சில பொருட்களின் இறக்குமதி வரி எகிறியது

இறக்குமதி செய்யப்படும் குறித்த பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள நிதியமைச்சு அவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த வரிகளுக்கே மீண்டும் 100% வரி விதித்துள்ளது.

உதாரணமாக, இறக்குமதி செய்யப்படும் சீஸ் மீது விதிக்கப்படும் மேலதிக கட்டணம் 100% ஆக அதிகரிக்கும். அதாவது1000 ரூபாயாக இருந்த இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீஸின் வரி இப்போது ரூ. 2000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

யோகட் உட்பட பால் உற்பத்திப் பொருட்களுக்கும் மேற்குறிப்பிட்ட வரியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஓட்டோக்களின் டயர்களது விலைகள் 50% உயர்த்தப்பட்டுள்ளன.

வளிபதனாக்கி, சலவை இயந்திரம், ரைஸ் குக்கர், மைக்ரோவேவ், குளிர்சாதனப் பெட்டி, அலைபேசிகளின் விலைகள் 100% உயர்ந்துள்ளதுடன், ஏனைய மின்சாதனங்கள் 15% உயர்ந்துள்ளன.

அப்பிள் மற்றும் திராட்சை பழங்கள் மீதான இறக்குமதி வரி ஒரு கிலோகிராமுக்கு 300 ரூபாயிலிருந்து 600 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சொக்லேட் மற்றும் கோகோ கொண்ட பிற உணவு தயாரிப்புகளுக்கு  200% மேலதிக வரியை  நிதி அமைச்சு விதித்துள்ளது.