கிரிந்த , நிதன்கலை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 18 உர மூட்டைகளில் அடைக்கப்பட்ட 350 கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு, ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடல் வழியாக போதைப் பொருள் கொண்டு வரப்பட்டதாக குற்ற விசாரணை பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதன் போது லொறி,கார் உட்பட ஆறு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.