தமிழருக்கு எதிரான கருத்துக்கு மத்திய இணை அமைச்சர் பகிரங்க மன்னிப்பு

பெங்களூர், இராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு தமிழர்களே காரணம் என அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையான நிலையில், இதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தன்னுடைய பேச்சு தொடர்பாக விளக்கமளித்துள்ள ஷோபா,

“கிருஷ்ணகிரியில் பயிற்சி பெற்ற பெங்களூர் உணவக குண்டுவெடிப்பில் தொடர்பு கொண்டவர்கள் குறித்து மட்டுமே எனது கருத்து இருந்தது. தமிழ்நாட்டில் யாரேனும் எனது கருத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.