சுமத்ரா தீவில் பெரும் பேரழிவு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சூறாவளியுடனான கடும் மழையால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக, சுமத்ரா தீவின் சில பகுதிகளுக்கு மீட்புப் பணியாளர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், அத்தியாவசிய பொருட்களையோ கொண்டு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்திலிருந்து உதவி

இலங்கை எதிர்கொள்ளும் பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவி வழங்குவதற்காக ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்திலிருந்து  நிவாரண பொருட்களுடனான விமானமொன்று செவ்வாய்க்கிழமை (02)  அன்று அதிகாலை   கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.

யாழ். அனர்த்த நிலைவரம் தொடர்பாக அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலைவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் செவ்வாய்க்கிழமை (02)  வெளியிட்டுள்ளார். அதன்படி? யாழ்ப்பாண மாவட்டத்தில் 16,621 குடும்பங்களை சேர்ந்த 52,892 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

முன்னாள் எம்.பி கைது

கோடிக்கணக்கான பெறுமதியுடைய சொத்துக்களை ஈட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்த   முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, செவ்வாய்க்கிழமை  (02) அன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை (02)  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

வழமைக்கு திரும்பிய ஹட்டன் – கொழும்பு வீதி

நாட்டின் சீரற்ற வானிலை காரனமாக பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன் – கொழும்பு வீதியில் காணப்பட்ட மண்மேடுகள் அகற்றப்பட்டுள்ளதுடன்  சீர் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஹட்டன் – கண்டி பஸ் போக்குவரத்தை தவிர, ஏனைய இடங்களுக்கான பஸ் பயணம் ஹட்டனிலிருந்து இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போலியானவர்கள் குறித்து கவனமாக இருங்கள்

வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சில நபர்கள் வர்த்தக நிலையங்களில் பணம் சேகரிப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதுடன்  இவ்வாறான நபர்கள் குறித்து மிக கவனமாக இருக்கும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறையிலிருந்து நுவரெலியாவுக்கு உதவிக்கரம்

நுவரெலியா மாவட்டத்தின் பேரிடரால்  பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் நிவாரணங்களை விநியோகிப்பதற்கு களுத்துறை மாவட்டத்தின் உள்ளூராட்சி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெரிய குழு செவ்வாய்க்கிழமை(02)அன்று வருகை தந்தது.

மழையால் 15,500 ஏக்கர் நெற்பயிர்கள் ​சேதம்

வடமத்திய மாகாணத்தில் பயிரிடப்பட்ட 15,500 ஏக்கர் நெற்பயிர்கள் கனமழையால் முற்றிலுமாக சேதமாகிவிட்டது வடமத்திய மாகாண விவசாய புத்திக அபேசிங்க தெரிவித்துள்ளார். சுமார் 8,750 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள செடி சேதமாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.

பயிர் சேதத்திற்கான இழப்பீட்டு செயல்முறை

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த திட்வா சூறாவளி மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு துரிதப்படுத்தப்பட்ட இழப்பீட்டு செயல்முறையை செயல்படுத்த கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், கட்டாய காப்பீடுடன் தொடர்பான பயிர்களான நெல், சோளம், வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் மற்றும் சோயாபீன் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடவும், இழப்பீடு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஈச்சலம்பட்டு மருத்துவமனையும் மூழ்கியது

மகாவலி நதி பெருக்கெடுத்ததால், வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பல கிராமங்கள் நீரில் மூழ்கின, அதே நேரத்தில் ஈச்சலம்பட்டு பிரதேச மருத்துவமனையும் முற்றிலுமாக நீரில் மூழ்கியது.