புதிய இஸ்லாமிய நாடு உதயம்

இந்திய பெருங்கடல் அருகே இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வரும் சோமாலிலாந்தை   தனிநாடாக இஸ்ரேல் சனிக்கிழமை (28) அன்று அங்கீகரித்துள்ளது.

வணிக நிலையங்களுக்கு ஒருவருட அவகாசம்

கட்டிட அனுமதி பெறப்படாத வணிக நிலையங்களுக்கு ஒருவருட அவகாசம், பருத்தி துறை பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் உதயகுமார் யுக்தீஸ் தலைமையில் திங்கட்கிழமை (29) அன்று காலை 9:30 மணியளவில் இறைவணக்கத்துடன் ஆரம்பமானது.

நாளை அடையாள தொழிற்சங்க போராட்டம்

அரசாங்கத்தினால் அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக சட்டத்திருத்தத்தில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் இது தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் அனுப்பிய இரண்டு கடிதங்களை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரியும், அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் அடையாள தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

நிபந்தனை மீறப்பட்டால் திரும்பப் பெறப்படும்

ஊடக அமைச்சினால் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு  வழங்கப்படும் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் மீறப்பட்டால், சம்பந்தப்பட்ட அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரத்தைத் திரும்பப் பெறும் அதிகாரம் ஊடக அமைச்சருக்கு உள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தாவின் உயிருக்கு ஆபத்து? – முன்னாள் ஆளுநர் UNP சுரேன் ராகவன்

கைது செய்யப்பட்டு மஹர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் ஆளுநரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமனா சுரேன் ராகவன் கவலை தெரிவித்துள்ளார்.

“பட்ஜெட் தோற்றாலும், ஒரு செல்வந்த நகரத்தை உருவாக்கியே தீருவோம் – பல்தசார்”

“ஒரு பணக்கார நகரத்தில் அழகான வாழ்க்கையை உருவாக்கும் உறுதிப்பாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை” என கொழும்பு மேயர் திருமதி வ்ராய் கலி பல்தசார் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறை திரைப்படம்

(Kumaresan Asak)

‘இன்றைக்குள் முடித்துவிட வேண்டும்’ என்று நேற்று ஓய்வின்றிச் செய்துகொண்டிருந்த வேலையின்போது மகன், “இந்தப் படம் நல்லா இருக்குதுன்னு சொல்றாங்க, வர்றீங்களா,” என்று கேட்க, சரிதான் என்று கணினியை மூடிவிட்டுப் புறப்பட்டேன். அது எவ்வளவு சரியான முடிவு என்று காட்சிக்குக் காட்சி உணர வைத்தது ‘சிறை’.

பூநகரி – நல்லூர் கிராமத்தில் 16 ஆண்டுகளுக்குப் பின் காணிகள் விடுவிப்பு


கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் கிராம சேவையாளர் பிரிவில், கடந்த 16 ஆண்டுகளாக இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டிருந்த 25 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர்செய்கை மற்றும் மேட்டுநிலக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

தோழர் டக்ளசின் யாரும் அறியா சாதனைகள்

நான் சு. பொன்னையா. 1990 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஈபிடிபி இயக்கத்தில் இருந்தேன்.
அந்தக் காலத்தில் நடந்த மிகச் சீரழிந்த, மனிதநேயத்துக்கு எதிரான சம்பவங்களை நேரில் பார்த்திருக்கின்றேன்
சிலவற்றில் நானும் உடன் இருந்திருக்கிறேன்
நான் எதற்கும் பயப்படவில்லை. உண்மையை சொல்ல வந்திருக்கிறேன்.

டக்ளஸூக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனவரி 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) அன்று  ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.