நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை ஜனவரி 23ஆம் திகதியிலிருந்து மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
’’ஐக்கிய நாட்டு நிறுவனம் திறனற்றது’’ – டிரம்ப்
ஐக்கிய நாட்டு நிறுவனம் திறனற்றது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். நிறுவனம் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு உதவியாக இருக்கவில்லை என்று அவர் சொன்னார். ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் திறன் குறித்து தமக்குப் பெரிய நம்பிக்கை இருந்ததாகவும் ஆனால் நிறுவனம் ஒருபோதும் அதன் திறனை வெளிப்படுத்தவில்லை என்று அவர் கூறினார்.
உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்
எல்லை தாண்டிய மீனவர்களுக்கு விளக்கமறியல்
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு அருகில் வைத்து செவ்வாய்க்கிழமை (20) மாலை கைதான இந்திய மீனவர்கள் 7 பேரும் எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வளியின் தரம் குறைந்துள்ளது
900 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸுடன் ஒருவர் கைது
நிட்டம்புவ பகுதியில் சுமார் 900 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து 61 கிலோ 838 கிராம் எடையுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன் போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வண்டி ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்
மாலைதீவு விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்களுக்கு தடுப்புக்காவல்
இன்று முதல் ஆசிரியர்களுக்கான சம்பளம் உயர்வு
இந்த ஆண்டின் ஜனவரி 01ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்ட ஆசிரியர் சம்பளம் இன்று (20) வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின்படி, இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் கல்விச் சேவை உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கரிநாள் போராட்டத்தின் பயன்?
948 பெப்ரவரி 4ஆம் திகதி பிரித்தானிய காலணித்துவ ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரம் அனைத்தையும் சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் ஒப்படைத்த நாள். அந்தநாளில் இருந்து தமிழர்தாயகத்தில் தமிழ்த்தேசிய மக்களாகிய நாம் திட்டமிட்டு அடக்கப்பட்டு இனப்படுகொலைக்கு ஆளாகி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். என்ற கோசத்துடன் இவ்வருடத்தின் கரிநாள் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது வெற்றிகரமானதாக நடைபெறுமா இல்லையா என்பதனை போராட்ட முடிவிலேயே காணமுடியும்.



