’’சம்பளம் போதாது’’ என்ற முழக்கம் மீண்டும் எழக்கூடும்

அரசு, தனியார் மற்றும் தோட்ட ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் இறுதி முடிவு, ஒரு எளிய பட்ஜெட் வாக்குறுதியை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், தொழிலாளர் மற்றும் அரசுக்கு இடையிலான மறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட சமூக ஒப்பந்தமாகவும் விளக்கப்பட வேண்டிய ஒரு தருணமாக மாறியுள்ளது.

அமெரிக்காவை தாக்கும் பனிப்புயல்

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட கடும் பனிப்புயல் காரணமாக, நாடு முழுவதும் 84,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரத் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார விநியோகத்தைக் கண்காணிக்கும் ‘PowerOutage.com’ இணையதளத்தின் தரவுகளின்படி, பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வீதியை மீளத் திறக்க கோரி கையெழுத்து வேட்டை

புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களை இணைக்கும் பாரம்பரியமான எளுவன்குளம் மற்றும் மரிச்சிக்கட்டி இடையே செல்கின்ற புத்தளம்-மன்னார் (B-379) வீதியை மக்களின் பாவனைக்காக உடனடியாக மீளத் திறக்க வலியுறுத்தி ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கான ஒரு இலட்சம் கையொப்பங்களை திரட்டும் மாபெரும் கையெழுத்து வேட்டை வெள்ளிக்கிழமை (23) அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கனடா மீது 100% வரி?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடாமீது 100 சதவீதம் வரி விதிக்கப்போவதாய் மிரட்டியிருக்கிறார். சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டால் வரி உடனடியாக விதிக்கப்படும் என்று   டிரம்ப் மிரட்டல் விடுத்தார். சீனா, கனடாவுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்குதல் அதிகரிப்பு

ஜனவரி 19ஆம் திகதியிலிருந்து 48 மணி நேரத்திற்குள் சுறா தாக்குதலில் நால்வர் பாதிக்கப்பட்டனர். சிட்னி (Sydney) கடற்கரைகளில் மூன்று சம்பவங்கள் நடந்தன. பாதிக்கப்பட்டவர்களின் காயத்தைப் பார்க்கும்போது அவர்களைப் புல் (Bull) சுறா தாக்கியிருக்கக்கூடும் என்கின்றனர் நிபுணர்கள்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க தயார்: சஜித்

நமது நாட்டிற்கு புதிய அரசியலமைப்பொன்று தேவையாக காணப்படுகின்றது. இதனைச் செய்வதற்கான மக்கள் ஆணையுடன் கூடிய புதிய அரசாங்கம் காணப்படுவதால், சிவில் சமூகத்தின் பல்வேறு தரப்புகள் இதற்கான முன்முயற்சியை எடுக்க ஐக்கிய மக்கள் சக்திக்கும் அழைப்பு விடுத்தன.

“அடங்கிப் போகிற ஆளா நான்” – நடிகர் விஜய்

ஊழல் செய்யவே மாட்டேன். ஒரு பைசாவையும் தொட மாட்டேன். எனக்கு அதைத் தொட வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம்


(தோழர் ஜேம்ஸ்)

வார்த்தைப் போர், வர்த்தகப் போர், வானத்தில் போர், வரிப் போர் என்றாக உலகத்தின் சமாதானம் கேள்விக் குறியாகிப் போய் கொண்டிருக்கின்றது.

அண்மைய ஈரான் மீதான இஸ்ரேல் அமெரிக்காவின் அணுகு முறை இதன் உச்சமாக பார்க்கப்படுகின்றது.

இன்று பலத்த மழை வீழ்ச்சிக்கான சாத்தியம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

புதிய சிறைச்சாலையை நிர்மாணிக்க நடவடிக்கை

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைத்துக் கொள்வதற்கு வெலிசறை பகுதியில் புதிய சிறைச்சாலையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு தெரிவிக்கின்றது. சிறைச்சாலை குறித்து வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.