எதிரி அல்லாத, எதிர்ப்பு இல்லாத எதிர்க்கட்சியா?

எதிர்கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரா சம்பந்தன் ஐயாவுக்கும் த.தே.கூ க்கும் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு அரசியல் புலத்தினுள் நுளைவோம். ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஜீ.ஜீ க்குப் பின் தொடக்கி வைக்கப்பட்ட அரசியல் தான் உணர்ச்சியரசியல், எதிர்ப்பரசியல் என்பன. நாம் தமிழர்கள் என்ற ஒற்றை அடிப்படைக் காரணியைக் கொண்டு நடத்தப்பட்ட அரசியல் விபச்சாரமே இவ்வரசியல்களின் மூலாதாரமாகும். இது தமிழீழப் பிரகடனத்தினூடாக புலிகள் வரை தொடர்ந்தது. புலிகளின் அழிவுடனும், பசி, துன்பம், போரின் அழிவுகளுடன் உணர்ச்சி அரசியல் நின்றுபிடிக்க முடியாது அழிய முயன்ற போதும் ஒருசிலரும், கட்சிகளும் எஞ்சியிருந்த உணர்ச்சியரசியலையும் எதிர்ப்பரசியலையும் காப்பாற்ற முயன்றனர். இதன் ஒரு வடிவம்தான் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுமாகும்.

(“எதிரி அல்லாத, எதிர்ப்பு இல்லாத எதிர்க்கட்சியா?” தொடர்ந்து வாசிக்க…)

டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன ? (பகுதி 2)

(மாதவன் சஞ்சயன்)

டக்ளஸ் கருணா இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவருமே தலைமையுடன் முரண்பட்டவர்கள். யாரை எதிர்த்து போராட வந்தார்களோ அவர்களிடமே பாதுகாப்பு தேடியவர்கள். போராட்டத்தில் இவர்களின் தலைமையை ஏற்று வந்தவர்களை களத்தில் பலிகொடுத்து பலி எடுத்தவர்களுடனே கைகுலுக்கி தம்மை பாதுகாத்து கொண்டவர்கள். தங்கள் இயலாமையால் எதிரியிடம் மண்டியிட்டு பதவி அரசியலுக்கு வந்தவர்கள். யாரை எதிரி என அடையாளம் காட்டி தம் தோழர்களை உறுப்பினர்களை களப்பலி ஆக்கினார்களோ அவர்களுக்கு ஊட்டி வளர்த்த ஈழக்கனவை தம்மை பாதுகாப்பதற்க்காக பலி கொடுத்தவர்கள். தாம் யதார்த்தத்தை உணர்ந்தது போல் தம் தோழர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் உணர்த்த தவறியவர்கள். இருக்கும் இடத்துக்கு விசுவாசமாக இருந்து தமது தேவைகளை பெற்றுக் கொண்டவர்கள். தாம் வளர்ந்த பாசறையை மறந்து புதுப் பரணி பாடியவர்கள்.

(“டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன ? (பகுதி 2)” தொடர்ந்து வாசிக்க…)

டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன?

(மாதவன் சஞ்சயன்)

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ராணுவ பொறுப்பாளராக இருந்த டக்ளஸ் அவரின் தனி நபர் முடிவு, செயல்பாடு, தனிநபர் வழிபாட்டு விருப்பு, அணுகுமுறை காரணமாக இயக்கத்துடன் முரண்பட்ட நிலையில் நடந்த சென்னை சூளைமேடு கொலை சம்பவம் அதனால் ஏற்பட்ட எம் ஜி ஆர் அரசின் அழுத்தம் அவரை இயக்கத்தில் இருந்து வெளியேற்றியது. கருணாவின் வெளியேற்றத்துக்கு பல காரணங்கள் இன்றுவரை இரு தரப்பாலும் அறிக்கைகள் பேட்டிகள் மறுப்புகள் என வந்து சிதம்பர சக்கரமாகவே எம்மை குழப்புகிறது.

