(தோழர் ஜேம்ஸ்)

இலங்கை அரசியலை மேல் எழுந்தவாரியாக பார்ப்பவர்களுக்கு யார் இவர்கள் … யார் இவர்… என்று கேட்கத் தோன்றும். ஆனால் அரசியலை ஆழமாக பார்பவர்களுக்கு இவர்கள்.. இவர்… மிக முக்கியமானவர்களாகவே தோன்றுவர் தற்போதைய அரசியல் சூழலில்.
The Formula
அன்பார்ந்த நண்பர்களே! தோழர்களே!!
கடந்த 24-11-2025 செவ்வாய் கிழமை ஜே வி பி இன் செயலாளர் தோழர் ரில்வின் சில்வா அவர்களை பிரித்தானியாவில் செயற்படும் “புலம் பெயர் இலங்கைத் தமிழர்” அமைப்பின் சார்பில் உரையாட வாய்ப்புக் கிடைத்தது. அந்த உரையாடலின் சாராம்சத்தினை அதன் முக்கியத்துவம் கருதி பதிவு செய்கிறேன்.
புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்று (25) ‘லங்காதீப’த்திடம் கூறுகையில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (பொஹோட்டுவ) 20க்கும் மேற்பட்ட முன்னாள் தலைவர்கள் அடுத்த ஜனவரி மாதம் மீண்டும் கட்சியில் இணைவார்கள்.
சிவனொளிபாத யாத்திரை காலத்துடன் இணைந்த வகையில், சிவனொளிபாத தளத்தின் சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதையும், யாத்திரிகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ‘Clean Sri Lanka’வேலைத்திட்டம், சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து செயற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் செவ்வாய்க்கிழமை (25) அன்று ஆரம்பிக்கப்பட்டது.
திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த 15 ஆம் திகதி அன்று புதிதாக அமைத்த பெளத்த பிக்கு மற்றும் அவருடன் உடன் இருந்தவர்களுக்கு எதிர்வரும் ஜனவரி 14 ந் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிபதி எம்.என்.எம்.சம்சுடீன் புதன்கிழமை(26) அன்று அழைப்பாணை விடுத்துள்ளார்.
நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு கொண்டுவரப்பட்டது . காலநிலை மாற்றம் காரணமாக, வட மாகாணத்தின் நெடுந்தீவில் அமைந்துள்ள தேர்வு மையத்திலிருந்து க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் இலங்கை விமானப்படையினரால் இன்று இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகாப்டர் மூலம் வட மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், நுவரெலியாவின் கந்தபொல பகுதியில் உள்ள பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான சாலையில் உள்ள கந்தபொல கோட்லோஜ் சந்தி முற்றிலுமாக நீரில் மூழ்கியதால், சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, மேலும் அப்பகுதியின் தாழ்வான பகுதிகளில் காய்கறி சாகுபடியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.