‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைப் பலரும் வழங்கிவருகின்றனர். ஒருசிலர் தங்களுடைய விஸ்தீரமான காணியை, பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு இலவசமாக வழங்க முன்வந்துள்ளனர்.
வடக்கு மாகாணத்திற்கு பலத்த மழை
தாய்லாந்து பாராளுமன்றம் கலைப்பு
கம்போடியாவுடனான எல்லையில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக நீடித்த மோதல்களுக்குப் பிறகு தாய்லாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளது, 45 முதல் 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் திகதி அறிவிக்கப்படும்
’இலங்கையர் தினம்’ தேசிய நிகழ்வு ஒத்திவைப்பு
ஜப்பானில் பாரி நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் இன்று காலை 11:44 மணிக்கு (0244 GMT) அமோரி மாகாணத்தின் கடற்கரையில் 20 கிமீ (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. 6.7 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதனால் 1 மீட்டர் (39 அங்குலம்) உயரம் வரை அலைகள் எழும்பும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) எச்சரித்துள்ளது.
கல்முனை விபத்தில் 650 கோழிகள் உயிரிழப்பு
ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் புதுக்குடியிருப்பில் கோழிகளை ஏற்றிவந்த லொறி வீதியின் நடுவே படுத்திருந்த கட்டாக்கில் மாடுகளுடன் மோதியதில் லொறி தடம் புரண்டதால் லொறியிலிருந்த 650 கோழிகளும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்ப புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று ( 12) அதிகாலை 4.30 மணியளவில் கோழி ஏற்றிவந்த கப் ரக வாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியாவுக்கு இரவில் செல்ல வேண்டாம்
முன்னாள் சபாநாயகர் கைது
சப்புகஸ்கந்தையில் நேற்று இரவு நடந்த விபத்து தொடர்பாக முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் விபத்தைத் தவிர்க்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு
கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு அவர் செலுத்திய ஜீப் வண்டி, காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான நிலையில், சப்புகஸ்கந்த பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும், இன்றைய தினம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.