இது தொடர்பாக, 18 வயது இளைஞன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை தெரிவித்தது.
இந்தத் தாக்குதல் முயற்சியானது நேரடியாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினால் ஈர்க்கப்பட்டு திட்டமிடப்பட்டதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
எமது சிறந்த பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என அதன் பணிப்பாளர் காஷ் படேல் தெரிவித்துள்ளார்.