சம்பா, கீரிசம்பா நெல் விலை அதிகரிப்பு

தொடர்ந்துவரும் போகங்களில் சம்பா மற்றும் கீரிசம்பா நெற்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் குறித்த நெல் வகைகளைக் கொள்வனவு செய்வதற்காக தற்போது காணப்படுகின்ற குறைந்தபட்ச விலையை அதிகரிப்பது பொருத்தமானதென கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட விலைத் தீர்மானக் குழுவால் விதந்துரைக்கப்பட்டுள்ளது.

அவ்விதந்துரைகளின் அடிப்படையில், உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தரநியமங்களுடன் கூடிய நாட்டரிசி நெல் கொள்வனவை தொடர்ந்தும் ஒரு கிலோ கிராமுக்கு 120  ரூபாயாகப் பேணுவதற்கும், சம்பா நெல் கொள்வனவை ஒரு கிலோ கிராமுக்கு 125 ரூபாவிலிருந்து 130  ரூபாயாகவும், கீரிசம்பா நெல் கொள்வனவை ஒரு கிலோ கிராம் 132 ரூபாவிலிருந்து 140  ரூபாயாகவும் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்  அமைச்சரவைக்குத் தெளிவுபடுத்தியதடன், அதற்காக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.