வீட்டிற்குள் புகுந்த நபர், மாநகர சபை உறுப்பினர் மீது தாக்குதல்

 கொள்ளையடிப்பதற்காக வீட்டிற்குள் நுழைந்த குறித்த நபர், வீட்டார் குழம்பிய நிலையில் யாளினி ராஜேந்திரனின் வலது கையை வெட்டி காயப்படுத்தியுள்ளதுடன், தடுக்க முயன்ற அவரது மகன் மீது  கூறிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளார். சந்தேக நபரை பிடிக்க முயன்ற அவரது  தந்தையின் தலையில்  ​​வெண்கல பூச்சாடியால்  தாக்கியுள்ளார்.

அத்துடன் வீட்டாரின் அலறல் சத்தம் கேட்டு, அவ்விடத்திற்கு வந்த அயலவர்கள் குறித்த நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.