அரசமைப்பின் 34 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த ஜனாதிபதி பொது மன்னிப்புப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
சிறைகளில் உள்ள 61 கைதிகளுக்கு இந்த ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 33 கைதிகள் வெசாக் தினமான இன்று 30 ஆம் திகதி சிறைகளில் இருந்து உத்தியோகபூர்வமாக விடுதலை செய்யப்படவுள்ளனர் என சிறைச்சாலை திணைக்கள ஊடகப்பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.