(“டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

அரசியலமைப்பு பேரவை இன்று கூடும்

சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுகின்ற அரசியலமைப்பு பேரவை, இன்று 10ஆம் திகதி வியாழக்கிழமை கூடவுள்ளது என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றம் நியமனம் பெற்றதன் பின்னர் அரசியலமைப்பு பேரவை இன்றைய தினமே முதன்முறையாக கூடவிருக்கின்றது. புதிய நாடாளுமன்றம் கூடியிருந்தாலும் அரசியலமைப்பு பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் இதுவரையிலும் நியமிக்கப்படவில்லை. எனினும், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு அமைவாக அரசியலமைப்பு பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படாவிட்டாலும் தற்போது செயற்படுகின்ற அரசியலமைப்பு பேரவைக்கு கூடுவதற்கு அதிகாரங்கள் இருக்கின்றன. அதனடிப்படையில் சிவில் பிரதிநிகள் இன்றியே, அரசியலமைப்பு பேரவையின் இன்றைய கூட்டம் கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார். அரசியலமைப்பு பேரவையானது 10 உறுப்பினர்களை கொண்டிருக்கும். இதில், சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் அதிகார பூர்வமாக பங்கேற்பர். ஜனாதிபதி தனது பிரதிநிதியாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை நியமித்துள்ளார். அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, பிரதமரின் பிரதிநிதியாக செயற்படுவார். அமைச்சர் டப்ளியு. டி.ஜே. செனவிரத்ன, கடந்த நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

Nepali women raped by a Saudi official

Two veiled Nepali women, who told police they were raped by a Saudi official, sit in a vehicle outside Nepal’s embassy in New Delhi, India, September 9, 2015. Indian police are investigating accusations that a Saudi Arabian embassy official repeatedly raped the two Nepali maids at his home close to the capital, New Delhi, in a case that could reignite the debate over immunity granted to diplomats. The two women, aged 30 and 50, told police they were raped, assaulted, starved and held hostage over several months after leaving Nepal to work for the official.

எழுத்தாளர் நடேசனுடன் சந்திப்பு

அவுஸ்திரேலியாவில் வதியும் மிருகவைத்தியரும் எழுத்தாளருமான டொக்டர் நடேசன் கனடாவுக்கு வருகைதந்துள்ளார். சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள் முதலான துறைகளில் சில நூல்களையும் வரவாக்கியிருக்கும் நடேசனுடனான சந்திப்பு எதிர்வரும் 20 th September திகதி Sunday, மாலை 5.30 PM.மணிக்கு கனடாவில் 430 mayfair on the Green..,Mclivin Avenue , Scarborough Ontario நடைபெறும். இந்தக் கலந்துரையாடலில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர்களான தேவகாந்தன் என் கே மகாலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு
Sabesan – 4168011654
e mail uthayam12@gmail.com
புரட்டாசி 09, 2015

ஐநாவே அழுகிறது கதறுகிறது கலங்குகிறது!

(இளங்குமரன்)

நாங்கள் யாரையும் கொல்வோம். அல்பிரெட் துரையப்பா முதற்கொண்டு மகேஸ்வரி வேலாயுதம்வரை துரோகிகள் என்று நூற்றுக் கணக்கானோரைக் கொன்றோம். பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி அதிபர்கள், கல்லூரி மாணவர்கள், நீதிபதிகள், அரசாங்க அதிபர்கள், மேயர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், சமூக சேவகர்களைக் கொன்றோம். அரச ஆதரவாளர்கள், இலங்கை இராணுவம் இந்திய இராணுவம், பொலிசாருடன் உறவுகளைப் பேணியவர்களைக் கொன்றோம். அயல்நாட்டில் தலைவரைக் கொன்றோம், அவருடன் அப்பாவிகளைக் கொன்றோம். சரணடைந்த படையினர் பொலிசாரைக் கொன்றோம். அரசியல்வாதிகள், மாற்றுக் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள், ஏன் சொந்த இயக்க உறுப்பினர்களையும் கொன்றோம். எங்கள் சிறைப்பிடிக்கப்பட்டு எங்கள் சித்திரவதை முகாம்களில் இருந்தவர்களையெல்லாம் நாம் கொன்றோம்.

