1,750 ரூபா சம்பளம் வழங்கும் ஒப்பந்தம் கைச்சாத்தானது

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரிப்பதற்கான   ஒப்பந்தம்  பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் வைத்து வெள்ளிக்கிழமை (30) காலை கைச்சாத்தானது .

உண்ணாவிரதிகளை பேச்சுக்கு அழைத்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுடன் கலந்துரையாடல் நடத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முடிவு செய்துள்ளார். இந்த கலந்துரையாடலை அடுத்த செவ்வாய்க்கிழமை (3) மாலை 6 மணிக்கு நடத்த ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் “அரகலய” நாடு முழுவதும் பற்றியெரியும் போராட்டங்கள்: டிரம்பிற்கு எதிராக மக்கள் வீதியில்!

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக குடிவரவு கொள்கைகள் மற்றும் சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்க மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளன.போராட்டத்திற்கான முக்கிய காரணங்கள் – அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) மேற்கொண்டு வரும் தீவிரமான நாடு கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் பெரும் திரளாகப் போராடி வருகின்றனர்.

’ஈரான் மீதான தாக்குதலுக்கு துணைபோக மாட்டோம்’ – சவூதி அரேபியா

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வரும் நிலையில், ஈரானுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது.

16,000 ஊழியர்களை பணிநீக்கம் ’அமேசன்’

உலகின் மிகப்பெரிய நிறுவனமான அமேசன், தனது கார்ப்பரேட் பிரிவில் பணியாற்றும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அந்நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய பணிநீக்கம் இதுவாகும்.

39வது ஆண்டு நினைவேந்தல்…

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39வது ஆண்டு நினைவேந்தல் புதன்கிழமை (28) அன்று மகிழடித்தீவு சந்தியில் அமைந்துள்ள படுகொலை நினைவு தூபியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

யுத்த காலத்தில் மூடப்பட்ட வீதிகள் திறந்து வைக்க நடவடிக்கை

மன்னார், நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு மக்கள் பாவைனையின்றி காணப்பட்ட வீதி மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. 1983-1984 ஆண்டு காலப்பகுதி வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த குறித்த வீதி  நீண்ட காலமாக மக்கள் பயன்பாடு இன்றி மூடப்பட்டு காணப்பட்டது.

சிறுமியை வன்புணர்ந்த போதகருக்கு 10 ஆண்டு சிறை உறுதி

புத்தளம் மாவட்டம், கொட்டுகச்சியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பணிபுரியும் போதகர் ஒருவர், 15 வயது சிறுமியுடன் பழகி, பின்னர் கடவுளுக்கு சேவை செய்ய அழைத்த பின்னர் அவளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (29) அன்று உறுதி செய்தது.

நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்

சுதந்திர தின பேரணிக்கான முன்னாயத்த ஒத்திகை நடவடிக்கைகள் ஜனவரி 30, 31 மற்றும் பெப்ரவரி 01, 02 ஆகிய திகதிகளில் நடைபெறும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா குறிப்பிட்டுள்ளார்.  78 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

‘திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை’ என்கிறது IMF

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.