ரணிலை சந்தித்த பின் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

நுகேகொடையில் நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் எதிர்ப்பு பேரணியானது, அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நுகேகொடை கூட்டம் எதிர்க்கட்சியினருக்கு கை கொடுக்குமா

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

சில எதிர்க்கட்சிகள் இம் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடத்தவிருக்கும் அரச எதிர்ப்பு கூட்டத்தின் நோக்கத்தை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

ஆப்கானிஸ்தானில் பசியால் வாடும் குடும்பங்கள்

ஆப்கானிஸ்தானில் 10 இல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகின்றன எனவும் கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அறிக்கையில், ஆப்கனின் பொருளாதார நிலை குறித்து சில தரவுகளை வெளியிட்டுள்ளது.

’திறமையாளர்களை அமெரிக்கா ஈர்ப்பது முக்கியம்’

எச் -1பி விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திடீர் திருப்பமாக உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மன்னாரில் போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

20 கிராம் மெத்தம் பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை தொடர்பான வழக்கில், பிரதிவாதியை குற்றவாளியாக இனங்கண்ட மன்னார்  மேல் நீதிமன்றம் ​அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

புதுடெல்லி கோரம்:

புதுடெல்லியின் செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடந்த கார்  குண்டுவெடிப்புச் சம்பவத்தின் கொடூரமான தாக்கம், மூன்றாவது நாளாகியும் நீடித்து வருகிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு சந்தையில் உள்ள வாயிலின் கூரையில் துண்டிக்கப்பட்ட கை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை உயர்வு

இலங்கையில் தங்கத்தின் விலை அதிரடியான  உயர்வைப் பதிவு செய்துள்ளது, இது உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் விலை 4,212 அமெரிக்க டாலர்களைத் தாண்டிய குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெறுகிறார் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று (13) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்தும் அரசு சேவையிலிருந்தும் ஓய்வு பெற்றார். ஒரு அறிக்கையை வெளியிட்டு, ரத்நாயக்க, 34 வருட அரச சேவைக்குப் பிறகு பதவி விலகுவதாக அறிவித்தார்.

இணையவழி கடன் : பல உயிர்களைப் பலி

அத்தனக்கல்ல  பிரதேச செயலகப் பிரிவின் வெலகெதர எனும் கிராமத்தில் ஹிமாயா செவ்வெந்தி என்ற இளம் பெண் இணையவழி கடன் மாபியாவில் சிக்கி, தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என அறியக்கிடைப்பதனால், இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வியாழக்கிழமை (13) அன்று  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ; ‘ஒன்றிரண்டு ஆண்டுகளே உள்ளன’

41ஆவது வயதில் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சாதனை ரீதியிலான தனது ஆறாவது உலகக் கிண்ணமே தனது கடைசி என கிறிஸ்டியானோ ரொனால்டோ செவ்வாய்க்கிழமை (11) தெரிவித்துள்ளார்.