இந்தியாவிற்கு கடனை திருப்பிக் கொடுத்தாயிற்று

இந்தியாவிடமிருந்து எவ்விதமான கோரிக்கையும் எழாத போதிலும், சில ஊடகங்கள் தவறான அறிக்கைகளை பிரசுரித்திருந்ததையடுத்து அதனை தெளிவுபடுத்தும் வகையில் இந்த அறிவிக்கை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் தொடர்ந்தும் இவ்வாறான கடன்களை பெற்றுக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வங்கி மேலும் அறிவித்திருந்தது.

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட 400 மில்லியன் டொலர்கள் கடனை மீளச் செலுத்துவதற்கு வழங்கியிருந்த கால எல்லையை நீடிப்பதற்கு இந்தியா தீர்மானிக்கவில்லை எனவும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பான உடன்படிக்கையை மீறியிருந்தமை காரணமாக, இந்த தீர்மானத்தை இந்தியா மேற்கொண்டிருந்ததாக இராஜதந்திர மூலங்களை மேற்கொள்காட்டி அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.