”எனது தகைமையை பேரணியில் விளக்குவேன்”

தனது கல்வித் தகுதிகள் குறித்து பரவி வரும் கூற்றுக்களை இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்று நிராகரித்தார், அனைத்து “அவதூறுகள் மற்றும் அவமானங்களும்” 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் SLPP பேரணியில் உரையாற்றப்படும் என்று வலியுறுத்தினார்.

1.5 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்

இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக கடத்திச் செல்வதற்கு இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.4.50 கோடி மதிப்புள்ள 1 கிலோ 500 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் எஸ்.பி பட்டினம்  அருகே வைத்து தனியார் பேருந்தில் இருந்து  செவ்வாய் (18) அன்று காலை சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமலை புத்தர்: “இரு தரப்புக்கும் தொடர்பே இல்லை”

“திருகோணமலைக் கடற்கரையில் புத்தர்சிலை வைக்கப்பட்ட விடயத்திலும்,பின்னர் சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்ட விடயத்திலும் இங்கு வாழும் தமிழ் மக்களுக்கோ,முஸ்லிம் மக்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என கல்யாண வன்ஸ திஸ்ஸ தேரர் கூறினார்.

”வடக்கு ,கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம்”

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும்  இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

திருமலை விஹாரை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானங்களை அப்படியே விட்டுவிடவும், புதிய கட்டுமானங்கள் அல்லது மாற்றங்களைச் செய்யக்கூடாது என்றும் திருகோணமலை பிரதான நீதவான் எம்.என்.எம். சம்சுதீன் விஹாராதிகாரி தேரருக்கு புதன்கிழமை  (19) உத்தரவிட்டார்.

திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது: ஜனாதிபதி

திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகின்றீர்கள்.இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள். இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. மீண்டும் பழைய இனவாத நாடகத்தை ஏற்படுத்த முடியாது .அதற்கு இடமும் கிடையாது என ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார்.

ரஷ்யாவுடன் வர்த்தகசெய்தால்…. 500 சதவீத கூடுதல் வரி விதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை

ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு 500 சதவீத மேலதிக வரியை விதிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

2025 ஆண்டு CEBயின் இலாபம் ரூ. 3.58 பில்லியனாக சரிவு

இலங்கை மின்சார வாரியம் (CEB) அதன் நிதி செயல்திறனில் குறிப்பிடத்தக்க சரிவை பதிவு விபரத்தை வௌயிட்டுள்ளது. அதன் சமீப நிதி அறிக்கைகளின் படி, 2025 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டிற்கான இலாபம் ரூ. 3.58 பில்லியன் கடுமையாகக் குறைந்துள்ளது.

பாராளுமன்ற ஓய்வூதிய (ரத்துசெய்யும்) சட்டமூலத்துக்கு அங்கிகாரம்

பாராளுமன்ற ஓய்வூதிய (ரத்துசெய்யும்) சட்டமூலத்தை ஒப்புதலுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

திருகோணமலை திஸ்ஸ தேரர் ரிட் மனுத்தாக்கல்

திருகோணமலையில் உள்ள சம்புத்தி ஜெயந்தி போதிராஜ விஹாரையின் தலைமை விஹாராதிபதியான கல்யாணவன்ச திஸ்ஸ தேரர், திருகோணமலையில் உள்ள சம்புத்தி ஜெயந்தி போதிராஜ விஹாரையில் உள்ள இரண்டு தேவாலயங்களை இடிக்க கடலோரப் பாதுகாப்பு  பணிப்பாளர் நாயகம் எடுத்த முடிவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.