தித்வா புயல் காரணமாக இலங்கையில் பாரிய மனிதநேய மற்றும் பொருளாதார அதிர்ச்சி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் மதிப்பின் பிரகாரம் நேரடி சேதங்களின் மதிப்பு 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (மொத்த தேசிய உற்பத்தியின் சுமார் 4%). இந்நிலையில் அவசர பொது நடவடிக்கைகள் அத்தியாவசியமானவையாகும். அவசர தங்குமிடங்கள், விவசாய மறுசீரமைப்புகள் மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை பழுதுபார்த்தல் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடும், அந்நியச் செலாவணியும் அவசியமாவதுடன், இலங்கையின் பெரும்பொருளாதார சூழ்நிலை நெருக்கடியாக காணப்படும் சூழலில், இந்த நிலை மேலும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.





