மன்னாரில் பொது முடக்கத்திற்கு அழைப்பு

மன்னாரில் ஞாயிற்றுக்கிழமை (28) அன்று 57 ஆவது நாளாக போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில் அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டம் முழுவதும் திங்கட்கிழமை(29) அன்று பொது முடக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.அனைத்து செயல்பாடுகளும் முழுமையாக நிறுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எமது போராட்டத்திற்குவலு சேர்க்கும் வகையில் பொது போக்குவரத்துகள் அனைத்தையும்நிறுத்தி,வர்த்தக நிலையங்களை மூடி மாவட்டத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்து எமது போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமை யாற்றுகின்றவர்கள் திங்கட்கிழமை(29) கடமைகளுக்கு செல்லாது எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் திங்கட்கிழமை (29) அன்று காலை 10 மணிக்கு இருந்து கண்டன பேரணி ஆரம்பமாகும்.குறித்த பேரணி மன்னார் பஜார் பகுதியை வந்தடையும்.பின்னர் அங்கு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்படும்.

குறித்த போராட்டம் மதியம் 1.30 மணி வரை முன்னெடுக்கப்படும். போராட்டத்தின்இறுதியில் எமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளிக்கப்படும்.

எனவே மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் எமது உரிமைக்கான போராட்டத்தில் மீனவர்கள், வர்த்தகர்கள், பொது போக்குவரத்துசேவையை முன்னெடுப்போம், உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும்கலந்து கொண்டு பூரண ஆதரவை வழங்க வேண்டும்.