நான்கு முதல் ஐந்து வயதுக்குட்பட்ட நன்கு வளர்ந்த ஆண் சிறுத்தை இது என்றும் ரந்தெனிகல வனவிலங்கு திணைக்களத்தின் பிரதான அதிகாரியும் கால்நடை வைத்தியரும் அகலங்க பினிடியா தெரிவித்தார்.
ஒரு பெரிய குழியில் விழுந்த பிறகு மீட்கப்பட்ட இந்த சிறுத்தையின் உறுப்புகள் சேதமடைந்துள்ளதா என்பதைப் பரிசோதிக்க பல மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும், மேலும் சிறுத்தைக்கு தேவையான சிகிச்சையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஹக்கல வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளினால் பெரும் முயற்சியுடன் மீட்கப்பட்ட இந்த சிறுத்தையை பின்னர், சிகிச்சைக்காக ரந்தெனிகல வனவிலங்கு கால்நடை பிரிவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.