திருகோணமலை புத்தரும்; தலைத்தூக்கும் இனவாதமும்

திருகோணமலை கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் பௌத்த வணக்கத் தலத்தில், சட்ட அனுமதி இன்றி ஞாயிற்றுக்கிழமை(16) அன்று வைக்கப்பட்ட புத்தர் சிலை, அங்கு ஏற்பட்ட பதற்றமான நிலையை அடுத்து அன்றிரவே, அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டு, திங்கட்கிழமை (17) பிற்பகல் பிரதிஷ்டை செய்யப்பட்டு சமய வழிபாடுகள் நடைபெற்றன.

ரணிலுக்கு எதிராக அதிக்குற்றச்சாட்டு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாக சட்ட மாஅதிபர் கோட்டை நீதிவான் நெத்தி குமாரவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

ஓட்டமாவடியை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ்

கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட  எம்.எஸ்.ஹலால்தீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடையில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நுகேகொடை ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் வெள்ளிக்கிழமை(21) அன்று நடைபெறவுள்ள எதிர்க்கட்சி பேரணிக்காக சிறப்பு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பாம்புகளிடமிருந்து எம்.பி.க்களைப் பாதுகாக்கவும்: சஜித்

பாராளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னாவிடம் இன்று(20​) வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண: சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடமையேற்பு

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஜி.எம்.எச்.புத்திக சிறிவர்தன, காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (20) அன்று சர்வமத வழிபாடுகளுடன் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

”எனது தகைமையை பேரணியில் விளக்குவேன்”

தனது கல்வித் தகுதிகள் குறித்து பரவி வரும் கூற்றுக்களை இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்று நிராகரித்தார், அனைத்து “அவதூறுகள் மற்றும் அவமானங்களும்” 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் SLPP பேரணியில் உரையாற்றப்படும் என்று வலியுறுத்தினார்.

1.5 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்

இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக கடத்திச் செல்வதற்கு இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.4.50 கோடி மதிப்புள்ள 1 கிலோ 500 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் எஸ்.பி பட்டினம்  அருகே வைத்து தனியார் பேருந்தில் இருந்து  செவ்வாய் (18) அன்று காலை சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமலை புத்தர்: “இரு தரப்புக்கும் தொடர்பே இல்லை”

“திருகோணமலைக் கடற்கரையில் புத்தர்சிலை வைக்கப்பட்ட விடயத்திலும்,பின்னர் சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்ட விடயத்திலும் இங்கு வாழும் தமிழ் மக்களுக்கோ,முஸ்லிம் மக்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என கல்யாண வன்ஸ திஸ்ஸ தேரர் கூறினார்.

”வடக்கு ,கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம்”

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும்  இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.