புதிதாக முளைக்கும் மதுக்கடைகளும் நாட்டின் ‘குடி’களும்

தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களைக் குறிவைத்து, அடத்தாக திட்டங்களைத் திணிப்பதில் பெரும்பான்மை அரசாங்கம் கைதேர்ந்ததாகத் தன்னைக் காண்பித்து வருகின்றது. சனப்பரம்பலை சீர்குலைப்பதில் இருந்து, மக்களைப் பாதிக்கக்கூடிய திட்டங்கள் வரை, அடுக்கிக்கொண்டே போகலாம். அவ்வாறான பிரதேசங்களில், முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக, மக்கள் பெற்ற பயன்களைத் தேடினாலும் கிடைக்காது.