வெள்ளிக்கிழமை (06 திகதியிடப்பட்ட கேபிளில் கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்துக்கு பொறுப்பான ஜேய்ன் ஹொவெல், பூஷெர் கப்பலின் மாலுமிகளோ அல்லது டெனாவில் உயிர் தப்பிய 32 பேரோ ஈரானுக்கு நாடுகடத்தப்படக்கூடாதென இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை தடுத்து வைக்கப்பட்டவர்களை பிரசாரமாகப் பயன்படுத்தும் ஈரானிய முயற்சிகளை இலங்கை அதிகாரிகள் குறைக்க வேண்டுமெனவும் கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாலுமிகளை ஈரானுக்கு நாடுகடத்தும் எதுவிதத் திட்டமுமில்லை என இந்தியா மற்றும் இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதுவரிடம் ஹொவெல் கூறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் மாலுமிகளை ஈரானிய அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்ப ஊக்கமளிக்க ஏதாவது தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டதா என ஹொவெலை இஸ்ரேலியத் தூதுவர் வினவியுள்ளார்.
டெனாவில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களை நாடுகடத்துவதற்கு இலங்கையை உதவுமாறு ஈரான் கோரியதாக இலங்கையின் பிரதி ஊடக அமைச்சர் ஹன்சக விஜேமுனி றொய்ட்டர்ஸிடம் புதன்கிழமை (04) கூறியிருந்தார்.