முன்னாள் ஆளுநரின் மனைவிக்கு சொந்தமான ஹோட்டலை இடிக்க உத்தரவு

முன்னாள் வடமத்திய மாகாண ஆளுநர் மஹீபால ஹேரத்தின் மனைவி திருமதி அஜந்தா ரூபசரி ஹேரத்துக்குச் சொந்தமான ஹோட்டல், பெரிமியன்குளம் குள காப்புப் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, அதை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.