வாழ விடு வாறை விடு (பகுதி 2)

அதற்கு எதிர் வினையாக பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் அரசின் கண்மூடித்தனமான தாக்குதல் அதற்கு ஆதரவான மேற்குல நிலைப்பாடு தளபாடம் கப்பல்களை அனுப்பிவைத்தல் என்பன பற்றி செய்திகளை பலரும் கணத்திற்கு கணம் அறிந்து கொண்டு இருப்பீர்கள்.
பொது மக்கள் மீதான தாக்குதல் இதனால் ஏற்பட்ட மரணங்கள் இரு தரப்பிலும் ஏற்புடையதல்ல கண்டனத்திற்குரியது இதில் ஒருதரப்பு மட்டும் பயங்கரவாதச் செயற்பாடாக சிழத்தரிப்பது சரியான பார்வை அல்ல.

பாலஸ்தீன மக்கள் தப்பி ஓட முடியாத படி பாதைகளை மூடி விநியோகங்களை நிறுத்தி பட்டினிச்சாவிற்குள் தள்ளும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை ஐநா கண்டனம் தெரிவிப்பதோடு நிறுத்தாமல் செயன்முறை ஊடு இதனைத் தடுத்தாக வேண்டும்.
உயிர்வாழ்வதற்காக ஓலம் எழுப்பும் மக்கள் பக்கம் நாம் நிற்போம் அதற்கான சமாதானங்களை ஏற்படுத்துவோம்…

இவை பற்றிய தொடர்ச்சியான பதிவை செய்வதற்கு இந்த பாலதீன நிலம் சம்மந்தமான வரலாற்றை ஆவணங்களில் இருந்து எடுத்து இத்துடன் இணைக்கின்றேன்.

இதற்கான ஆதாரங்களை கொடுப்பதற்கு நான் வரலாற்று ஆசிரியன் அல்ல வாசித்தவற்றை ஒருவகையில் இணைப்பாக தருகின்றேன்.

(மீண்டும் அடுத்த பதிவில்…..)

(இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம்…..
இது ஒரு சகோதர யுத்தம் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா?
இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்சனை

எப்பொழுது முடியும்? என்று கேள்வி கேட்டு அதற்கு விடை தேடிச் சென்றால்….

ஆபிரகாம் கனவில் வந்து, இந்த பிரச்சனை உருவாக காரணமாக இருந்த அந்த கடவுள்தான் எப்பொழுது முடியும்? என்று பதில் கூற வேண்டும்.!
யூதர்களுக்கும், அரேபியர்களுக்குமான யுத்தம், இன்று நேற்று தொடங்கியது அல்ல.!

இது இந்த நூற்றாண்டில் தோன்றியதும் அல்ல.!
இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றை கொண்டது.
கிட்டதட்ட இது ஒரு சகோதர யுத்தம் என்பதால், இதற்கு முடிவே கிடையாது என்றே நான் நினைக்கிறேன்!

உலகில் உள்ள முக்கியமான மூன்று பழமையான மதங்களின் புனிதத்தலங்கள் உள்ள புனித இடம் இஸ்ரேலில் உள்ள ஜெருசேலமாகும்.
இதனால் தான் இஸ்ரேல் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
உலகின் அதி ‘புத்திசாலி’களான யூதர்கள்தான் இன்றைய உலகின் முக்கிய மதங்களான, இஸ்லாம், கிறிஸ்துவம், யூதம், பகாய் ஆகிய நான்கு மதங்களுக்கு விதை போட்டவர்கள்!

ஆபிரகாமை தெரியுமா?

அவர் தான் இந்த நான்கு மதங்களுக்கும் பிதாமகன்.!

ஆபிரகாமை பற்றியக்கதைகள் யூதர்களின் புனித நூலான தோராவிலும், கிறிஸ்துவர்களின் பழைய ஏற்ப்பாட்டிலும், இஸ்லாமியர்களின் குரானிலும் உள்ளது.

இந்த பிதாமகன் ஆபிரகாமுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். முதல் மனைவியான சாரா வழியே பிள்ளை பிறக்காது.

அதனால் இன்னொரு திருமணம் செய்து கொண்டார் தெய்வ நம்பிக்கையின் அடிப்படையில். எகிப்தை பூர்விகமாகக் கொண்ட வேலைக்காரி ஆகார் என்பவரை திருமணம் முடித்துக் கொண்டார்.
அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறான். அவன் பெயர் இஸ்மாயில்.!
சாராவுக்கு தனக்கும் பிள்ளை வேண்டி கடவுளிடம் மன்றாடுகின்றாள். கடவுளும் மனமிறங்கி சாராவுக்கும் பிள்ளை வரத்தினை கொடுத்தார்.

கடைசியில் சாராவுக்கும் ஒரு பிள்ளை பிறந்தது. அதன் பெயர் ஈசாக் என்கிறார்கள்.

இதெல்லாம் ஆபிரகாமுக்கு கிடைக்கும் பொழுது அவர் 90 வயசை தாண்டி இருந்தார். இந்த வயதில் பிள்ளை உருவாகும் சாத்தியம் உண்டா என்று சாஸ்திரங்கள் கேள்விகளை கேட்பது இல்லை….?

சாராவிற்கு குழந்தை பிறந்த பின்பு வீட்டில் சக்களத்தி சண்டை வர ஆரம்பித்தது.

