பாடசாலை மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் மொத்த அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வந்த அதிபரை தொடர்ந்து பணியாற்றும் நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் இடமாற்றம் செய்யப்பட்ட புதிய அதிபர் பாடசாலைக்கு வரக்கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள், கல்வி அமைச்சின் செயலாளருக்கு எதிராக பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மேலும், தற்போதைய அதிபரின் தலைமையில் பாடசாலையின் கல்வி தரம் உயர்ந்துள்ளதாகவும், மாணவர் ஒழுக்கம் மற்றும் கூடுதல் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக உரிய அதிகாரிகள் தலையிட்டு மாணவர்களின் நலனை முதன்மைப்படுத்தி உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.