மறு அறிவிப்பு வரை திட்டமிடப்பட்ட ரயில் சேவை நேரங்கள்

மறு அறிவிப்பு வரை  இன்று திங்கட்கிழமை (01) முதல் எதிர்வரும் 5ஆம் திகதி வரை திட்டமிடப்பட்ட ரயில் சேவை நேரங்கள் அட்டவணையை  இலங்கை ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ளது.

“பொருட்களின் விலையை அதிகரித்தால் முறைப்பாடு செய்க”

நாட்டின் சீரற்ற வானிலையை தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தும் வர்த்தகர்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் மூலம் முறைப்பாடளிக்குமாறு  நுகர்வோர் விவகார அதிகார சபை வலியுறுத்தியுள்ளது. 

வட்டுவாகல் பாலம் கடும் சேதம் ; மாற்று வழியாக கேப்பாப்பிலவு வீதி

வட்டுவாகல் பாலம் கடுமையாக சேதமடைந்துள்ளதால், இப்பாதை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. எனவே விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணம் செய்பவர்கள் மாற்று வழியாக கேப்பாப்பிலவு வீதியை பயன்படுத்துமாறு பேரிடர் மேலாண்மை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

பண்ணையில் சிக்கியவர்கள் மீட்பு

முல்லைத்தீவு முத்தியங்காட்டு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, குமுளமுனை, நீத்தகை மற்றும் ஆனந்தபுரம் ஆகிய இடங்களில் இரண்டு நாட்களாக விவசாய நிலங்களில் சிக்கித் தவித்த ஏழு விவசாயிகளையும், ஒரு சிறுவனையும் முல்லைத்தீவு மீனவர்கள் மற்றும் இளைஞர்கள் குழு திங்கட்கிழமை (01) அன்று பாதுகாப்பாக மீட்டனர்.

களனி கங்கையின் நீர்மட்டம் 8.45 அடியாக உயர்வு

நாகல்கம் தெருவில் களனி கங்கையின் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 8.45 அடியாக வெள்ள நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

டித்வா புயல் தாக்கத்தினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்று மாலை 5 மணி வரையான காலப்பகுதி வரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 367 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசுத் தலைவர் தோழர்.அனுர குமார திசநாயகா அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை

“ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும் அறிவோம். முழு நாடும் பேரழிவிற்கு உட்படுத்தப்பட்ட முதல் அனுபவம் இது.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை- இலங்கை ஜனாதிபதி அனுர

“”ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும் அறிவோம். முழு நாடும் பேரழிவிற்கு உட்படுத்தப்பட்ட முதல் அனுபவம் இது.

இலங்கைக்கு ஆபத்து குறையவில்லை : அதிர்ச்சி தகவல்

இலங்கையை தாக்கிய டிட்வா சூறாவளி நாட்டை கடந்து சென்றாலும் ஆபத்து இன்னும் குறையவில்லை என வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.

இன்று தமிழக – புதுவை கடற்கரையை நெருங்கும் ’டிட்வா’

‘டிட்வா’ புயல் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) மாலைக்குள் தமிழக – புதுவை கடற்கரையை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.