பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரிப்பதற்கான ஒப்பந்தம் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் வைத்து வெள்ளிக்கிழமை (30) காலை கைச்சாத்தானது .

The Formula
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக குடிவரவு கொள்கைகள் மற்றும் சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்க மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளன.போராட்டத்திற்கான முக்கிய காரணங்கள் – அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) மேற்கொண்டு வரும் தீவிரமான நாடு கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் பெரும் திரளாகப் போராடி வருகின்றனர்.

மன்னார், நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு மக்கள் பாவைனையின்றி காணப்பட்ட வீதி மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. 1983-1984 ஆண்டு காலப்பகுதி வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த குறித்த வீதி நீண்ட காலமாக மக்கள் பயன்பாடு இன்றி மூடப்பட்டு காணப்பட்டது.
புத்தளம் மாவட்டம், கொட்டுகச்சியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பணிபுரியும் போதகர் ஒருவர், 15 வயது சிறுமியுடன் பழகி, பின்னர் கடவுளுக்கு சேவை செய்ய அழைத்த பின்னர் அவளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (29) அன்று உறுதி செய்தது.
சுதந்திர தின பேரணிக்கான முன்னாயத்த ஒத்திகை நடவடிக்கைகள் ஜனவரி 30, 31 மற்றும் பெப்ரவரி 01, 02 ஆகிய திகதிகளில் நடைபெறும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா குறிப்பிட்டுள்ளார். 78 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.