கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பு!

நாளுக்கு நாள்… நொடிக்கு நொடி… பீதியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பல்வேறு நாடுகள் இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து முதல் நிவாரணம் பெறும் மருந்து வரை ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் ஜப்பான் கண்டுபிடிப்பு மருந்தான flu drug favipiravir (also known as Avigan) என்ற மருந்து கொரோனாவை கட்டுப்படுத்த உதவுவதாக சீனா தெரிவித்துள்ளது. இம்மருந்து சீனாவில் பலருக்கு கொடுக்கப் பட்டதாகவும் கொரோனா பாஸிடிவ் நோயாளிகளுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகம் சீன அரச செய்தி தெரிவித்துள்ளது,
இந்த மருந்தை உள்கொண்ட சீனாவில் உள்ள ஹூபெய் என்ற மாகாணத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் கடந்த செவ்வாய்க்கிழமை மட்டுமே ஒரே ஒருவருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

தற்போது ஜெர்மனியின் முன்னணி மருந்து ஆராய்ச்சி நிறுவனமான கியூர்வேக்கும்
கொரோனாவிற்கு எதிரான மருந்தை உருவாக்கியுள்ளது, மருந்தை கண்டுபிடித்த நிறுவனத்தை விலைக்கு வாங்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது, நிறுவனத்தை அமெரிக்கா வாங்கும் பட்சத்தில் மருந்தை வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யாமல் அமெரிக்க நாட்டு மக்களுக்கு
மட்டுமே என நிபந்தனைகளை விதித்து வாங்கவுள்ளது, எவ்வளவு பெரிய நாடு? எவ்வளவு பெரிய சுயநலமான நாட்டுத் தலைவர்?

இந்த நேரத்தில் அமெரிக்காவோடு கியுபா ஒரு சிறிய ஒப்பீடு.

கியூபாவில் பெரும் இயற்கைப் பேரிடர் வந்து மக்கள் கொத்து, கொத்தாக இறந்த நேரம்!

“உலக நாடுகளே! எங்கள் மக்களின் சாவைத் தடுத்து நிறுத்துங்கள்! மாத்திரை, மருந்துகள் தாருங்கள்; உங்கள் மருத்துவர்களை அனுப்பி உதவி செய்யுங்கள்”, எனப் பிடல் காஸ்ட்ரோ கெஞ்சினார்!

அமெரிக்காவுக்குப் பயந்து எந்த நாடுகளும் உதவி செய்யவில்லை.

பெரும் இழப்பிற்குப் பிறகு பிடல் காஸ்ட்ரோ ஒரு முடிவுக்கு வந்தார். மருத்துவக் கல்லூரிகள் ஏராளம் தொடங்கப் பட்டன. அதுவும் இலவசம் என்கிற நிலைக்கு வந்தன!

அமெரிக்காவில் சுமார் 420 பேருக்கு ஒரு மருத்துவர், ஐரோப்பாவில் 330 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலையில், கியூபாவில் 150 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற சாதனையைப் பிடல் உருவாக்கினார்.

உலகத்திலே தரமான மருத்துவம் என்கிற பெயரும் பெற்றது. அமெரிக்க மருத்துவ மாணவர்கள் கியூபா நாட்டிற்கு அதிகமாய் மருத்துவச் சுற்றுலா செல்ல தொடங்கினார்கள்.

இவ்வளவு மருத்துவப் புரட்சியைச் செய்த பிடல் காஸ்ட்ரோ உலக நாடுகளுக்கு ஓர் அறிவிப்பு செய்தார்!

உலக நாடுகளே!உங்கள் நாட்டில் பிரச்சினை என்றால் நாங்கள் மருந்து, மாத்திரைகள் அனுப்புகிறோம்; எங்கள் மருத்துவர்களும் இலவசமாக வந்து பணிபுரிவார்கள்”, என்று அறிவித்தார்.

அவ்வகையில் 95 நாடுகளுக்கு இதுவரை 2 இலட்சம் மருத்துவர்களைக் கியூபா அனுப்பியுள்ளது.

இன்றைக்கு ‘கொரோனா’ வந்த மனிதரை எப்படித் தனிமைப்படுத்தி வைக்கிறார்களோ, அப்படி 60 ஆண்டுகளாக இந்தக் கியூபாவை அமெரிக்கா தனிமைப் படுத்தி வைத்தி இருக்கிறது!

அவ்வளவு மன உளைச்சலையும் வெற்றிக்கு உரமாக்கி உயர்ந்த நாடு இந்தக் கியூபா!

இதோ! பிரிட்டன் அமெரிக்கா போன்ற நாடுகள் எவ்வளவோ கெடுதல் செய்தாலும், அந்த மக்களையும் காப்பாற்ற கியூபா தான் முன் வந்துள்ளது!

கப்பலில் இருந்து வரும் மேல் நாட்டவர்களே! கியூப மண்ணில் தைரியமாகக் காலூன்றி நடவுங்கள்!
நீங்கள் நலம் பெறுவீர்கள்!

பிடல் காஸ்ட்ரோ
கியூபா .