யுவதியை நிர்வாணமாக 13 கி.மீ இழுத்துச் சென்ற கார்

புது டெல்லியில்  நேற்றைய தினம்  (02) அதிகாலை 3.30 மணியளவில் ‘அஞ்சலி சிங்‘ என்ற 20 வயதான யுவதியொருவர் , கஞ்சவாலா பகுதியில், ஸ்கூட்டரில் பயணித்துக் கொண்டிருந்த போது, மதுபோதையில் 5 பேர் பயணித்த காரொன்று  அவர் மீது மோதியுள்ளது.

 இதன்போது  யுவதியின் உடைகள் காரின் சக்கரம் ஒன்றில் சிக்கிய நிலையில் குறித்த காரானது  காரை நிறுத்துவதற்குப் பதிலாக, யுவதியின் உடலை 13 கிலோமீற்றர் வரை இழுத்துச் சென்றுள்ளதாகக்  கூறப்படுகிறது.

இந்நிலையில் இச்சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த அப் பகுதியில் கடை வைத்திருக்கும் நபர் ஒருவர் இது குறித்து உடனடியாகப்  பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து 4.40 மணியளவில் சுல்தான்புரி பகுதியில் நிர்வாண நிலையில் படுகாயங்களுக்குள்ளான யுவதியின் சடத்தை மீட்ட பொலிஸார், அக்காரின் இலக்கத்தை வைத்து  குறித்த ஐவரையும் கைது செய்தனர்.