வடக்கு மாகாணத்திற்கு பலத்த மழை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

அயலகத் தமிழர் தினவிழா 2026 சென்னையில்

அயலகத் தமிழர் தினம் 2026 ஜனவரி மாதம் 11,12 ஆம் திகதிகளில் சென்னை வர்த்தக மையம்,நந்தம்பாக்கம், சென்னையில் நடைபெற உள்ளது. நிகழ்வு பற்றி பர்மாவில் பிறந்து தாய்லாந்தில் வசிக்கும் தீபா ராணியின் மனப்பதிவுகள். .

போதைப்பொருள் விருந்து: 26 பேர் தெல்தெனியவில் கைது

சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விருந்து நிகழ்வில் பொலிஸார் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, நான்கு பெண்கள் உட்பட இருபத்தி ஆறு சந்தேக நபர்கள் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

அமைதி நோபல் பரிசு வென்ற நர்கெஸ் முகமதி கைது

2023 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற மனித உரிமைப் போராளி நர்கெஸ் முகமதியை, ஈரானிய பாதுகாப்புப் படையினர் நேற்று கைது செய்தனர்.

ஜனாதிபதியின் கவனத்துக்கு

அண்மையில் இடம்பெற்ற இயற்கை பேரழிவையடுத்து, உரிய நிவாரணங்களை வழங்குமாறு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுருத்தல் வழங்கியிருந்தார்.

தாழமுக்கங்கள் உருவாகும்

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காற்று வலுவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள், தாழமுக்கங்கள் உருவாகலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

பாராளுமன்றம் 18ஆம் திகதி கூடுகிறது

18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவிப்பை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன வெளியிட்டுள்ளார். நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், பேரிடரால் சேதமடைந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான கூடுதல் ஏற்பாடுகளை அங்கீகரிப்பதற்கும் அன்றைய தினம் துணை மதிப்பீடு அங்கீகரிக்கப்படும் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன

மறுகட்டமைப்புக்காக கிடைத்தை விதைகளை சரியாக விதைப்போம்

‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைப் பலரும் வழங்கிவருகின்றனர். ஒருசிலர் தங்களுடைய விஸ்தீரமான காணியை, பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு இலவசமாக வழங்க முன்வந்துள்ளனர்.

வடக்கு மாகாணத்திற்கு பலத்த மழை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

தாய்லாந்து பாராளுமன்றம் கலைப்பு

கம்போடியாவுடனான எல்லையில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக நீடித்த மோதல்களுக்குப் பிறகு தாய்லாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளது, 45 முதல் 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் திகதி அறிவிக்கப்படும்