திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது: ஜனாதிபதி

திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகின்றீர்கள்.இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள். இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. மீண்டும் பழைய இனவாத நாடகத்தை ஏற்படுத்த முடியாது .அதற்கு இடமும் கிடையாது என ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார்.

ரஷ்யாவுடன் வர்த்தகசெய்தால்…. 500 சதவீத கூடுதல் வரி விதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை

ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு 500 சதவீத மேலதிக வரியை விதிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

2025 ஆண்டு CEBயின் இலாபம் ரூ. 3.58 பில்லியனாக சரிவு

இலங்கை மின்சார வாரியம் (CEB) அதன் நிதி செயல்திறனில் குறிப்பிடத்தக்க சரிவை பதிவு விபரத்தை வௌயிட்டுள்ளது. அதன் சமீப நிதி அறிக்கைகளின் படி, 2025 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டிற்கான இலாபம் ரூ. 3.58 பில்லியன் கடுமையாகக் குறைந்துள்ளது.

பாராளுமன்ற ஓய்வூதிய (ரத்துசெய்யும்) சட்டமூலத்துக்கு அங்கிகாரம்

பாராளுமன்ற ஓய்வூதிய (ரத்துசெய்யும்) சட்டமூலத்தை ஒப்புதலுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

திருகோணமலை திஸ்ஸ தேரர் ரிட் மனுத்தாக்கல்

திருகோணமலையில் உள்ள சம்புத்தி ஜெயந்தி போதிராஜ விஹாரையின் தலைமை விஹாராதிபதியான கல்யாணவன்ச திஸ்ஸ தேரர், திருகோணமலையில் உள்ள சம்புத்தி ஜெயந்தி போதிராஜ விஹாரையில் உள்ள இரண்டு தேவாலயங்களை இடிக்க கடலோரப் பாதுகாப்பு  பணிப்பாளர் நாயகம் எடுத்த முடிவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

சர்வஜனபலய கட்சியின் உறுப்பினர் இடைநிறுத்தம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவடைந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, சீதாவக்க பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்கான தேர்தல், செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்றது.

புலிகளின் தலைவர்களும் போதைப்பொருள் விற்றனர்

விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் சிலர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில்  இன்று (18) நடைபெற்ற 2026ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

திருகோணமலை சம்பவம் தொடர்பில் நீங்கள் அறியாத உண்மைகள் சில !

(Shabeer Mohamed)

முதலாவதாக அனைவரும் அறிந்த ஒரு சில விடயங்கள் இருக்கின்றன.


திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ‘தஹம்/ ஞாயிறு பாடசாலை’ “மிஹிந்துபுர மஹிந்த வங்ச குனானுஸ்மர்ன” என்ற பாடசாலை பல வருடங்களுக்கு முன்பு காணப்பட்ட அதே இடத்தில் மீண்டும் அடிக்கல் நாட்டும் வைபவம் ஒன்று கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.09 என்ற சுப நேரத்தில் திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்த பல முக்கிய பௌத்த தேரர்கள் முன்னிலையில் நடைபெற்றது

படுகுழியில் தள்ளிவிடும் ஒன்லைன் கடன்

வாழ்க்கையில் நம் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் எதையும் செய்யும் ஒரு காரணி பணம். அது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால், பணப் பற்றாக்குறை இருக்கும்போது, ​​சமூகத்தில் பலர் வங்கி, நண்பர் அல்லது உறவினர்களிடம் கடன் வாங்குகின்றனர்.

சவுதியில் 42 இந்தியர் பலி

சவுதியில் பேருந்தும் டீசல் லாரியும் மோதி தீப்பிடித்த விபத்தில் 42 இந்தியர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.