சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி

ஹோம்ஸ் நகரத்தின் இமாம் அலி பின் அபி தாலிப் பள்ளிவாசலில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த பள்ளிவாசல், சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் உள்ள வாடி அல்-தஹாப் சுற்றுப்புறத்தில், அலவைட் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இந்தத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குண்டுவெடிப்பு நேற்று (26) வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகையின் போது நடந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும், பள்ளிவாசலில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்ததாகவும், பள்ளிவாசலை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதாக சிரியாவின் உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.