விமலும் கம்மன்பிலவும் மேன்மேலும் இனவாதத்தின் பக்கம் தள்ளப்படுவார்கள்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

நாடு எதிர்நோக்கி இருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி, அரசாங்கத்துக்குள் பிளவுகளை உருவாக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது. அதன் வெளிப்பாடாகவே, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள் என்றும் கருதலாம்.