வேளாண் நிதிநிலை அறிக்கை: நல்லதொரு தொடக்கம்

இந்தியாவில் வேளாண் துறை தொடங்கப்பட்டு 140 ஆண்டுகளும், தமிழ்நாட்டில் 120 ஆண்டுகளும் ஆன சூழலில், தமிழ்நாடு அரசின் முதலாவது வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை என்பது விவசாயிகள் மட்டுமின்றி விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் வேளாண் ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், நீண்ட காலச் செயல்பாடுகள் பலவற்றைக் குறித்த அறிவிப்புகள், அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படவுள்ள முழுமையான நிதிநிலை அறிக்கைக்கான முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது.