திலீபனுக்கு அஞ்சலி: கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

இதன்போது சபையின் ஆரம்பத்தில் தியாக தீபம் திலீபனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் வைத்து, கடந்த 23ஆம் திகதியன்று, யாழ். மாநகர சபை உறுப்பினர் ரஜீவ்காந்ம், யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை மற்றும் ஏற்றப்பட்ட தீபத்தை பொலிஸார்; காலால் தட்டிவிட்டமை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

சபையில் நடைபெற்ற தியாகி திலீபனின் அஞ்சலி நிகழ்வில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.