’நம்பகமான பங்காளியாக எப்போதும் இருப்போம்’ – இந்தியா

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் டொக்டர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் இன்று பிற்பகல் விரிவான மெய்நிகர் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையின் உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.