நுவரெலியா தொடர்பில் ஜனாதிபதி அதிரடி கவனம்

நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் திங்கட்கிழமை (08) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது.

“மட்டக்களப்பிலிருந்து மலையகத்திற்கு நிவாரணப்பணி”

“மட்டக்களப்பிலிருந்து மலையகத்திற்கான நிவாரணப்பணி” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்களை மலையகத்திற்கு கொண்டு சேர்க்கும் பயணம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (07) அன்று முன்னெடுக்கப்பட்டது.

“நீர்த்தேக்கங்களால் இனி ஆபத்து இல்லை”

நாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

முட்டையின் விலை உயர்ந்தது

சந்தையில் ஒரு முட்டையின் சில்லறை விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு முட்டையின் விலை ரூ.40 முதல் 50 வரை விற்கப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேரழிவுகளுக்குப் பிறகு மாரடைப்பு அதிகரிப்பு

சூறாவளி, டிட்வா போன்ற பெரிய பேரழிவுகளுக்குப் பிறகு மாரடைப்பு மற்றும் பிற இருதய அவசரநிலைகள் கிட்டத்தட்ட 40% அதிகரிக்கும் என்று இருதயநோய் நிபுணர் டாக்டர் கோதபயா ரணசிங்க கூறினார். உலகளாவிய ஆராய்ச்சியில்,  இது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் மீண்டும் திறப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்ப்பாசன குளமான உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். ஒன்றரை  அடி வரை நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.   

பேரிடர் மரணங்கள் உயர்ந்தன

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635  ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) திங்கட்கிழமை (08) அன்று தெரிவித்துள்ளது. அத்துடன், 192 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்பு மற்றும் தேடுதல் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பண்ணை கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – பண்ணை கடலில் மூழ்கி யாழ் நகர் பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை (07) உயிரிழந்துள்ளனர். பண்ணை கடலில் நீந்த சென்ற நால்வர் நீரில் மூழ்கியுள்ளதை கண்ட அப்பகுதி மக்கள் நால்வரையும் மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் அதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம் ;

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட  நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் சிரமதானம்.

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசசபைக்கு உட்பட்ட ஈச்சலம்பற்று வைத்தியசாலை, முத்துச்சேனை மகா வித்தியாலயம் , வெருகல் முருகன் ஆலயம் போன்ற இடங்களில் இன்று {07
12.25 தமிழர் சமூக ஜனநாயகக்கச்சியின் திருகோணமலை பிராந்திய அமைப்பு செயலாளர் தோழர் சின்ன மோகன் தலைமையில் ‘சமத்துவம் தொண்டர்படையினரால் சிரமதானம் சொய்யப்பட்டது.