இதனால் வேலைக்கார மனைவியான ஆகார் கோபித்துக் கொண்டு தன் மகன் இஸ்மாயிலை தூக்கிக் கொண்டு எகிப்தை நோக்கி நடையைக் கட்டி விட்டார்.!

ஆபிரகாமின் இரண்டாவது வேலைக்கார மனைவியான ஆகாருக்கு பிறந்த மகனான இஸ்மாயிலின் வழி தோன்றல்களே அரேபியர்கள் என்றும்….
முதல் மனைவியான சாராவின் மகனான ஈசாக்கின் வழி வந்தவர்கள் யூதர்கள் எனவும் சொல்லப்படுகிறது.!

ஆக, இஸ்ரேலியர்களும் அதாவது யூதர்களும், பாலஸ்தீனர்களான அரேபியர்களும் அண்ணன் தம்பி என்கிற உறவைக்கொண்ட பங்காளிகள் என்று தானே கூற வேண்டும்.?

இருவருக்குமிடையே உடலளவில் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?
அரேபியர்களை போலவே யூதர்களும் சுன்னத் என்ற சடங்கை செய்யக்கூயவர்கள்தான்.

ஆபிரகாமின் கனவில் வந்த கடவுள் உன் பிள்ளைகளுக்கு சுன்னத் செய் என்று கூறினாராம்.

அதையே ஆபிரகாமின் மகன்களான ஈசாக் யூதர்களுக்கும் இஸ்மாயில் அரேபியர்களுக்கும் கொண்டு செல்ல, அதுவே காலப்போக்கில் யூத இஸ்லாமிய மத சடங்காகி விட்டது.!

ஆனால், யூதரான ஏசு கிறிஸ்துவை பின்பற்றி உருவான கிறித்தவத்தில் சுன்னத் இல்லை என்பதில் இருந்து ஆபிரகாமின் கட்டளையை கிறிஸ்தவர்கள் ஏற்கவில்லை என்று தெரிகிறது.!

ஈசாக்கின் வழி வந்தவர்கள் வாழ்ந்த பூமி தான் பண்டைய காலத்தில் கானான் தேசம் என்றும் பிறகு பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்ட பூமியாகும்.

இது காஸா, வெஸ்ட்பேங்க் மற்றும் ஜெருசேலத்தை உள்ளடக்கியதாகும்.
கி.பி.7ம் நூற்றாண்டில் தான் அரேபியர்கள் பாலஸ்தீனத்தை கைப்பற்றினார்கள். இங்கு தான் அல் அக்ஸா என்ற புகழ்மிக்க மசூதியை ஜெருசேலத்தில் கட்டி வைத்துள்ளார்கள்.

இங்கிருந்து தான் முகம்மது நபிகள் சுவர்க்கம் சென்றதாக சொல்கிறார்கள்.!
இதனால் மெக்காமதினாவை இஸ்லாமியர் தமது மூன்றாவது போற்றத்தக்க வழிபாட்டு தலம் இந்த அல் அக சா மசூதி என்று போற்றுகின்றனர்.

ஆனால் இங்கு தான் யூதர்களின் சூசாலமன் கோயில் இருந்தது! அதை இடித்துதான் அல் அக ஸா மசூதி கட்டப்பட்டது என்று யூதர்கள் கூறுகிறார்கள்.

இந்த அல் அகஸா மசூதி பகுதியில் உள்ள உடைந்து இருக்கும் மேற்கு சுவரில், பல நூற்றாண்டுகளாக யூதர்கள் தலையை மோதி கண்ணீருடன் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

ஒரு காலத்தில் பாலஸ்தீன பகுதியை உரோமானிய பேரரசு, உதுமானிய பேரரசு போன்ற பேரரசுகள் ஆண்டு வந்தன.

முதல் உலகப் போருக்குப் பின் பாலஸ்தீனம் பிரிட்டிஷ் அரசின் ஒரு காலனி பகுதியாக மாறி இருந்தது.

அந்த காலத்தை யூதர்கள் மிக சரியாக பயன்படுத்திக் கொண்டனர் அந்த காலத்தில் யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்ந்து வந்தனர்.
ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை. அதை உருவாக்க வேண்டும் என்று சூதியோடோர் ஹெர்ட்சு என்ற ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த யூதர் ஒருவர் ஓங்கி குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

இது தான் சியோனிசம்.

தனக்கென நாடில்லாமல் நாடோடியாக வாழ்ந்து கொண்டிருந்த யூதர்கள் , தாங்கள் வாழ்ந்த பகுதிகளில், தனி தாயகம் அமைக்க வேண்டுமென்று என்று தியோடர் ஹெர்ட்ஸ் எடுத்த சியோனிச சித்தாந்தம் தான்,
இஸ்ரேல் என்கிற நாடு உருவாக வழி வகுத்தது.!!

இவர் தலைமையில் உலகமெங்கும் சிதறிக்கிடந்த யூதர்கள் ஒருங்கிணைந்து, பாலஸ்தீன பகுதியில் யூதர்களை குடியேற வைக்க முடிவு செய்தனர்.

இதன்படி யூத சூசெல்வந்தர்கள். முதலில் பாலஸ்தீனத்தில் உள்ள இடங்களை அதிக விலை கொடுத்து வாங்கிஇ அதில் யூதர்களை படிப்படியாக குடியேற்றினார்கள்!!

(தொடரும்…)

(வாசித்ததில் இருந்து பிரதி செய்யப்பட்டது)