காணி மீட்பு ஆர்ப்பாட்டம்

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் விவசாயிகள் தங்களது அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்டு விவசாய செய்கை பண்ணக் கூடிய வாய்ப்புகளை வழங்குமாறு திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை (29) அன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.