மோசமான வானிலை : 56 பேர் பலி – 21 பேர் மாயம்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக கடந்த 72 மணித்தியாலங்களில் 46 பேர் மரணித்துள்ளனர். அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி முதல் இதுவரை ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.  மேலும், 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.