உயிர் காக்க வேண்டிய முக்கிய தகவல்கள்!
நண்பர்களே,NBRO இன்று மாலை 4.00 PM வெளியிட்ட அசுர எச்சரிக்கையால்,நாட்டின் மத்திய மலைநாடு முழுவதும் மண் சரிவு அபாயம் உச்சநிலைக்கு சென்றுவிட்டது.

The Formula
கடந்த சில நாட்களாக மீண்டும் பெய்து வரும் மழையால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தை சாதாரண மட்டத்திலேயே வைத்துக்கொள்வதற்காக குறித்த வான் கதவு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை சற்றுமுன் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று செவ்வாய்க்கிழமை (9) திறக்கப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பாடசாலைகளை தவிர அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும், டிசம்பர் 16 ஆம் திகதி பாடசாலை தொடங்கும். மூன்றாம் தவணை பரீட்சைநடத்தப்படாது. 11 ஆம் வகுப்புக்கான பரீட்சை ஒத்திகை மட்டுமே நடத்தப்படும். க.பொ.த உயர்தரத் தேர்வில் நடத்தப்படாத மீதமுள்ள பாடங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி தொடங்கும் .. ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு டிசம்பர் 15 ஆம் திகதி பாடசாலை தொடங்கும்.