(“ஐநாவே அழுகிறது கதறுகிறது கலங்குகிறது!” தொடர்ந்து வாசிக்க…)

பாருங்க!…..பாருங்க!!….பாருங்க!!!…. – இதுக்கு பேருதானா அரசியல் …………………………..?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்தும் தமிழன் நம்புறான் பாருங்க!
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழன் வோட்டு போடுறான் பாருங்க!!
டக்ளஸ் தேவானந்தாவும் தொடர்ந்து தேர்தலில் வென்று மந்திரியாகிறார் பாருங்க!!!
போதைவஸ்து கடத்தல்காரனைக் கூட ஆயர் இராயப்பு ஜோசேப்புவும் கத்தோலிக்க குருமாரும் ஆதரிக்கிறார்கள் பாருங்க!!!!
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என இன்னமும் சில தமிழர்கள் சொல்லுறாங்கள் பாருங்க!!!!!
பச்சைப் பயங்கரவாதி எழிலனின்; மனைவி அனந்தி கூட மனித உரிமை பற்றி பேசுகிறா பாருங்க!!!!!!
இதுக்கு பேருதானா அரசியல்.?

அமிர் பின் பிரபாகரன்? சம்மந்தர் முன் சர்வதேசம்!

(மாதவன் சஞ்சயன்)

1977ல் ஸ்ரீலங்கா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டது. அமிர்தலிங்கம் பாசையில் சொல்வதானால் அது ஒரு அரசியல் விபத்து. 1970ல் வந்த பாராளுமன்றத்துக்கு 1975ல் தேர்தல் நடத்தாது 1977வரை நீட்டி மக்களை வாட்டி வதைத்த சிறிமா அரசை சிங்கள மக்கள் 8 க்குள் அடக்கினர். அன்று சுதந்திர கட்சி வெறும் 8 ஆசனங்கள் பெற்று பாராளுமன்றத்தில் 3ம் நிலைக்கு தள்ளப்பட்டது. ஜே ஆர் மிகப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, தமிழ் ஈழத்துக்கு ஆணை கேட்டு 18 ஆசனங்கள் மட்டும் பெற்ற த.வி.கூட்டணி எதிர்கட்சியாக மாறியது தான், 1948ல் சுதந்திரம் பெற்ற இலங்கை 1972ல் ஸ்ரீலங்கா என பெயர் மாற்றம் பெற்றபின் எழுதப்பட்ட புதிய அத்தியாயம் ஆகும். அதே அரசியல் விபத்து 2015ல் ஏற்பட்டிருப்பது வரலாறு மீண்டும் திரும்புகிறதா என்ற எண்ணக்கருவை எல்லோர் மத்தியிலும் விதைக்கிறது.

(“அமிர் பின் பிரபாகரன்? சம்மந்தர் முன் சர்வதேசம்!” தொடர்ந்து வாசிக்க…)

இப்படிப் போகின்றது விக்கி, சுரேஷ், கஜேன் கூட்டமைப்பு

சிங்களத்தின் ‘அடி கழுவி – தழுவி’, வடக்கில் நடக்கிறது மாபெரும் தமிழினத் துரோகச்சதி !!!
மாண்புமிகு முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களையும், முதலமைச்சருக்கு ஆதரவாக செயல்படும் கௌரவ அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களையும், பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு வெளியேறுமாறு கடந்த மூன்று நாள்களாக ‘சம்பந்தன் – சுமந்திரன் – மாவை’ கூட்டுக்கும்பல், இருவருக்கும் கடும் ‘பிரஸர்’ கொடுத்துக்கொண்டிருக்கின்றது! சோற்றில் உப்புபோட்டுச் சாப்பிடும் சமூகமாகவிருந்தால் வெகுண்டெழுந்து நல்லூர் ஆலய முன்றலில் ஒன்றுகூடி எதிர்ப்பை காட்டுங்கள் !!!