பதில் தாக்குதல் நடத்துவோம்: ஈரான் எச்சரிக்கை

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானில் தொடர்ந்தும் 14 நாள்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் 203 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

‘ஈரான் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டியது’

ஈரான் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 500-ஐத் தாண்டியுள்ளதாக ஐ. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட எச்.ஆர்.என்.ஏ ஞாயிற்றுக்கிழமை (11) தெரிவித்துள்ளது. இரண்டு வார ஆர்ப்பாட்டங்களில் 490 ஆர்ப்பாட்டக்காரர்களும், 48 பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்ததோடு, 10,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அயலக தமிழர் மாநாட்டில் செந்தில் தொண்டமான் பங்கேற்பு

இந்தியாவில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான அயலக தமிழர் மாநாட்டை தமிழ் நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்ததுடன், இதில் சிறப்பு விருந்தினராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன், முன்னாள் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

ஓட்டோக்களை திருடும் கும்பல் கைது

தலவத்துகொட – கிம்புலாவல பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​யட்டியந்தோட்டை, பலாங்கொடை, பதுளை மற்றும் பத்தரமுல்லை பகுதிகளில் சந்தேக நபர்களால் திருடப்பட்ட மேலும் பத்து முச்சக்கர வண்டிகளை காவல்துறையினர் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைமன்னார் ரயில் பாதைகளில் மறுசீரமைப்பு ஆரம்பம்

வடக்கு மற்றும் தலைமன்னார் ரயில் பாதைகளில் மறுசீரமைப்பு பணிகள் இன்று (11) தொடங்கியது, இதற்கு இந்திய அரசின் 5 மில்லியன் அமெரிக்க டாலர் மானியம் வழங்கப்பட்டது.

மத்திய மலைநாட்டின் கடும் மூடுபனி

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் கடும் மூடுபனி பல பகுதிகளில் பொதுமக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்துள்ளது. பல நாட்களாக காலையிலும் மாலையிலும் மூடுபனி நிலவுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விமலின் சத்தியாக்கிரகத்துக்கு நீதிமன்றம் நிபந்தனை

புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்ல, பெலவத்தவில் உள்ள இசுருபாய கல்வி அமைச்சின் முன் நடைபெற்று வரும் சத்தியாக்கிரகத்தை நீக்க உத்தரவிடக் கோரிய தலங்கம காவல்துறையினரின் கோரிக்கையை கடுவெல நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச நிராகரித்தார், மேலும் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட சத்தியாக்கிரகத்தைத் தொடர அனுமதி வழங்கினார்.

மகளின் விடுகை பத்திரத்துக்காக ஆணைக்குழு வரை சென்ற தாய்

நுவரெலியா கல்வி வலயத்தில் உள்ள கோட்டம் 2 இல் பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற தனது பிள்ளையை வேறொரு பாடசாலைக்கு மாற்றுவதற்காக பெற்றோர் விருப்பம் தெரிவித்த போதிலும் அந்த பாடசாலையின் அதிபர் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

“மக்கள் மயக்கமடைந்தபோதும் பேச்சை நிறுத்தாதது ஏன்?”

மக்கள் மயக்கமடைந்து விழுந்தபோதும் ஏன் நீங்கள் பேச்சை நிறுத்தவில்லை?, எந்த உடனடி நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்? கூட்டத்துக்கு தாமதமாக வந்தது ஏன்? என்பன உட்பட பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் எழுப்பியுள்ளனர். 

பேசுவது ஜனநாயகம் ; நடத்துவது காட்டு தர்பார்

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

ஒரு நாட்டில் கொடுங்கோல் ஆட்சியை நடத்தும் ஒரு தலைவனுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் சர்வதேச நிறுவனங்களிடமும் சிலவேளை குறிப்பிட்ட சில வெளிநாடுகளிடமும் முறையிடுவது சகஜமான விடயமாகும். இலங்கையிலும் சில தமிழ் அமைப்புக்கள் மற்றும் கட்சிகள் வருடா வருடம் ஐ.நா. மனித உரிமை பேரவையிடம் போர் காலததில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி கேட்டு முறையிடுகின்றன.