உ/த பரீட்சார்த்தியை பாம்பு தீண்டியது

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் க பொ த உயர்தர பரீட்சை எழுதிய மாணவர் ஒருவர் பாம்பு தீண்டிய நிலையில் வைத்தியரின் கண்காணிப்புடன் பரீட்சை எழுதினார். இச் சம்பவம் வியாழக்கிழமை (20) அன்று  இடம்பெற்றது.

அதிகாரிகளின் மெத்தனப் போக்கே வட மகாணத்தின் எழுந்து வருதலைத் தடுக்கின்றது

மத்திய அரசாங்கம் நாங்கள் கோரும் நிதியை விடுவிப்பதற்குத் தயாராக உள்ளது. ஆனால், வடக்கு மாகாண நிர்வாகத்திலுள்ள ஒரு சில செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கு விருப்பமின்றி, வெறும் சலுகைகளை அனுபவிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர்.

சிதறாமல் இருப்பதற்காக வேண்டா வெறுப்பில் ஆதரித்த மலையக கட்சிகள்

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான அரசு 2026ற்காக  சமர்ப்பித்த வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்க்கான வாக்கெடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை (14) அன்று நடைபெற்றது. அதற்கு ஆதரவாக 
160 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 118 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

சீனாவுக்கு உளவு பார்த்த பெண் மேயர் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை

பிலிப்பைன்சின் வடக்கு பிராந்தியமான பம்பன் நகர முன்னாள் மேயர் ஆலிஸ் குவோ (வயது 35). சீனாவை சேர்ந்த இவர் சட்ட விரோதமாக பிலிப்பைன்ஸ் குடியுரிமையை பெற்று அங்கு மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யாழ். இரும்பு தொழிலதிபரை கட்டுநாயக்கவில் ஏமாற்றியவர் சிக்கினார்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சொந்தமான இரும்புத் தொகுதியை வழங்குவதாக உறுதியளித்த ஒருவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரும்பு வாங்கும் தொழிலதிபரை விமான நிலைய வருகை முனையத்திற்கு வரவழைத்து,ரூ.1 மில்லியன் பணத்தைப் பெற்றுக் கொண்டு தப்பிச் சென்றார்.

அரசாங்கத்துக்கு எதிரான நுகேகொடை கூட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அனுரகுமா திசாநாயக்க அரசாங்கத்துக்கு எதிராக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகளால்  நுகேகொடையில் வௌ்ளிக்கிழமை (21) அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு கட்சி உறுப்பினர்கள்  வந்திருந்தனர்.

துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்முகத் தேர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக கோரப்பட்ட விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைத்து விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் படி, யாழ். பல்கலைக்கழக பதிவாளருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

நிந்தவூரில் சலசலப்பு: தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்வதற்கான அமர்வு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் வெள்ளிக்கிழமை (21) காலை இடம்பெற இருந்த நிலையில், போதிய அளவு கோரமின்மையால் சபை அமர்வை கூட்ட முடியாத நிலை ஏற்பட்டு தவிசாளர் தெரிவு பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

திருகோணமலை புத்தரும்; தலைத்தூக்கும் இனவாதமும்

திருகோணமலை கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் பௌத்த வணக்கத் தலத்தில், சட்ட அனுமதி இன்றி ஞாயிற்றுக்கிழமை(16) அன்று வைக்கப்பட்ட புத்தர் சிலை, அங்கு ஏற்பட்ட பதற்றமான நிலையை அடுத்து அன்றிரவே, அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டு, திங்கட்கிழமை (17) பிற்பகல் பிரதிஷ்டை செய்யப்பட்டு சமய வழிபாடுகள் நடைபெற்றன.