குல சாமியடா நீ…

(தோழர் ஜேம்ஸ்)

துப்பாக்கி எடுக்கவில்லை

துடுப்புடன் போனாய்

வெ(கொ)ல்லப் போகவில்லை

மீட்டிடப் போனாய்

தரையில் போகவில்லை

கரைசேர்க்க போனாய்

வெஞ்சினத்துடன் போவில்லை

வெள்ளத்திற்குள் போனாய்

மகனே எங்கே புதைந்தாய்…?

சமுத்திரம்தான் விழுங்கியதோ….?

துப்பாக்கியுடன் போய் இருந்தால்….?

மரணப் பெட்டியிற்குள் வருவாய் என்று

மனதை ஆற்றுப்படுத்தி இருப்பேன்

நீ துடுப்புடன்தான் போனாய்

துப்பாக்கியை தூர எறிந்துவிட்டு

காப்பாற்றி கரையேற்றி

கடமை முடிய வருவாய்…

காத்திருந்தேன்

பாற் சோறு உனக்கு ஊட்ட

நீ கரையேறாது…?

மக்களை கரையேற்றி

நீரில் கரைந்தது ஏனோ..?

சேற்றில் புதைந்தது தானோ…?

கரைக்கப்பட்டவன் நீ

துரத்தப்பட்டவன் அல்ல

விதைக்கப்படவன் நீ

புதைக்கப்பட்டவன் அல்ல.

உன் அருகில்

தமிழ் சகோதரனும்

புதைக்கப்பட்டிருப்பான்…?

அவன் கரம் கொடுப்பான்

உனக்கு

அதனால்

எனக்கு மட்டும் அல்ல

எங்களுக்கு மட்டும் அல்ல

எல்லோருக்கும்

குல சாமி ஆகிவிட்டாய்

இங்கு புத்தனும்… முருகனும்….

அல்லாவும்… யேசுவும்….

உன்னை விஞ்சும்

சாமி ஆகிவிடுவார்களோ…?

நீதான் ஈழத்து குல சாமியாடா!

மழை புயல் அனர்த்தங்களில் தம்முயிரை அர்பணித்த வீரர்களுக்கு சமர்பணம்.

(மீட்புப் பணியில் ஈடுபட்ட கடற்படை வீரர்கள் சிலர் மரணம் – செய்தி)

(Sri Lanka’s navy has confirmed that all five personnel who went missing during a flood-mitigation operation in Chundikkulam have died, as search teams recovered their bodies. Police said the sailors had been working earlier today to widen a waterway in the Chundikkulam area when they were swept away. – News)

அதற்கு தாயின் புலம்பலாக என் மனதில் உதித்த வரிகள் இவை)

வரைபடங்களும் மனிதர்களும் !

(Ravindran Pa)

//ட்றம்பின் ஆலோசகர்கள் 28 அம்ச சமாதான ஒப்பந்தத்தை உக்ரைன்-ரசியா இடையில் முன்வைத்திருக்கிறார்கள். போரில் வெற்றிக்கு அருகாக வந்திருக்கும் ரசியாவுக்கும் தோல்வியை தழுவும் உக்ரைனுக்கும் இடையிலான ஒப்பந்தம் சமச்சீரற்றதாகவே இருக்கும் என்ற யதார்த்தத்தைப் பயன்படுத்தி ட்றம்ப் தனது ஆட்டத்தை ஆடுகிறார்.

மறு அறிவிப்பு வரை திட்டமிடப்பட்ட ரயில் சேவை நேரங்கள்

மறு அறிவிப்பு வரை  இன்று திங்கட்கிழமை (01) முதல் எதிர்வரும் 5ஆம் திகதி வரை திட்டமிடப்பட்ட ரயில் சேவை நேரங்கள் அட்டவணையை  இலங்கை ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ளது.

“பொருட்களின் விலையை அதிகரித்தால் முறைப்பாடு செய்க”

நாட்டின் சீரற்ற வானிலையை தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தும் வர்த்தகர்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் மூலம் முறைப்பாடளிக்குமாறு  நுகர்வோர் விவகார அதிகார சபை வலியுறுத்தியுள்ளது. 

வட்டுவாகல் பாலம் கடும் சேதம் ; மாற்று வழியாக கேப்பாப்பிலவு வீதி

வட்டுவாகல் பாலம் கடுமையாக சேதமடைந்துள்ளதால், இப்பாதை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. எனவே விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணம் செய்பவர்கள் மாற்று வழியாக கேப்பாப்பிலவு வீதியை பயன்படுத்துமாறு பேரிடர் மேலாண்மை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

பண்ணையில் சிக்கியவர்கள் மீட்பு

முல்லைத்தீவு முத்தியங்காட்டு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, குமுளமுனை, நீத்தகை மற்றும் ஆனந்தபுரம் ஆகிய இடங்களில் இரண்டு நாட்களாக விவசாய நிலங்களில் சிக்கித் தவித்த ஏழு விவசாயிகளையும், ஒரு சிறுவனையும் முல்லைத்தீவு மீனவர்கள் மற்றும் இளைஞர்கள் குழு திங்கட்கிழமை (01) அன்று பாதுகாப்பாக மீட்டனர்.

களனி கங்கையின் நீர்மட்டம் 8.45 அடியாக உயர்வு

நாகல்கம் தெருவில் களனி கங்கையின் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 8.45 அடியாக வெள்ள நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

டித்வா புயல் தாக்கத்தினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்று மாலை 5 மணி வரையான காலப்பகுதி வரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 367 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசுத் தலைவர் தோழர்.அனுர குமார திசநாயகா அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை

“ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும் அறிவோம். முழு நாடும் பேரழிவிற்கு உட்படுத்தப்பட்ட முதல் அனுபவம் இது.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை- இலங்கை ஜனாதிபதி அனுர

“”ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும் அறிவோம். முழு நாடும் பேரழிவிற்கு உட்படுத்தப்பட்ட முதல் அனுபவம் இது.