காலி மாநகர சபையின் ஐந்து உறுப்பினர்கள் கைது

காலி மாநகர சபையின் ஐந்து உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை (30) சபை அமர்வில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சபை நடவடிக்கைகளின் போது ஏற்பட்ட குழப்பம் தொடர்பாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், ஒரு பெண் உறுப்பினர் உட்பட ஐந்து உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். சபை செயலாளர் மற்றும் பிற அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.