இலங்கையை சீர்குலைத்த இயற்கையின் பேரிடர் அனர்த்தங்களை ஈடு செய்ய உலகின் மிகப் பிரபலமான உதைபந்தாட்ட வீரன் ” கிறிஸ்டியானோ ரொனால்டா ( Cristiano Ronaldo) பத்து ( 10)
மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

The Formula
டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ–12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள், தமது மீட்பு நடவடிக்கைகளுக்குத் துரித நடவடிக்கை எடுத்தமைக்காக மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று திங்கட்கிழமை (08.12.2025) கடிதமொன்றைக் கையளித்தனர்.

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவித்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் – பண்ணைப் பகுதியில் உள்ள வீட்டிலேயே நேற்று பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய இந்தச் சோதனை நடத்தப்பட்டது. (a)
சமீபத்திய சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்க வாக்குறுதிகள் உண்மையான உதவியாக மாறுவதைக் கண்காணித்து, விவாதித்து, உறுதிசெய்ய, உடனடியாக பாளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்