காணப்படுவதால் கடல் பரப்புக்குள் இறங்க வேண்டாம் என வடமராட்சி கிழக்கு பொது அமைப்புகள் அறிவித்துள்ளது.

தையிட்டி வழக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரை எதிராக போராடியவர்களுக்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (05) அன்று  எடுத்துக் கொள்ளப்பட்டபோதே வழக்கு பெப்ரவரி 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. .

நீதிமன்றத்தில் ஜோன்ஸ்டன் ஆஜர்

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) திங்கட்கிழமை (05) அன்று ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார்.