நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் குறித்த இடத்திற்கு வரவேண்டும் என கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் , வீதியை வழி மறித்ததால் அப் பகுதியூடாக போக்குவரத்தும் தடைப்பட்டது.
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த போது மக்கள் தமது பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் குறித்த பகுதிக்கு இனிமேல் குப்பை கொட்டும் வாகனங்கள் வந்தால் அந்த வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. என எச்சரிக்கை விடுத்தனர். இதன்போது தவிசாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
பின்னர் போராட்டக்காரர்கள் பேரணியாக சென்று ஆளுநர் செயலகத்திலும் மகஜர் ஒன்றை கையளித்தனர்.