நாணய நிதியத்தால் எதிர்க்கட்சிகள் நெருக்கடியில்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

நாட்டின் அரசியல் நிலைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமாக சற்று திரும்பி வருவதாக தெரிகிறது. அதற்குக் காரணம் அவரது திறமை என்றும் கூறலாம். அதேவேளை அவரது சர்வாதிகார போக்கின் விளைவு என்றும் கூறலாம்.