“வீட்டுக்குள் ஜெனரேட்டர்களை வைக்க வேண்டாம்”

கல்முனையில் நடந்த சம்பவம். தொடர்ச்சியான மின்சாரமின்மை காரணமாக ஜெனரேட்டரை பயன்படுத்திக்கொண்டு தூங்கியபோது, காலையில் மனைவி மரணித்துக்காணப்பட்டதோடு, கணவன் மயங்கிய நிலையில் ICU வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடைக்கப்பட்ட பிரதேசத்தினுள் ஜெனரேட்டர் உபயோகம் மூலம் காபன் மொனொக்சைட் அதிகரிப்பின் காரணமாக இது ஏற்படுவதாக துறைசார்ந்தோர் கூறுகின்றனர். எனவே, மூடிய பிரதேசத்தில் அல்லது வீட்டுக்குள் ஜெனரேட்டர்களை பாவித்துக்கொண்டு தூங்க வேண்டாம்.