சம்பந்தப்பட்ட வங்கியின் அடகுப் பிரிவில் பணிபுரிந்த சந்தேக நபர்கள், 24 கரட் தங்கம் போல் போலி தங்கப் பொருட்களை அடகு வைத்து பணத்தை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபர் ஏற்கனவே வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த மோசடியில் தொடர்புடைய பல வங்கி அதிகாரிகள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.