மதுரையை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி, கோவையில் தனியார் விடுதியில் தங்கி இருந்து ஒரு கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து வந்தார். மாணவிக்கும், கோவையில் ஆட்டோ மொபைல் நிறுவனம் நடத்தி வந்த வாலிபர் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் உருவாகி காதலாக மலர்ந்தது. சம்பவத்தன்று இரவு மாணவி, காதலனுடன் காரில் கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று பேசி கொண்டிருந்தார்.