மீண்டும் கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம்

கொழும்பு மாநகரசபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீண்டும் 31ஆம் திகதி சபைக்கு சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாக்கெடுப்பில் தோல்வியடைந்த வரவு செலவுத் திட்டத்தை மீண்டும் சபைக்கு சமர்ப்பித்து அனுமதித்துக் கொள்வதற்காக புதன்கிழமை (31) காலை 10 மணிக்கு மாநகர சபை மேயர் விராய் கெலி பல்தசார் தலைமையில் மாநகர சபை கூடவுள்ளது.

முஸ்லிம்களுக்கு தூரநோக்குடனான அரசியலின் தேவை

(மொஹமட் பாதுஷா) 

மக்களை மையமாகக் கொண்ட நீண்டகால திட்டமும் தூரநோக்கும் இல்லாத அரசியலின் விளைவுகளை இலங்கை முஸ்லிம் சமூகம் அனுபவிப்பதாகவே தோன்றுகின்றது. முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை எப்படி, யார் முன்வைப்பது? அவற்றிற்கு எவ்வாறு தீர்வைப் பெறுவது என்பதெல்லாம் விடைதெரியாத கேள்விகளாகியுள்ளன.  

’’குழந்தைகளை கூட பார்க்கல’’ இரவில் இந்துக்களின் வீடுகளுக்கு தீவைப்பு

வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாகவே பதற்றம் மீண்டும் அதிகரித்துவிட்டது. அங்கு இத்துகளைக் குறிவைத்து நடக்கும் வன்முறைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு நள்ளிரவு நேரத்தில் இந்துக்கள் வசிக்கும் 5 வீடுகளை மர்ம நபர்கள் தீவைத்துக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டக்ளஸ் தேவானந்தா வைத்தியசாலையில் அனுமதி

ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார்.

நல்லூர் உறுப்பினர் கஞ்சாவுடன் கைது

யாழ்ப்பாணத்தில் நான்கு கிலோகிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்கா அருகில் செவ்வாய்க்கிழமை (30) அன்று அதிகாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டார். வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

பெண் கிராம அலுவலரை தாக்கமுயற்சி: போராட்டம் வெடித்தது

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை (30) காலை 9.30 மணி முதல் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையில்   முதல் மறு அறிவித்தல் வரை சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சம்மாந்துறையில் வியாழன் முதல் தடை

சம்மாந்துறை நகரின் பிரதான வீதியில் பாதையோரங்களில்  வியாபாரம் செய்வது  வியாழக்கிழமை(01)  முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் செவ்வாய்க்கிழமை (30) அன்று தெரிவித்தார்.

விஜய்க்கு நாமல் ராஜபக்ஷ அட்வைஸ்

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய்க்கு,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP)   பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, அரசியல் தொடர்பான முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இலக்கை தாண்டியது சுங்கம்

2025 ஆம் ஆண்டு ,இலங்கை சுங்கத் திணைக்களம்  வரலாற்றில் அதிக வருமானத்தை ஈட்டிய வருடமாக பதிவாகியுள்ளது என்றும், எதிர்பார்த்த வருமான இலக்கான 2115 பில்லியன் ரூபாய் வருமானத்தை தாண்டி,   300 பில்லியன் ரூபாய் மேலதிக வருமானத்துடன் 2026 ஆம் ஆண்டை ஆரம்பிக்க முடிந்துள்ளதாகவும் இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் எஸ்.பீ அருக்கொட தெரிவித்தார்.