புதிய சிறைச்சாலையை நிர்மாணிக்க நடவடிக்கை

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைத்துக் கொள்வதற்கு வெலிசறை பகுதியில் புதிய சிறைச்சாலையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு தெரிவிக்கின்றது. சிறைச்சாலை குறித்து வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையர்களின் குடும்பங்களுக்கு 197 மில்லியன் ரூபாய் இழப்பீடு

கட்டாரில் பணியாற்றியபோது உயிரிழந்த இலங்கையர்களின் குடும்ப உறவினர்களுக்காக 2025ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 197,719,710.36 ரூபாயை  தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுக்கொடுத்துள்ளது. 

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நீடிப்பு

அரசவைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24) தொடர்கின்றது. தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் சாதகமான பதில்களை வழங்கவில்லை என அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 48 மணித்தியாலங்களின் பின்னரும் பணிப்பகிஷ்கரிப்பை மேலும் நீடிப்பதா என்பது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

5,000 பேர் பலி : ஈரானை நோக்கி விரையும் அமெரிக்க கப்பல்கள்

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 5,002 ஆக அதிகரித்துள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்ட மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. நிலைமை மோசமடைந்து வருவதை அடுத்து, அந்நாட்டை நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் படையெடுத்துள்ளன.

இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள பெரும் மாற்றம்

மக்களின் நுகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் சம்பா மற்றும் கீரி சம்பாவின் தேவை அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமான துஷார விக்ரமாராச்சி தெரிவித்தார்.

வவுனியாவில் பொலிஸாரை மோதி தள்ளிய லொறி சிக்கியது

வவுனியா ஈரட்டை, களுகுன்னமடுவ பகுதியில் சனிக்கிழமை (24 ) அன்று சமிக்ஞையை மீறி பயணித்த சிறிய லொறி ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் இருவரும் பின்தொடர்ந்து சென்றபோது லொறி சாரதி பொலிஸ் அதிகாரிகளை விபத்துக்குள்ளாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அசுர வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை விரைவில் 5,000 டொலர் நிலையை எட்டும், அதைத் தொடர்ந்து 5,187.79 டொலர் வரை உயர வாய்ப்புள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

யாழ். சுழிபுரத்தில் வெளியேறிய இராணுவம்

யாழ். – சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் நேற்றிரவு அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ள இராணுவத்தினர் சங்கானை படை முகாமுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் பணிநீக்கம்

பாராளுமன்றத்தின் பணியாளர் தொகுதி பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனம் தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து, ஜனவரி 23ஆம் திகதி முதல் பணிநீக்கம் அமலுக்கு வந்ததாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கல்லடி பாலத்திலிருந்து குதித்த யுவதி சடலமாக மீட்பு

ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பாலத்தில் பாய்ந்த யுவதி ஒருவர்சடலமாக மீட்கப்பட்டுள்ளார், இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (23) அன்று இரவு 8 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். தாளங்குடா சமூர்த்தி வங்கி வீதி பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க யுவதியே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. குறித்த யுவதியின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத ப‌ரிசோதனை‌க்காக வைக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்