அனர்த்த சூழ்நிலை: வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகை வழங்குவதில் எவ்விதமான முறைகேடுகளுக்கோ, பாரபட்சங்களுக்கோ அல்லது ஊழலுக்கோ இந்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.

2,000 மலைகளில் விரிவான அறிவியல் ஆய்வு

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், மத்திய சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள கிட்டத்தட்ட 2,000 மலைகளில் விரிவான அறிவியல் ஆய்வை நடத்தி, அரசாங்கத்திற்கு முழு அறிக்கையையும் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது. இந்த அமைப்பில் நிபுணர்கள் பற்றாக்குறை இருப்பதால், பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த மாணவர்களையும், நீர்வள வாரியம் உள்ளிட்ட பிற நிறுவனங்களின் நிபுணர்களையும் இந்தப் பணிக்காக ஈடுபடுத்த இந்த அமைப்பு நம்புகிறது.

வருமான வரியை செலுத்த காலக்கெடு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி வருமானத்தை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை உள்நாட்டு வருவாய் துறை டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. ‘தித்வா’ சூறாவளியின் தாக்கம் மற்றும் இலங்கையின் பல பகுதிகளை பாதித்த தீவிர வானிலை காரணமாக, இந்த காலக்கெடு முன்னதாக டிசம்பர் 8 வரை நீட்டிக்கப்பட்டது.

மட்டு.சிறை கைதிகளின் மனிதாபிமானம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களாக நேற்று (05) கையளித்துள்ளனர்.

சஜித் அணியின் உறுப்பினர் இராஜினாமா

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான சமகி ஜன பலவேகய (SJB) வெலிகம தேர்தல் அமைப்பாளரும் முன்னாள் வெலிகம மேயருமான ரெஹான் ஜெயவிக்ரம கட்சியில் இருந்து தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவுக்கு எழுதிய கடிதத்தில், கட்சியின் தற்போதைய கொள்கைகளில் தான் இனி திருப்தி அடையவில்லை என்று ஜெயவிக்ரம கூறினார்.

மூதூரில் குடிநீர் குழாயை இணைக்கும் பணி முன்னெடுப்பு

எஸ்.கீதபொன்கலன் மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும் பாரிய பணி முன்னெடுப்பு மூதூர் – நீலாபொல பகுதியில் இருந்து மூதூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை கொண்டு செல்கின்ற பாரிய குழாயானது அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் உடைக்கப்பட்டு சுமார் 150 மீற்றருக்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டிருந்தது. இதனை இழுத்து கொண்டு வந்து இணைக்கும் பணி இன்று(6)காலை முதல் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அனர்த்த மரணங்கள் அதிகரிப்பு

அனர்த்தங்களால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது. இயற்கை பேரிடர்களால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 213 ஆகும். இந்த பேரிடர்களால் 576,626 குடும்பங்களைச் சேர்ந்த 2,054,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 69,635 வீடுகள் பகுதியளவிலும் 4,309 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

ஒருங்கிணைந்த பொறிமுறை தேவை:ஜனாதிபதி வலியுறுத்தினார்

ஒரு அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதில், சாதாரண அரசு இயந்திரங்களுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை தேவை என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (06) காலை நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஜனாதிபதி இதனைக் கூறினார்.

மாவட்டத்தில் நெடுஞ்சாலைகள், மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் அவசர திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் நிறைவு நேரம் குறித்து ஜனாதிபதி தனித்தனியாக மதிப்பாய்வு செய்தார்.

சாலை அமைப்பு நிரந்தரமாக அமைக்கப்படும் வரை அடுத்த 25 நாட்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி சாலை பழுதுபார்ப்புகளை விரைவாக முடிக்குமாறு ஜனாதிபதி சாலை மேம்பாட்டு அதிகாரசபைக்கு பணித்தார்..

புட்டின்: ‘போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளை ஐரோப்பிய நாடுகள் நாசமாக்கி வருகின்றன’

நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் உக்ரைன்-ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வர எடுக்கப்படும் முயற்சிகளை ஐரோப்பிய நாடுகள் நாசமாக்கி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜனாதிபதியின் விசேட நிவாரண அறிவிப்பு

நிவாரணம் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் விசேட அறிவிப்பு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு.. *வீடுகளை சுத்தம் செய்ய 25000 ரூபா *அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய 50,000 ரூபா *வீடுகள் இல்லாதவர்களுக்கு வாடகை வீட்டுக்கு மாதந்தம் 25,000 ரூபா (6 மாதங்கள்) 3 மாதங்களுக்கு வாழ்வாதார வழிக்கு 50,000 ரூபாய்