27/03/2025 அன்று மாகாண மூலிகைக்கிராமம் மற்றும் கிராமிய சித்த வைத்தியசாலையின் பதில் மருத்துவப் பொறுப்பதிகாரியாக நான் பொறுப்பேற்றுக் கொண்ட வேளையில், குறித்த நிறுவனம் நிர்வாக, கட்டமைப்பு மற்றும் வள மேலாண்மை சார்ந்த சவால்களின் தாக்கத்தில் காணப்பட்டது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. அதனை கேள்வியுற்ற விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜராகினார். அதனையடுத்து பிடியாணை மீளப்பெறப்பட்டது.
துன்னாலை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் புதன்கிழமை (14) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போது பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது
திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற பெளத்த மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து,அதில் புதிதாக புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களத்தால் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை – ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைத்தோட்ட கடற்கரைப் பகுதியில் பௌத்த அடையாளங்களைக் கொண்ட தெப்பமொன்று புதன்கிழமை (14) அன்று கரை ஒதுங்கியுள்ளது.
யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது செவ்வாய்க்கிழமை (13) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது.
சர்வாதிகார ஆட்சிகள் படிப்படியாகச் சிதைந்து, பின்னர் திடீரென்று வீழ்ச்சியடைகின்றன, ஆனால் ஈரான் இன்னும் அந்த நிலையை அடையவில்லை. Authoritarian regimes die gradually then suddenly, but Iran is not there yet. Jeremy Bowen International editor.
சுகாதார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி உட்பட இதற்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னைய அரசாங்கங்கள் வழங்கி வந்த ஓய்வூதியம், Vehicle Permit உள்ளிட்ட மக்கள் பணத்திலான அதீத சலுகைகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சலுகைகளை அதிகளவில் இழப்பது தற்போதைய ஆளுங்கட்சியும், அதன் 159 பாராளுமன்ற உறுப்பினர்களுமே. இருந்தபோதிலும், மக்கள் சேவைக்கு வரும் பிரதிநிதிகளுக்கு மக்கள் பணத்தில் இத்தகைய அதீத சலுகைகள் தேவையற்றவை என்பதில் தற்போதைய அரசாங்கம் உறுதியாக உள்ளது.இவ்வாறான சிறந்த திட்டங்கள் மூலம் மக்களின் பணம் மீண்டும் பொதுமக்களுக்கே நன்மைகளாகச் சென்றடைவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது