விடுமுறைக்கு விசேட ரயில் சேவைகள்

பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதியில் வரும் நீண்ட விடுமுறையைக் கருத்தில் கொண்டு கிறிஸ்துமஸ் அட்டவணையில் கூடுதல் ரயில்களைச் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே கண்காணிப்பாளர் (போக்குவரத்து) ஜி.டி.ஏ. சமரசிங்க கூறுகிறார்.

யாழ். மணிக்கூட்டு கோபுர மின் அலங்காரம்

நத்தார், புதுவருடப் பிறப்பை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட யாழ். மணிக்கூட்டு கோபுர மின் அலங்காரத் திறப்பு விழா  செவ்வாய்க்கிழமை (23) அன்று இரவு நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மின் அலங்காரத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தார்.

எச்சரிக்கை நீக்கப்பட்டாலும்: ஆபத்து குறையவில்லை

மண்சரிவு சிவப்பு அறிவிப்புகள் நீக்கப்பட்டாலும், அந்தப் பகுதிகளில் ஆபத்து இன்னும் குறையவில்லை என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீர்நிலைகளின் தன்மை மற்றும் ஆழம் மாற்றமடைந்துள்ளதால் எச்சரிக்கை

இந்த பண்டிகைக் காலத்தில் நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு சமூக மருத்துவ நிபுணர் சமித சிறிதுங்க இன்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பாடசாலைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை

 ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்த ஆய்வொன்றை கல்வி அமைச்சும் யுனிசெப் UNICEF நிறுவனமும் இணைந்து முன்னெடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மற்றொரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு

பங்களாதேஷில் மாணவர் தலைவரான மொட்டலேப் ஷிக்தர் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் தலையில் சுட்டதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை: முதலாளிமார் சம்மேளனம் அறிக்கை

தித்வா சூறாவளியினால் ஏற்பட்டுள்ள கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள சமூகங்கள் குறித்து இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. நாட்டின் மிகவும் சூழல் உணர்திறன் மிக்க மற்றும் இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாகக்கூடிய சில பிரதேசங்களிலேயே பெருந்தோட்டத்துறை செயற்பட்டு வருகின்றது. இச்சவாலான காலப்பகுதியில், தோட்டங்களில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கே நாம் முதன்மையான முன்னுரிமையை வழங்குகின்றோம்.

அர்ச்சுனா ராமநாதனுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட சு​யேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு  கோட்டை நீதவான்  செவ்வாய்க்கிழமை (23) அன்று பிடியாணை பிறப்பித்தார்.

இந்திய தயார்: பிரதமரிடம் ஜெய்சங்கர் தெரிவிப்பு

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து நாட்டின் மீட்பு செயல்முறை குறித்து விவாதிக்க இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை செவ்வாய்க்கிழமை (23) அன்று சந்தித்தார்.

பாடசாலை விடுமுறையில் திருத்தம்

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டு 2025 டிசெம்பர் 22 திங்கட் கிழமையுடனும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025 டிசெம்பர் 26 வெள்ளிக் கிழமையுடனும் நிறைவடைகின்றன.