’’திஸ்ஸ விகாரையை இனவாதமாக்க முயற்சி’’

திஸ்ஸ விகாரை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி இனவாத பிரச்சினைகளை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2025.11.28 ஆம் திகதியன்று பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.