உலகில் வாழ வேண்டிய மனிதன்

இலங்கையை சீர்குலைத்த இயற்கையின் பேரிடர் அனர்த்தங்களை ஈடு செய்ய உலகின் மிகப் பிரபலமான உதைபந்தாட்ட வீரன் ” கிறிஸ்டியானோ ரொனால்டா ( Cristiano Ronaldo) பத்து ( 10)
மில்லியன் அமெ‌ரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் நன்றி தெரிவிப்பு

டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்குத் துரித நடவடிக்கை எடுத்தமைக்காக மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று திங்கட்கிழமை (08.12.2025) கடிதமொன்றைக் கையளித்தனர்.

யாழ்ப்பாணம்: சட்டவிரோத சொத்துக் குவித்தவரின் வீடு முற்றுகை

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவித்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் – பண்ணைப் பகுதியில் உள்ள வீட்டிலேயே நேற்று பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய இந்தச் சோதனை நடத்தப்பட்டது. (a)

புட்டினின் ‘பறக்கும் ஜனாதிபதி மாளிகை’ : அதிநவீன சொகுசு விமானம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், இலு​யுஷின் ஐஎல் – 96 – 300 பியூ என்ற அதிநவீன சொகுசு விமானத்தை பயன்​படுத்தி வரு​கிறார். இந்த விமானம், ‘பறக்​கும் ஜனாதிபதி மாளி​கை’ என்று அழைக்​கப்​படு​கிறது.

பாராளுமன்றத்தை கூட்டவும்: நாமல்

சமீபத்திய சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்க வாக்குறுதிகள் உண்மையான உதவியாக மாறுவதைக் கண்காணித்து, விவாதித்து, உறுதிசெய்ய, உடனடியாக பாளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்

பன்விலவில் பாடசாலைகளுக்கு சிக்கல்

பன்விலை நகரம், திங்கட்கிழமை (08) முதல்      வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் அமைப்பு முறையில்  ( System ) சிக்கல் இருப்பதாக கூறப்பட்டு இயங்காமலிருந்த மக்கள் வங்கி   முதல் இயங்குவதோடு தானியங்கி சேவையும் வழமைக்குத் திரும்பியுள்ளது.

நுவரெலியா தொடர்பில் ஜனாதிபதி அதிரடி கவனம்

நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் திங்கட்கிழமை (08) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது.

“மட்டக்களப்பிலிருந்து மலையகத்திற்கு நிவாரணப்பணி”

“மட்டக்களப்பிலிருந்து மலையகத்திற்கான நிவாரணப்பணி” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்களை மலையகத்திற்கு கொண்டு சேர்க்கும் பயணம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (07) அன்று முன்னெடுக்கப்பட்டது.

“நீர்த்தேக்கங்களால் இனி ஆபத்து இல்லை”

நாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

முட்டையின் விலை உயர்ந்தது

சந்தையில் ஒரு முட்டையின் சில்லறை விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு முட்டையின் விலை ரூ.40 முதல் 50 வரை விற்கப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.