4 வருடங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்ட இடுக்கி அணை

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இடுக்கி அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் முதற்கட்டமாக வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 

வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படலாம் என்றும் பெரியாறு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடுக்‍கி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்ததால் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்‍கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்‍கப்பட்டுள்ளது. 
  
இடுக்‍கி அணை திறக்‍கப்பட்டதையடுத்து இடுக்‍கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக விவசாய நிலங்கள், ரப்பர் தோட்டங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.