வக்பு சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 7 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. மேலும், வக்பு வாரியங்கள், கவுன்சில்களில் புதிய நியமனங்களை மேற்கொள்ள கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. அடுத்த விசாரணை மே 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.