கைது செய்யப்பட்டால் பிணை கோரி ராஜித மனு தாக்கல்

கிரிந்த மீன்வளத் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 20 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் தேடப்பட்டு வரும் முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன,  கொழும்பு பிரதான  நீதவான் முன்னிலையில் முன் பிணை மனுவை, திங்கட்கிழமை (14)  தாக்கல் செய்ய உள்ளார்.