மாத்தளையின் ஆன்மீகச் செழுமையில் ஊட்டம் பெற்றவரும், மலையக இலக்கியத்தின் எரிநட்சத்திரமுமான மாத்தளை வடிவேலன் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நோர்த் மாத்தளை வைத்தியசாலை சந்தியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (12) பிற்பகல் நடைபெறவுள்ளதுடன் தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு மாத்தளை மந்தண்டாவலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.