(எம்.எஸ்.எம்.ஐயூப்)
ஒரு நாட்டில் கொடுங்கோல் ஆட்சியை நடத்தும் ஒரு தலைவனுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் சர்வதேச நிறுவனங்களிடமும் சிலவேளை குறிப்பிட்ட சில வெளிநாடுகளிடமும் முறையிடுவது சகஜமான விடயமாகும். இலங்கையிலும் சில தமிழ் அமைப்புக்கள் மற்றும் கட்சிகள் வருடா வருடம் ஐ.நா. மனித உரிமை பேரவையிடம் போர் காலததில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி கேட்டு முறையிடுகின்றன.

