39வது ஆண்டு நினைவேந்தல்…

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39வது ஆண்டு நினைவேந்தல் புதன்கிழமை (28) அன்று மகிழடித்தீவு சந்தியில் அமைந்துள்ள படுகொலை நினைவு தூபியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

யுத்த காலத்தில் மூடப்பட்ட வீதிகள் திறந்து வைக்க நடவடிக்கை

மன்னார், நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு மக்கள் பாவைனையின்றி காணப்பட்ட வீதி மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. 1983-1984 ஆண்டு காலப்பகுதி வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த குறித்த வீதி  நீண்ட காலமாக மக்கள் பயன்பாடு இன்றி மூடப்பட்டு காணப்பட்டது.

சிறுமியை வன்புணர்ந்த போதகருக்கு 10 ஆண்டு சிறை உறுதி

புத்தளம் மாவட்டம், கொட்டுகச்சியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பணிபுரியும் போதகர் ஒருவர், 15 வயது சிறுமியுடன் பழகி, பின்னர் கடவுளுக்கு சேவை செய்ய அழைத்த பின்னர் அவளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (29) அன்று உறுதி செய்தது.

நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்

சுதந்திர தின பேரணிக்கான முன்னாயத்த ஒத்திகை நடவடிக்கைகள் ஜனவரி 30, 31 மற்றும் பெப்ரவரி 01, 02 ஆகிய திகதிகளில் நடைபெறும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா குறிப்பிட்டுள்ளார்.  78 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

‘திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை’ என்கிறது IMF

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

அலைபேசியுடன் திசைமாற்றி பிடித்த சாரதிக்கு சிக்கல்

பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தை செலுத்திய தனியார் பேருந்து சாரதி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற மற்றொரு பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

உட்பட குழு மரணம்

இந்தியா, புனே மாவட்டத்தில் புதன்கிழமை (28)  காலை இடம்பெற்ற விமான விபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிராவின் துணை முதல்வருமான  அஜித் பவார் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.  விமானம் பாராமதியில் தரையிறங்க முயன்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது. மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிய இந்தியா, ஐரோப்பா

பெரும்பாலான தீர்வைகளை இல்லாமற் செய்யும், இரு வழி வர்த்தகத்தை ஊக்கப்படுத்துவதை இலக்காகக் கொண்ட, வளர்ச்சியடைந்து வரும் பூகோள வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில் ஐக்கி அமெரிக்காவைத் தங்கியிருப்பதை குறைக்கும் நீண்ட காலம் தாமதமானமொரு ஒப்பந்தமொன்றை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இன்று ஏற்படுத்தியுள்ளன.

காலம் கெட்டுக்கிடக்கிறது : பெற்றோர்களே உஷார்

பெற்றோருக்கு தங்கள் குழந்தைக்குத் தேவையான அன்பையும் ஆதரவையும் அளித்து வந்தாலும் ஒருசில மாணவர்கள், போதைப்பொருள் வலைக்குள் விழுந்து பாடசாலை பருவத்தை மட்டுமன்றி முழு வாழ்க்கையையும் சீர​ழித்துக்கொள்கின்றனர்.

புதிய அரசியலமைப்பு என்பது கானல் நீரா?

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

தற்போதைய அரசியலமைப்புக்குப் பதிலாக புதியதோர் அரசியலமைப்பை அறிமுகப்டுத்துவதென்பது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கால வாக்குறுதிகளில் முக்கியமானதொன்றாகும். ஆனால் அதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கப்டுவதாக தெரியவில்லை.