இலங்கை – இத்தாலி இடையே அரசியல் கூட்டம்

இதில் இலங்கை மற்றும் இத்தாலி இடையே அரசியல் ஆலோசனைப்  பொறிமுறையை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி, கலாசாரப் பரிமாற்றம், எரிசக்தி மாற்றம், பல்தரப்பு உறவுகள், விமானப் போக்குவரத்து, கடல்சார் ஒத்துழைப்புகள் மற்றும் விவசாயம் ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டன.