விழுந்தோடி வந்தார் விமல் : பிடியாணை வாபஸ்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. அதனை கேள்வியுற்ற விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜராகினார். அதனையடுத்து பிடியாணை மீளப்பெறப்பட்டது.

“உலகிலேயே மிக மோசமான மனிதர் ட்ரம்ப்”

உலகின் மிக மோசமான மனிதர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் என ஹொலிவூட் நடிகர் மார்க் ருப்பலோ விமர்சித்துள்ளார்.

பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு

துன்னாலை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய,  யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் புதன்கிழமை (14) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போது பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது 

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: 4 தேரர்கள் உட்பட ஒன்பது பேருக்கு விளக்கமறியல்

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற பெளத்த மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து,அதில் புதிதாக புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களத்தால் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கரையொதிங்கிய மியன்மார் தெப்பம்

திருகோணமலை – ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைத்தோட்ட கடற்கரைப் பகுதியில் பௌத்த அடையாளங்களைக் கொண்ட தெப்பமொன்று புதன்கிழமை (14) அன்று  கரை ஒதுங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் தாவடியில் பதற்றம்

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது செவ்வாய்க்கிழமை (13) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இன்றைய நிலை என்ன…?

சர்வாதிகார ஆட்சிகள் படிப்படியாகச் சிதைந்து, பின்னர் திடீரென்று வீழ்ச்சியடைகின்றன, ஆனால் ஈரான் இன்னும் அந்த நிலையை அடையவில்லை. Authoritarian regimes die gradually then suddenly, but Iran is not there yet.
Jeremy Bowen
International editor.

மருத்து மனையில் உலகத் தரம் வாய்ந்த உணவுகள்

சுகாதார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி உட்பட இதற்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னைய அரசாங்கங்கள் வழங்கி வந்த ஓய்வூதியம், Vehicle Permit உள்ளிட்ட மக்கள் பணத்திலான அதீத சலுகைகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சலுகைகளை அதிகளவில் இழப்பது தற்போதைய ஆளுங்கட்சியும், அதன் 159 பாராளுமன்ற உறுப்பினர்களுமே. இருந்தபோதிலும், மக்கள் சேவைக்கு வரும் பிரதிநிதிகளுக்கு மக்கள் பணத்தில் இத்தகைய அதீத சலுகைகள் தேவையற்றவை என்பதில் தற்போதைய அரசாங்கம் உறுதியாக உள்ளது.இவ்வாறான சிறந்த திட்டங்கள் மூலம் மக்களின் பணம் மீண்டும் பொதுமக்களுக்கே நன்மைகளாகச் சென்றடைவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

டிரம்புக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை

ஈரானுக்குள் வெடித்துள்ள போராட்டம் குறித்து பேசியுள்ள டிரம்ப், தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ரெடி என்று கூறியிருந்தார். இந்த விஷயத்தை ஈரான் லேசில் எடுத்துக்கொள்ளவில்லை. நாங்கள் அமெரிக்காவுடன் சண்டை செய்ய தயார் என்று அறிவித்திருக்கிறது.