அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக குடிவரவு கொள்கைகள் மற்றும் சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்க மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளன.போராட்டத்திற்கான முக்கிய காரணங்கள் – அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) மேற்கொண்டு வரும் தீவிரமான நாடு கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் பெரும் திரளாகப் போராடி வருகின்றனர்.

