அவுஸ் பொன்டி யூதப் பண்டிகைத் தாக்குதலின் பின்னால் தந்தை, மகன்

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள பொன்டி கடற்கரையில் யூதக் கொண்டாட்டமொன்றின்போது 15 பேரைக் கொன்றதாகக் கூறப்படும் துப்பாக்கிதாரிகள் இருவரும் தந்தையொருவரும் மகனுமென பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

சிவப்பு பலூன்களை வெடித்து: பட்ஜெட் தோற்கடிப்பு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காலி மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் திங்கட்கிழமை (15)அன்று இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. காலி மாநகர சபையின் மேயர் சுனில் கமகே வரவு- செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்தார்.

CPC முன்னாள் தலைவர் கைது

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 800 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால், திங்கட்கிழமை (15) கைது செய்யப்பட்டார்.

நாவலப்பிட்டி கண்டி வீதி மீண்டும் திறப்பு

தித்வா சூறாவளியால் சேதமடைந்த நாவலப்பிட்டி-கண்டி பிரதான வீதி, 18 நாட்களுக்குப் பிறகு திங்கட்கிழமை (15) அன்று போக்குவரத்துக்கு திறக்கப்பட்டதாக வீதி மேம்பாட்டு ஆணையம் (RDA) தெரிவித்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் 21 பேர் நன்கொடை

மஸ்கெலியாவில் உள்ள 21 தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் அன்றாட ஊதியத்திலிருந்து தலா ரூ. 1,000 வீதம் அரசாங்கத்தின் நாட்டு கட்டுமான நிதிக்கு நன்கொடை அளித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா சம்பவத்துக்கு ஜனாதிபதி கண்டனம்

அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டை இலங்கை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

புறாத்தீவு தேசிய பூங்கா மூடப்பட்டது

கடல் கொந்தளிப்பு மற்றும் மோசமான வானிலை காரணமாக நிலாவெலி  புறா தீவு   தேசிய பூங்கா சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், தீவுக்குள் நுழைவதற்கான டிக்கெட்டுகளை வழங்குவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

யாழ்.,விமான நிலைய முனையத்துக்கு அடிக்கல்

யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் திங்கட்கிழமை (15) மதியம் இடம்பெற்றது.

200 தொன் நிவாரண பொருட்கள் கையளித்தது பாகிஸ்தான்

பாகிஸ்தானிலிருந்து 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் இலங்கை அரசாங்கத்திடம் திங்கட்கிழமை  (15) அன்று கையளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானி காரியாலயம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் விசேட பணிப்புரைகளைத் தொடர்ந்து, இலங்கைக்கு தொடர்ச்சியாக அனர்த்த நிவாரண பொருட்கள் மற்றும் சேவைகள் கையளிக்கப்பட்டு வருகிறது.  இதன் மூலம் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்புறவும் வலுவான இருதரப்பு உறவுகளும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் பருவச்சீட்டை டிசெம்பரும் பயன்படுத்தலாம்

பாடசாலை மாணவர்கள் நவம்பர் மாத பருவச்சீட்டை டிசெம்பர் மாதமும் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் வழங்கப்பட்ட பருவச்சீட்டை சமர்ப்பிப்பதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.