இராட்சத முதலை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு காத்தான்குடி வாவியில் மனிதர்களையும் ,விலங்குகள்,பறவைகளைப் பிடித்து உணவாக உட்கொண்டு நீண்ட நாட்களாக அட்டகாசம் காட்டி வந்த இராட்சத முதலை இன்று காலை இறந்த நிலையில் கரையொதுங்கியது.

அக்கரைப்பற்று விபத்தில் 12 பேர் காயம்

அக்கரைப்பற்றுவிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற சொகுசு பயணிகள் பேருந்து இன்று (25) காலை சோமாவதி சாலை டி-சந்திப்பில் கவிழ்ந்ததில் 12 பேர் காயமடைந்ததாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

ஆபத்தின் விளிம்பில் இருக்கும் பாடசாலைகள் குறித்து உடனடி நடவடிக்கை

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பல பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

இலங்கையில் வாகன விற்பனையில் மாற்றம்

நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக, வாகன விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார்.

டக்ளஸூக்கு 72 மணிநேர தடுப்புக்காவல்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கம்பஹா நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்றைய (27) நிலவரப்படி, உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,553 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

துருக்கியில் விமான விபத்து; லிபியாவின் இராணுவத் தலைவர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபியா ராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

ஜப்பானில் 67 வாகனங்கள் மோதி விபத்து: இருவர் பலி

ஜப்பானின் கிழக்குப் பகுதியில் உள்ள குன்மா மாகாணத்தில் உள்ள கான்-எட்சு விரைவுச் சாலையில் 67 வாகனங்கள் மோதிய பல விபத்துகள் நிகழ்ந்துள்ளன, இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 26 பேர் காயமடைந்துள்ளனர்

குவாத்தமாலா விபத்தில் 15 பேர் பலி; 19பேர் காயம்

மேற்கு குவாத்தமாலாவில் உள்ள இன்டர்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 19 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் பெரும்பான்மையாக அலவைட் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இமாம் அலி பின் அபி தாலிப் பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர், 18 பேர் காயமடைந்தனர்.