பொய் சொல்லி நூற்றுக்கணக்கில் இலவச விமானப் பயணம் செய்தவர்

33 வயது டால்லாஸ் பொகோர்னிக் (Dallas Pokornik) கனடாவின் டொரோண்டோ நகரில் கைது செய்யப்பட்டார்.

2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பொகோர்னிக் டொரோண்டோவில் ஒரு விமான நிறுவனத்தில் விமானச் சிப்பந்தியாகப் பணியாற்றினார்.

பின்னர் அவர் பொய்யான ஊழியர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி 3 விமான நிறுவனங்களில் விமானிகளுக்கும் விமானச் சிப்பந்திகளுக்கும் ஒதுக்கி வைக்கப்படும் விமானச் சீட்டுகளைப் பெற்றதாக நம்பப்படுகிறது.

அவ்வாறு 4 ஆண்டுகளுக்கு பொகோர்னிக் ஏமாற்றியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அவர் எந்த விமானங்களில் இலவசமாகச் சென்றார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. பொகோர்னிக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவில்லை