தையிட்டி விவகாரம்; நீதிமன்றின் அதிரடி உத்தரவு

“ஒவ்வொருவரும் அமைதிக்கு பங்கம் விளைவிக்காத வகையில் செயற்பட வேண்டும். விகாரையின் முகப்பிலோ, பாதையிலேயோ தடைகளை ஏற்படுத்த கூடாது. விகாரை வழிபாட்டிற்கு வரும் மக்களுக்கோ, விகாரையில் நடைபெறும் உற்சவங்களுக்கோ , இடையூறு ஏற்படுத்த கூடாது” என நீதிமன்று கட்டளையாக்கியுள்ளது.

அதேவேளை திறந்தவர்களது உரித்து ஏதேனும் பாதிக்கப்பட்டு இருப்பின் , உரிய நீதிமன்றில் உரிய வழக்கொன்றை தாக்கல் செய்து , உரிய நிவாரணத்தை பெற்றுக்கொள்ள முடியம் எனவும் மன்று அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் குறித்த வழக்கு எதிர்வரும் 11ஆம் திகதி மன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என மன்று திகதியிட்டு உள்ளது