இலங்கையின் நுகேகொடை அரசியல்

(தோழர் ஜேம்ஸ்)

“மொத்தத்தில் நாமலை ராஜபக்ச வை இளவரசனாக்கி தம்மை சட்டத்தின் பிடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வாய்பு ஏற்பட்டால் மீண்டும் அரசு சொகுசுகளை அனுபவிக்க துடிக்க பல பேர் கூடி வடம் இல்லாத தேரை இழுந்தது போல் அமைந்துவிட்டது இந்தக் கூட்டம்”


ஒரு மாதத்திற்கு முன்பு தேசிய மக்கள் சக்தி(NPP) அரசுக்கு எதிரான கூட்டம் என்றாக பெயரிட்டு கருக் கொண்டது இன்றைய நுகேகொடை கூட்டம். இதனை ஆரம்பித்தது சிறீலங்கா பொது சன பெரமுன(SLPP) என்ற மொட்டு கட்சி.

MASக்கு ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள்

உலகளாவிய ஆடை தொழில்நுட்பக் குழுமமான MAS ஹோல்டிங்ஸ், சமீபத்தில் நிறைவடைந்த 2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கும் நிகழ்வில், ஆடை மற்றும் ஜவுளித் துறைகளில் பல கௌரவங்களைப் பெற்று, மிகவும் பாராட்டப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்தது.

இன்று 100 மில்லி மீற்றர் மழை பெய்யும்

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  இதன்படி, மேல், சபரகமுவ மற்றும், தென் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். அத்துடன், நிலவும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதில் பிரதம நீதியரசர் நியமனம்

உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி  அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன இன்று முதல் 27ஆம் திகதி வரை வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவர் நாடு திரும்பும் வரை ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

கடுகன்னாவ மண்சரிவு : பலி எண்ணிக்கை அதிகரித்தது

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

உ/த பரீட்சார்த்தியை பாம்பு தீண்டியது

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் க பொ த உயர்தர பரீட்சை எழுதிய மாணவர் ஒருவர் பாம்பு தீண்டிய நிலையில் வைத்தியரின் கண்காணிப்புடன் பரீட்சை எழுதினார். இச் சம்பவம் வியாழக்கிழமை (20) அன்று  இடம்பெற்றது.

அதிகாரிகளின் மெத்தனப் போக்கே வட மகாணத்தின் எழுந்து வருதலைத் தடுக்கின்றது

மத்திய அரசாங்கம் நாங்கள் கோரும் நிதியை விடுவிப்பதற்குத் தயாராக உள்ளது. ஆனால், வடக்கு மாகாண நிர்வாகத்திலுள்ள ஒரு சில செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கு விருப்பமின்றி, வெறும் சலுகைகளை அனுபவிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர்.

சிதறாமல் இருப்பதற்காக வேண்டா வெறுப்பில் ஆதரித்த மலையக கட்சிகள்

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான அரசு 2026ற்காக  சமர்ப்பித்த வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்க்கான வாக்கெடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை (14) அன்று நடைபெற்றது. அதற்கு ஆதரவாக 
160 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 118 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

சீனாவுக்கு உளவு பார்த்த பெண் மேயர் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை

பிலிப்பைன்சின் வடக்கு பிராந்தியமான பம்பன் நகர முன்னாள் மேயர் ஆலிஸ் குவோ (வயது 35). சீனாவை சேர்ந்த இவர் சட்ட விரோதமாக பிலிப்பைன்ஸ் குடியுரிமையை பெற்று அங்கு மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.