Clean and Green city Srilanka நாளை ஆரம்பம்

 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் வளர்ச்சியில் இளம் சந்ததியினரின் பங்களிப்பு, தலையீட்டை பெற்றுக்கொள்ளும் பொருட்டு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் எண்ணக்கருவுக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இளைஞர் விவகாரம்  மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன  இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

 இலங்கையின் சகல பிரதேச செயலகப்பிரிவுகளில் இருந்தும்  ஒவ்வொரு நகரங்களை தெரிவுசெய்து இந்தத் திட்டத்தை  செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இச்சிரமாதான வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு   இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் அவர்களின் தலைமையில்  நாளை (03) காலை திகதி 9 மணிக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பிரதான காரியாலயத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் மஹரகம நகரின் 5 இடங்களில் நகர தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.