கடந்த சில நாட்களாக மீண்டும் பெய்து வரும் மழையால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தை சாதாரண மட்டத்திலேயே வைத்துக்கொள்வதற்காக குறித்த வான் கதவு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரூ. 1.38 பில்லியனை ஐ.நா ஒதுக்கியுள்ளது
வடகிழக்கு பருவமழை: பல மாகாணங்களில் பலத்த மழை பெய்யும்
விவசாயத்துறை பாதிப்பு தொடர்பாக கலந்துரையாடல்
இந்தியாவிலிருந்து மற்றுமொரு விமானம் வந்திறங்கியது
மன்னாருக்கு முன்னெச்சரிக்கை
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை சற்றுமுன் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று செவ்வாய்க்கிழமை (9) திறக்கப்பட்டுள்ளது.
பதுளைக்கு மீண்டும் எச்சரிக்கை
பாடசாலைகள், பரீட்சைகள் தொடர்பிலான விசேட அறிவிப்பு
பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பாடசாலைகளை தவிர அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும், டிசம்பர் 16 ஆம் திகதி பாடசாலை தொடங்கும். மூன்றாம் தவணை பரீட்சைநடத்தப்படாது. 11 ஆம் வகுப்புக்கான பரீட்சை ஒத்திகை மட்டுமே நடத்தப்படும். க.பொ.த உயர்தரத் தேர்வில் நடத்தப்படாத மீதமுள்ள பாடங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி தொடங்கும் .. ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு டிசம்பர் 15 ஆம் திகதி பாடசாலை தொடங்கும்.
உலகில் வாழ வேண்டிய மனிதன்
மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் நன்றி தெரிவிப்பு
டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்குத் துரித நடவடிக்கை எடுத்தமைக்காக மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று திங்கட்கிழமை (08.12.2025) கடிதமொன்றைக் கையளித்தனர்.


