சியோனிச கோழை இஸ்ரேலை விட்டும் தப்பி ஓட்டம் நெதன்யாகுவை ஏற்றிக் கொண்டு அவருடைய விமானம் மர்மமான இடத்திற்குப் புறப்பட்டுள்ளது.

The Formula
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டல்களுக்கு ரஷியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் உள்நாட்டுப் போராட்டங்களைச் சாக்காக வைத்து அந்நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், கச்சத்தீவை சுற்றியுள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் புதன்கிழமை (14) அதிகாலை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயன்ற 237 பறவைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகை கைப்பற்றிய கடற்படையினர் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

திருகோணமலை கோட்டை கடற்கரையில் தற்காலிக இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தபோது ஏற்பட்ட மோதல் தொடர்பாக, நீதிமன்ற உத்தரவின் பேரில், விளக்கமறியலில் உத்தரவின் கீழ் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வனவாசி பலாங்கொட கஸ்ஸப தேரர்,உணவை உண்பதற்கு மறுத்து, சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை, வியாழக்கிழமை (15) காலை முதல் ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.