தோழரின் மறைவு

யாழ்ப்பாணம் இளவாலை பிரதேசத்தில் 1983,84,85,86ம் ஆண்டுகளில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் வேலைத் திட்டங்களில் பிரதான பாத்திரத்தை வகித்த தோழர் ரணிஸ், பின்னர் பிரான்ஸில் புலம் பெயர்ந்து வாழ்ந்த கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எம்மோடு இணைபிரியா தோழனாக செயலாற்றி வந்தார். தெளிவான அரசியல் சமூக சிந்தனையாளனாகவும் தீர்க்கமான செயற்பாட்டாளனாகவும் எம்முடன் எல்லா நெருக்கடியான காலகட்டத்திலும் நம்பிக்கையோடு பங்களித்த தோழன் ரணிஸின் இழப்பு நெஞ்சத்தால் ஏற்க முடியாததாக உள்ளது. இறுதி நித்திரையில் ஆழ்ந்து விட்ட தோழனுக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்திடுவோம்.

Leave a Reply