மலையக மக்களின் பிரஜாவுரிமையும் பிரேமதாஸவும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

வரலாற்றில் நடைபெறும் அனைத்தையும் மக்கள் ஞாபகத்தில் வைத்திருப்பதில்லை. பெரும்பாலான விடயங்களை, பெரும்பாலானவர்கள் மறந்துவிடுகிறார்கள். இதனால், அரசியல்வாதிகள் மக்கள் முன் வந்து, நடந்ததை நடக்கவில்லை என்றும் நடக்காததை நடந்தது என்றும் கூறி அரசியல் இலாபம் அடைய முடிகிறது.